மாறாக, பரலோகத்தின் ஆண்டவருக்கு எதிராக நீர் உம்மை உயர்த்தினீர். அவருடைய வீட்டுக்குரிய கிண்ணங்களைக் கொண்டுவரச் செய்து, நீரும், உமது உயர்குடி மக்களும், உமது மனைவிமாரும், மறுமனைவிமாரும் அதில் திராட்சைரசம் அருந்தினீர்கள். பார்க்கவோ, கேட்கவோ, விளங்கிக்கொள்ளவோ முடியாதவையான தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் தெய்வங்களை நீர் புகழ்ந்தீர். ஆனால் உமது உயிர்மூச்சையும் பாதைகள் அனைத்தையும் தமது கையில் வைத்திருக்கும் இறைவனை நீர் மேன்மைப்படுத்தவில்லை.