21 நாள் உபவாசம்மாதிரி

இந்த உபவாச நாட்களை நீட்டிப்பதை குறித்தோ, அல்லது இந்த நாட்களுக்கு பின்னர் அவ்வப்போது உபவாசிப்பதை வழக்கமாக கொள்ளவோ ஏதேனும் யோசித்துள்ளீர்களா? இந்த வேதப்பகுதியில் ஜனங்களின் யோசனையும் அப்படிப்பட்டதே. தேவன் கொடுத்த பண்டிகை மற்றும் உபவாச நாட்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமா என்கிற ஜனங்களின் எண்ணத்திற்கு தேவன் தமது தாசனாகிய சகாரியவை கொண்டு பதிலளிக்கிறார். மோசேயின் காலம் முதற்கொண்டே, பண்டிகைகளையும் உபவாசங்களையும் ஆசாரிப்பதற்கு தேவன் நாட்களை தம் ஜனத்திற்கு வேறுபிரித்து கொடுத்திருந்தார். பண்டிகை, உபவாசம் இவை இரண்டுமே தேவனோடு நம்மை கிட்டி சேர்ப்பதற்காக கொடுக்கப்பட்டது தான். தேவனை கிட்டி சேர்வதே உங்கள் நோக்கமானால், பண்டிகைகள் உபவாசங்கள் இவை இரண்டுமே பரிசுத்த தன்மை கொண்டதாகவே உங்களுக்கு இருக்கும். தேவன் இந்த உபவாச கால அனுபவத்தைக் குறித்து உங்கள் உள்ளங்களோடு பேச இடம்கொடுங்கள். இந்த உபவாச நாட்களில் மென்மையான குணங்களால் நிரப்பட்டு இருக்கிறரீர்களா, பிறரிடம் நடந்து கொள்ளும் முறையில் முன்னேற்றத்தை இந்த உபவாசம் கொடுத்திருக்கிறதா என்பதைப்பற்றி சிந்திக்க உதவி கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
More
We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.