திட்ட விவரம்

உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 5 நாள்

அன்பு திசை திருப்பப் படுகிறது

தூய அகஸ்டின் உடன் நாமும் "அன்பே இறுதி இலக்கு" என்று சொல்ல முடியும். அவரோடு கூட "இறைவன் அருளுகின்ற நன்மையானவைகள் திசை திருப்பப் படுகின்றன" என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். நன்மைகள் திசை திருப்பப் படுவதே தீமையின் வரைமுறை ஆகிறது. அன்பும் அவ்வாறே திருப்பப் பட்டு சுயத்தைச் சார்ந்ததாகிறது. நாம் பாவிகள் ஆதலால் இயல்பாகவே சுயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம். அத்தோடு நாம் சுயத்தை மட்டுமே மை ய ப் படுத்துகிற உலகில் வாழ்கிறோம். நாம் சுயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறபடியால் அவரது அன்பை இழந்து விடுகிறோம்.

பயத்தாலோ, பெருமையாலோ, அவிசுவாசத்தாலோ நம் கண்களுக்கு முன் இருப்பவற்றை இழக்க நாம் விரும்புவதில்லை. வாழ்க்கையின் அனைத்து பரிணாமங்களையும் கடந்து முடிவை எட்டிய நிலையில் குறி தவறி விட்டோம் என்று அறியவும் விரும்புவதில்லை.

நூற்றாண்டு களாக பல மாறுதல்களை அடைந்த ஓர் பழமொழி, மிகவும் சாதாரண மான குறைபாடுகள் மிகப்பெரிய மற்றும் சற்றும் எதிர்பாராத பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மெதுவாக நம்மை எச்சரிக்கிறது.

ஆணி இல்லாமையால் லாடம் தொலைந்தது,

லாடம் இல்லாமையால் குதிரை தொலைந்தது,

குதிரை இல்லாமையால் அஞ்சலாள் தொலைந்தான்,

அஞ்சலாள் இல்லாமையால் செய்தி தொலைந்தது,

செய்தி கிடைக்காமையால் போரில் தோல்வி,

போரில் தோல்வியால் யுத்தத்தை இழந்தோம்,

யுத்தத்தை இழந்ததினால் இராஜ்யபாரம் போயிற்று.

ஒரு ஆணி இல்லாமையால் ... உலகையே இழந்து விட்டோம்.

இரட்சிக்கப் பட்டு பரலோகில் நாம் நுழையும் போது, இந்தப் பூவுலகில் அவரது அன்பின் பரிபூரணத்தை அவருடைய சித்தப்படி முழுமையாக அனுபவிக்கவில்லை என்று உணருவோம். நார்விச்சின் ஜூலியன் (1300 களில் ) எழுதிய "ஆண்டவருடைய ஆறுதல்களை பெரிய அளவிலும் நமது பாடுகளை லேசாகவும் எடுத்துக் கொள்ளுவோம்; ஆம், காலையில் களிகூருவோம்!" என்பதை ஏமி கார்மிக்கேல் அம்மையார் மேற்கோள் காட்டுகிறார்.

300 ஆண்டுகளுக்குப் பின் சாமுவேல் ரூதர்போர்ட், "கிறிஸ்துவின் அன்பின் வழியை நான் அறியவில்லை. எனக்கென்று அவர் வைத்திருந்ததை அறிந்திருந்தேனால் மதிமயங்கி இருந்திருக்க மாட்டேன்" என்று எழுதுகிறார்.

பழைய பரிசுத்த வான் கள் கூறுவதை உங்களால் தொடர்பு படுத்த முடிகிறதா?

நமக்கு தகுதி இல்லை, நம்மீது அன்பு செலுத்த முடியாத மற்றும் நம்மை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளதெனக் கருதுவதனால், நமக்கு இந்த அன்பைப் பெற்றுக் கொள்ளுவது கடினமாயிருக்கிறது. இந்த அன்பை இழந்து விடுவோமோ என்ற எண்ணம் நமது ஆத்துமாவில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஆனால் இந்த அன்பை இழந்து போனால் அவர் நமக்கு இப்போதும், எதிர் காலத்திலும் வைத்திருக்கும் அனேக ஆசீர்வாதங்களையும், வாய்ப்புக்களையும் இழந்து போவோம்.
நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்