YouVersion Logo
Search Icon

தானியேல் 8:19-21

தானியேல் 8:19-21 TRV

அதன்பின்பு அவர் என்னிடம், “பிற்காலத்தில் இறைவனின் கடுங்கோபத்தின் நாட்களில் என்ன நிகழப் போகின்றதென்பதை நான் சொல்லப் போகின்றேன். ஏனெனில் அந்தத் தரிசனம் நியமிக்கப்பட்ட முடிவு காலத்தைப் பற்றியது” என்றார். “நீ கண்ட இரண்டு கொம்புகளுடைய செம்மறியாட்டுக்கடா மேதிய, பெர்சிய நாட்டு அரசர்களைக் குறிக்கின்றது. அந்த சருமம் நிறைந்த வெள்ளாட்டுக்கடா, கிரேக்க அரசனாகும். அதன் கண்களுக்கிடையில் இருந்த பெரிய கொம்பு முதலாவது அரசனாகும்.