திட்ட விவரம்
நேசம்மாதிரி
![நேசம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F34075%2F1280x720.jpg&w=3840&q=75)
விஷேசித்தவர்!
ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? உன்னதப்பாட்டு 5:9 ஜனங்கள் நம்மை பார்த்துக்கேட்பார்கள் உன் நேசர் எதினால்விஷேசித்தவர் ஏனென்றால் என் நேசர் பநினாயிரங்களில்சிறந்தவர்,பாவியாயிருந்தஎன்னை நேசித்தவர்.என் வெளி அழகை பார்க்காமல் என் உள்ளான மனிதனை பார்த்து என்னை சொந்த இரத்தத்தால்மீட்டவர், சோர்ந்து போன என்னைபெலப் படுத்தியவர். எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுவிலகாதவர். என்னை பாதுகாக்க அவர் தூங்குவதுமில்லை,உறங்குவதைமில்லை.எனக்காக இன்றும் பிதாவின் வலது பக்கத்துல உட்கார்ந்துபரிந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.எனக்கென்றுநித்திய ஜீவனை வாக்குப் பண்ணி பரத்திலே ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகிறார்.அவருடைய வருகையில் என்னைஎடுத்துக் கொள்வார்.நித்திய நித்தியமாக நான் என் நேசரோடு வாழ்வேன்.
நேசராகிய இயேசுவுக்கேமகிமை !!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![நேசம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F34075%2F1280x720.jpg&w=3840&q=75)
நம்முடைய ஆத்தும மணவாளனாகிய நேசருடைய நேசத்தைக் குறித்து பார்க்கிறோம். கர்த்தருடைய நேசம்,அவருடைய நாமம்,கர்த்தருடைய சத்தம், நம்முடைய ஆத்தும நேசர் மற்ற நேசரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்தவர் என்று வாசிக்கப்போகிறோம். ...
More
https://indiarevivalministries.org/