தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

            
          
முயற்சி செய்யாமல் தோல்வியடைய முடியுமா?
என் அப்பா சொல்லும் ஒரு கதையுடன் இன்றைய செய்தியை தொடங்க விரும்புகிறேன்:
ஒரு காலத்தில், ஒரு மனிதன் ஒரு பெரிய பாறைக்கு அருகில் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கடவுள் அவனிடம் தெளிவாகப் பேசுவதைக் கேட்டான்: "நீ இந்த பாறையை இரவு பகலாகத் தள்ளுவாயா?" என்று.
இறைவனிடமிருந்து இப்படி ஒரு நேரடியான மற்றும் அசாதாரணமான வேலையைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்த அந்த மனிதன், வேலையைத் தொடங்கினான். பாறை நகர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன், இரவு பகலாக தன் முழு பலத்துடன் பாறையைத் தள்ளினான்.
அவனுடைய அக்கம் பக்கத்தினர் இந்த விசித்திரமான காட்சியைக் கண்டனர். ஆரம்பத்தில் அவன் ஏன் வீணாக பாறையைத் தள்ளுகிறான் என்று அப்பாவியாக விசாரித்தவர்கள், பிறகு, "நீ ஏன் இன்னும் தள்ளிக்கொண்டிருக்கிறாய்? பாறை ஒரு அங்குலம் கூட நகரவில்லையே. இதனால் என்ன பயன்?" என்று கேலி செய்யத் தொடங்கினர்.
படிப்படியாக, விரக்தி அவனுக்குள் நுழைந்தது. அந்த மனிதன் கடவுளிடம் கதறினான், "ஏன் எனக்கு இப்படி ஒரு அர்த்தமற்ற வேலையைக் கொடுத்தாய்? ஏன் பாறை நகரவில்லை?" என்று.
கடவுள் பதிலளித்தார், "பாறையை நகர்த்தும்படி நான் உன்னிடம் கேட்கவில்லை; அதைத் தள்ளும்படிதான் கேட்டேன். என் நோக்கம் பாறையை நகர்த்துவது அல்ல, உன்னுடைய பலத்தை அதிகரிப்பதுதான். நீ எவ்வளவு பலசாலியாகிவிட்டாய் என்று பார்!"
இந்தக் கதை, தாலந்துகளின் உவமையை (மத்தேயு 25:14-30, TAOVBSI) எனக்கு நினைவூட்டுகிறது.
ஏனெனில், அந்தக் கதையில், எஜமானன் தன் ஊழியர்களிடம் திரும்பி வரும்போது, அவர்களின் செயல்களின் பயன்களை (அல்லது அதன் குறைபாட்டை) வைத்து அவர் செயல்படவில்லை. இல்லை, அவர் அவர்களின் உண்மைத்தன்மையைப் பாராட்டுகிறார் மற்றும் சோம்பேறித்தனத்தை கண்டிக்கிறார். (மத்தேயு 25:21 மற்றும் 26 TAOVBSI).
அவர் விளைவுகளைப் பற்றி கவனம் செலுத்தவில்லை, மாறாக அவர்களின் செயல்கள் வெளிப்படுத்தும் அவர்களின் இருதயத்தின் மனப்பான்மையைத்தான் கவனிக்கிறார்.
வெளியேற்றப்பட்ட ஊழியன் தோல்வியடையவில்லை; ஏனென்றால் அவன் சிறிதும் கூட முயற்சி செய்யவில்லை. தன் எஜமானனுக்காக வங்கிக்குச் சென்று பணத்தை முதலீடு செய்யும் மிகவும் எளிமையான ஒரு காரியத்தைச் செய்யக் கூட அவன் தயாராக இல்லை.
ஆண்டவர் உன் செயல்திறனை அல்ல, உன் இருதயத்தை விரும்புகிறார்.
“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” - 2 நாளாகமம் 16:9
நீங்கள் ஒரு பாறையைத் தள்ளிக்கொண்டிருப்பது போல உணர்கிறீர்களா? ஆனால் உங்கள் "பாறை" இன்னும் நகரவில்லையா? நினைவில் கொள்ளுங்கள், ஆண்டவர் உங்கள் உண்மைத்தன்மையைக் காண்கிறார்!
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net
 
 செயலியை பெறவும்
செயலியை பெறவும்
