திட்ட விவரம்

கிருபையின் கீதம்மாதிரி

கிருபையின் கீதம்

5 ல் 5 நாள்

குயின்ஸ் ஸ்டேடியம் பாடலான "வீ வில் ராக் யூ" என்பது பெரும்பாலான மக்கள் அறிந்ததே. உலகக் கோப்பைகள் முதல் சூப்பர் பவுல்ஸ் வரை, இது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஊக்கப்படுத்தி இருக்கிறது.

ஆனால் மக்கள் அதை விரும்புவார்கள் என்று ராணி நினைக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதனால்தான் அவர்கள் அதை தங்கள் ஆல்பத்தின் பி-பக்கத்தில் சேர்த்தார்கள், அங்குதான் அனைத்து பாடல்களையும் தரவரிசையில் எதிர்பார்க்கப்படாமல் வைக்கப்பட்டது. இன்று நான் உங்களுக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் அவற்றைத் தவறவிடக் கூடாது என்று"பேராச்சரியம் மீண்டேன் நான்" பாடலில் இருந்து சில வரிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பி-பக்கத்திலிருந்து ஒரு வகையான கிருபையாக எடுத்து கொள்ளுங்கள்

ஆம், என் சரீரமும் உள்ளமும் செயலிழந்து

மரண வாழ்வு முடிவடையும் போது

நான் திரைக்குள் களிகூறுதலோடு

சமாதானமான வாழ்வைப் பெறுவேன்.

இந்த வார்த்தைகளை அறிந்திருக்கிறீர்களா? சிறந்த வெற்றிக்கான கவர்ந்திழுக்கும் பாடல் வரிகளால் ஆனது அல்ல. ஆனால் பகிர்ந்துகொள்ளும் வாக்குறுதி, வாழ்க்கையில் எதையும் சந்திக்கும். உங்களுக்காக அதை விளக்குகிறேன்:

இயேசு உங்கள் வாழ்விற்கு வெற்றியைக் கொண்டுவராத சூழ்நிலை இல்லை!

இந்த வாழ்க்கை உங்கள் மீது எதை எறிந்தாலும், எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்போது, தேவபிரசன்னத்தில் நீங்கள் பாதுகாப்பாகவும், நேசிப்பவர்களாகவும், குணமடைந்து, முழுமையாக, மகிழ்ச்சியும் சமாதானமும் நிறைந்தவராக இருப்பீர்கள் என்ற உறுதியை நீங்கள் எப்போதும் விசுவாசிக்க முடியும்.

இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, சாவை ஜெயித்து இதைத்தான் உங்களுக்காக பாதுகாத்தார் - அவர் உங்களுக்கு நிறைவான வாழ்க்கையை பெற்று தந்தார். இரட்சிப்புக்காக இயேசுவை விசுவாசிக்கும்போது, வாழ்க்கையில் மரணமும் இறுதியான முடிவைக் கொண்டிருக்காது என்ற வாக்குதத்தத்தை பெற்று கொள்ள முடியும்.

பில்லி கிரஹாம் இப்படியாக சொல்கிறார்:

"இயேசு கிறிஸ்து தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நமக்காக பரலோகத்தின் கதவைத் திறந்ததால், விசுவாசிகளுக்கு கல்லறைக்கு அப்பால் நம்பிக்கை உண்டாயிருக்கிறது."

முடிவில்லாத, உடைக்கப்படாத வாழ்க்கைக்கான கதவு திறந்திருக்கிறது, ஏனென்றால் இயேசு அதை முதலில் கடந்து சென்றார். அவர் மரணத்தை ஜெயித்தார், அவரில், உங்களாலும் முடியும்! அதனால்தான் புனித வெள்ளி - மற்றும் உயிர்த்தெழுதல் ஞாயிறு - மிகவும் மகிழ்ச்சியான கொண்டாட்டம்!

ஆனால் இது தப்பியோடுவது போல் தெரியும்... 2கொரிந்தியர் 4:16-18ல் பவுல் பரலோகத்தில் கவனம் செலுத்துவதை குறித்து என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள், ஆகவே நீங்கள் பூமியில் இவ்வளவு உபத்திரவப்பட வேண்டியதில்லை:

“ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை. எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். ஆனால் காணாதது நித்தியமானது. ”

இந்த வாக்குத்தத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்கிறீர்களா?

பரலோகத்தின் நம்பிக்கை இன்று நீங்கள் மேற்கொள்ளும் பரலோகபயணத்திற்கு உங்களை பலப்படுத்துகிறது. இந்த உலகம் உங்கள் மீது எறியும் எதுவும், தேவன் உங்களுக்காகத் ஆயத்தமாக வைத்திருக்கும் வீட்டைப் பறிக்க முடியாது என்பதை நினைப்பூட்டுகிறது - மேலும் தேவன் உங்களை உருவாக்கிய நபராக, உங்களை வடிவமைக்க இந்த உலகில் உபத்திரவத்தை பயன்படுத்துகிறவராக இருக்கிறார்.

உங்களுக்கு பெலனும், உபத்திரவத்திற்கான நோக்கமும், காத்திருப்பில் மகிழ்ச்சியும் இன்றைக்கு உண்டாயிருக்கிறது. ஆகவே மனதை இழக்க வேண்டாம், சோர்ந்து போகவேண்டாம், ஏனெனில் இயேசு ஏற்கனவே ஜெயித்துவிட்டார்!

வாழ்த்துக்கள்,

- நிக் ஹால்

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

கிருபையின் கீதம்

இந்த கிருபையின் பக்தி கீதத்தின் மூலம் கடவுள் உங்கள் மீதான அன்பின் ஆழத்தைக் கண்டறியவும். சுவிசேஷகர் நிக் ஹால், உங்கள் மீது பாடப்பட்ட கடவுளின் கிருபையின் கீதத்தில் சேர உங்களை அழைக்கும் சக்திவாய்ந்த 5 நாள் பக்தி மூலம் உங்கள...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக PULSE Outreachக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://anthemofgrace.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்