தேவனுடைய நட்பை அனுபவித்தல்மாதிரி

நட்புறவின் மறுவாய்ப்பு
எப்போதும் நாம் தேவனுடைய நட்புடன் இணைந்து செயல்படும் விதத்திலேயே நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.
கர்த்தர் மனுஷனை சிருஷ்டித்த போதே, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஒரு பொறுப்பை கொடுத்திருந்தார். "நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதை கீழ்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்து பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துகளையும் ஆண்டுகொள்ளுங்கள்" என்று கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தார் (ஆதியாகமம் 1:28). இந்த உலகத்தின் சுவாசிக்க ஆரம்பித்து சில மணி நேரங்களே ஆன ஒருவருக்கு, இந்த பொறுப்பு ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல!
ஆனால், அவர்கள் தேவனோடு தடையில்லாமல் உறவுகொள்வதற்கு ஏதுவாக, கர்த்தர் பகலின் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவும்படி வருவார் (ஆதியாகமம் 3:8). தோட்டத்தை விருத்தியடையச் செய்யவும், ஆளுகையில் பெருகவும் தேவையான பெலனையும், ஊக்கத்தையும் தேவனுடைய உறவிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்று காண்கிறோம்.
எதிர்பாராத விதமாக, பாவம் மனிதனுக்குள் வந்ததினால், அவர்கள் தேவனோடு கூடியதான உறவை இழந்து போனார்கள். அன்றிலிருந்து இன்று வரை மனிதகுலம், அவருடைய உறவின் துணை இல்லாமல் இந்த பூமியை ஆளுவதற்கு முயற்சி செய்துகொண்டே இருக்கிறது.
தேவனுடைய நட்புறவிலிருந்து பெரும் காரியங்களை சாதிப்பதற்காக படைக்கப்பட்ட மனிதனின் தோல்வியை, கர்த்தர் நிரந்தரமாக்கவில்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசு, தம்முடைய உறவுகளைப் பார்த்து, “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" என்று சொல்லி, இன்னொரு புதிய பொறுப்பை கொடுத்தார் (மத்தேயு 28:19-20).
இந்த பூமியில் நாம் கனி கொடுப்பதற்கும், தேவனுடைய அன்பையும், மகிமையையும் இந்த உலகமெங்கும் பறைசாற்றுவதற்கும், இன்னொரு கட்டளையை கர்த்தர் நமக்கு மறுவாய்ப்பாக தந்திருக்கிறார். தேவனுடைய நட்புறவோடு இணைந்து இந்த தோட்டத்தை விருத்தியாக்க, இது மறுவாய்ப்பு. ஆனால் இம்முறை, நம்முடைய பெலவீனங்களாலும், தோல்விகளாலும் தேவனுடைய நட்புறவு முறிந்து போகாது.
நமக்கு அவசியமான ஒன்றை கர்த்தர் நமக்கு உறுதியளிக்கிறார்: சகல நாட்களிலும் அவர் நம்முடனே கூட இருக்கிறார்.
அவர் பிரசன்னத்தை நமக்கு தருகிறார்
நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அதை உங்களை எந்தளவில் பாதித்தது?
இந்த திட்டத்தைப் பற்றி

நீரூற்றுக்காக ஏங்கும் வனாந்திரம் போல உங்கள் ஆத்துமாவில் உணர்கிறீர்களா? இந்த வனாந்திர காலம், தேவனுடைய பிரசன்னத்தை நீங்கள் இன்னும் நெருக்கமாகவும், அதிகாரபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பளித்து, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் காலமாகவும் இருக்கக்கூடும். இந்த வனாந்திர அனுபவத்தில், உங்கள் வாழ்க்கை எள்ளவும் நகராதது போல உங்களுக்கு ஒருவேளை தோன்றலாம். ஆனால் இந்த காலம் உங்களுடைய வாழ்வில் வீணாக்கப்பட்ட காலம் அல்ல என்பதை நீங்கள் உணரும்படி இந்த தியானம் உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் எப்படிப்பட்ட கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், நீங்கள் தனியாக பயணிக்கவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள். காரணம், உங்கள் தேவனாகிய கர்த்தர், ஜீவனளிப்பவராகவும், ஆறுதலளிப்பவராகவும், ஒரு நல்ல நண்பனாகவும் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறார்.
More
இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த WaterBrook Multnomahஅமைப்பிற்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://www.faitheurycho.com/ என்ற வலைத்தளத்தை அணுகவும்