திட்ட விவரம்

எனக்குத் தேவையான அனைத்தும்மாதிரி

Everything I Need

3 ல் 2 நாள்

தேவன் நமக்கு முன் சென்று நம்மை பாதுகாப்பதால், நம்முடைய யுத்தங்களை அவர் ஏற்கனவே கையாண்டு இருக்கிறார். நம்முடைய திடீர் பிரச்சனைகளை கையாண்டு முடித்துவிட்டார். எதிர்பாராத ஆபத்துகள் அவரை ஆச்சரிய பட வைப்பதில்லை. நாம் யுத்த பட்டயத்தை நாமே கையாள முயன்று அவரில்லாமல் போரிட்டால், நாம் இன்னும் அதிகமாக சோர்வடைந்து குழப்பமடைவோம். அவர் நமக்கு முன்பாக முன் சென்றார் நமக்கு தேவையான சரியான அளவு இரட்சிப்பை சம்பாதித்தார். நமக்கென்று செய்யப்பட்ட சரியான பங்கு.


அவர் உன் ஜீவனுக்கென்று ஒதுக்கிய பங்கை காட்டிலும் எதுவும் சிறந்தது அல்ல, ஏனென்றால் தேவனுக்கென்ற உன் பங்கு உனக்கு செய்யப்பட்டது உனக்கென்று மாத்திரம் செய்யப்பட்டது. உன் பங்கு உனக்கு முழுமையையும் அபரிவிதத்தையும் உனக்கு உண்டாகும், உன் அயலாகாதுனுக்கு கொண்டுவரும் என்பது நிச்சயம் அல்ல. அதேபோல உன் அயலாகத்தானின் பங்கு, உனக்கென்று சரியான படிவமாக இருக்காது. நீ முழுமையாக விழிப்பாகவும் ஜீவனோடும் இருக்க வேண்டும் என்பதே தேவன் உனக்காக அளவிட்டு பரிபூரணமாக கொண்டிருக்கும் பங்காகும்.


தேவன் அவருடைய பங்கை உன் ஜீவியத்திற்கு கொடுக்க விரும்புகிறார். அவர் நல்ல ஈவுகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதில்லை, அதை பரிபூரணமாகும் விதத்தில் தான் அவர் கிரியை செய்கிறார். அவரிடம் நீ அப்பத்திற்கு கேட்டால், அவர் கல்லை உனக்கு கொடுக்கமாட்டார்... ஆகவே கேள்! அவர் நீ அந்த பங்கை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார், உனக்கென்றே அற்புதமாக செய்யப்பட்ட அந்த பங்கை.


அந்த பங்கு என்ன என்று கேட்கும் பழக்கத்தின் வெளிப்பாட்டை காண்பிக்காதே.


நாம் தேவனுக்கு முன்பாக சென்று நம்முடைய சொந்த கனவுகளையும் இலக்குகளையும் நாம் நிர்ணயிக்கும் போதுதான் அதிகமாக அதைரியப்படுகிறோம்.


இன்று அவரே உன் பங்கு என்பதை நினைவுபடுத்திக்கொள், அவர் உனக்காக அந்த கவனமாக செய்யப்பட்ட பங்கை உருவாக்க அதிக வலியை சகித்தார். இயேசு கிறிஸ்து உனக்காக வேலையை செய்துமுடித்தார். அவர் உனக்காக கடினப்பட்டார். அவர் உனக்காக சகித்தார். அவர் உனக்காக இரத்தம் சிந்தினார். அவர் உனக்காக மரித்தார். ஆனால் மிக முக்கியமாக, அவர் உன் யுத்தங்களை எல்லாம் உனக்காக அவர் தோலில் மாத்திரம் எடுத்துக்கொள்ளாமல், உன்னை பயமுறுத்திய ஒவ்வொரு காரியத்தையும் அவர் தோற்கடித்து நீ முழுமையாக ஜீவிக்கும்படி செய்தார்.


உனக்கான தேவைகள் அனைத்திற்கும் போதுமானவர் நம் தேவன். நேற்று, இன்று, என்றென்றைக்கும்.


இந்தப்பகுதியைப் பற்றிய பேச்சு அனைத்தும் எனக்கு பசியை ஏற்படுத்துகிறது. நான் ஒரு இனிப்பு அப்ப வகை பெற போகப்போகிறேன்.



பிரதிபலிக்க:


  • ஒன்றை வாஞ்சிப்பதற்கும் வேண்டும் என்று நினைப்பதற்கும் வித்தியாசம் என்ன? ஒரு சாக்கலேட் கேக்கிற்கு சாப்பிடுகிறேன். எனக்கு அது எப்போதும் வாஞ்சைதான், ஆனால் அது எனக்கு உண்மையில் தேவை இல்லை. தேவன் உனக்காக கொண்டிருக்கும் பங்கு உனக்கு வாஞ்சை அளிக்கிறதா அல்லது உனக்கு தேவையான ஒன்றா? மத்தேயு 6:26-33-ஐ வாசி. இந்த வசனங்கள் மூலம் தேவன் உன்னிடம் என்ன பேசுகிறார்?
  • அநேக வேளைகளில், தேவனுடைய பங்கை அறிந்து கொள்ள நாம் அவர் பக்கத்தில் வந்து அவர் வார்த்தையை வாசித்து அவர் பிரசன்னத்தில் தொடர்ந்து இருப்பது தேவைப்படுகிறது. இன்று அதை நீ எவ்வாறு செய்கிறாய்?
நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Everything I Need

தேவன் நமக்கு முன்பு சென்று நம்மை பின்னிருந்து பாதுகாத்திருக்கிறார். அவர் நம்முடைய யுத்தங்கள் அனைத்தையும் ஏற்கனவே கையாழ்ந்திருக்கிறார். நாம் காணக்கூடாதவைகளை சரிசெய்து இருக்கிறார். திடீர் திருப்பங்களை கண்டு அவர் அஞ்சுவதில்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஹாலி மஃனுசன்-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.hollymagnusonco.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்