ஜெபம்
நம்பிக்கை
நம்பிக்கை என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையாகும். தேவனை சந்திப்பதன் மூலமும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும் உங்கள் விசுவாசம் வளர்கிறது. பின்வரும் வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம், உங்களது எல்லா நாட்களிலும் நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு இது உதவும். வேதத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறட்டும்!
விரல் ஜெபத்தின் வல்லமை
விரல் ஜெபம் என்பது ஒரு எளிய மற்றும் சுருக்கமான ஜெபமாகும், இது குறிப்பிட்ட ஜெப கோரிக்கைகளை நினைவூட்டுவதற்காக உங்கள் விரல்களைப் பயன்படுத்தி அமைதியாகச் சொல்லலாம். ஜெபத்தை தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைக்க விரும்பும் நபர்களுக்கு இது ஒரு பயனுள்ள கருவியாகும். ஆனால் அவற்றின் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் அது எவ்வாறு தேவனுடன் ஆழமான வழியில் இணைக்க உதவுகிறது என்பதையும் ஆராய்வோம்.மனிதர்களாகிய நாம் அடிக்கடி விரல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். அன்றாட பணிகளை முடிக்க ஒவ்வொரு நாளும் அவற்றைப் பயன்படுத்துகிறோம்.சங்கீதம் 144:1 என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ஜர்னலிங்
ஜர்னலிங் என்பது .உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள அவற்றை எழுதுவது ஆகும்.நாம் மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதட்டத்துடன் போராடினால், ஒரு ஜர்னல் அல்லது ஒரு குறிப்பேடு வைத்திருப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். பிலிப்பியர் 4:6-7 [6] நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். [7] அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.இது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
தேவனே, என்னைப் பற்றி என்ன?
நாம் வாழ்க்கையில் பின்தங்கிவிட்டதாக உணரும்போது, நாட்கள் செல்ல செல்ல ஒப்பிடும் குரல் சத்தமாகும்போது, தேவன் நம் நடுவில் நடமாடுவதை நாம் அடிக்கடி பார்க்கத் தவறிவிடுகிறோம். இந்த தருணங்களில் தான் நமது விசுவாசம் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த பக்திப்பாடலைப் படித்து, தேவனுக்கான உங்கள் காத்திருப்பில் உற்சாகமடையுங்கள்.
ஒரே விஷயம்
இந்த மனதை உலைக்கும் உலகில் இயேசுவுக்காக வாழ்வது என்னவென்று நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். இந்த உலகம் ஒரு நூறு மைல்கல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நமக்குத் தேவையானதை விடக் கூடுதல் தகவல்கள் நம்முடைய கைகளில் உள்ளன. இது நவீன உலகத்தின் இயல்பா? இப்படிப் பறக்கிற சூழலில் நம்மை எப்படி நிதானப்படுத்திக் கொள்வது? சங்கீதம் 27:4 இல் அதற்கான பதில் உள்ளது – ஒரே ஒரு விஷயம், அந்திரேயா கார்ட்லெஜ்.
ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் தொடர்புகொள்ளுதல்
சமாதானத்தை உணர முடியவில்லையா? நீ கலங்குகிறாயா? ஜெபிப்பது உனக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறதா? உன்னைப்போலவே நானும் சில சமயங்களில் ஜெபிப்பதற்கு சிரமப்படுகிறேன். ஆனால் நமது ஜெபம், உரையாடல் ஆகியவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் ராஜாவுடனான இணைப்பு நமக்குத் தேவைப்படுகிறது. ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் இணைவதன் அவசியத்தை ஆராய்ந்து அறிய குறைந்தது ஐந்து நாட்களை செலவிட உன்னை அழைக்கிறேன்…
தேவனை வணங்குதல்
இந்த தினசரி தியானம், வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனை எவ்வாறு வழிபடுவது என்பதற்கான நுண்ணறிவையும், கிறிஸ்துவுடனான முழு இதய உறவையும் ஊக்குவிக்கும். இந்த தியானம் ஆர். டி. கெண்டலின் தேவனை ஆராதிப்பது என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டது. (ஆர். டி. கெண்டல் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சிற்றாலயத்தில் போதகராக இருபத்தைந்து ஆண்டுகள் இருந்தார்.)
கர்த்தரின் குரலைக் கண்டறிதல் // அவரைச் சந்திக்கக் கற்றறிதல்
தேவனின் சத்தம் மென்மையான கிசுகிசுப்பாகவோ அல்லது கடும் புயல் காற்றாகவோ இருக்கக்கூடும். முக்கியமானது என்னவென்றால், அது எப்படி வெளிப்பட்டாலும் அதை அடையாளம் காண்பதே - அத்துடன் அவர் நன்மை செய்பவர் என உறுதியாக நம்புவது. ஆம், நமது எவ்விதமான போராட்டத்தின் சக்தியைவிட, அவர் வல்லமை மிக்கவர். நீங்கள் இந்த நான்கு - நாட்கள் தியானத் திட்டத்தில் இணைவதன் வழியாக, கர்த்தருடன் உறவாடுவது, அவரது சப்தத்தை, பிரசன்னத்தை உணர்வது எங்கனம் எனக் கற்றுக் கொள்ளலாம் - இத்தகைய அனுபவத்தைக் கண்டடைந்த சகோதர, சகோதரிகளுடன் விரைவாக இணைந்து கொள்ளுங்கள்.| நவீன வாழ்வியலில் தூயாவியானவர்.
ஒய்வு நாள் - தேவனின் தாளத்தின்படி வாழ்வது
இவாஞ்சலிகல் அலையன்ஸ் வீக் ஆஃப் பிரேயர் (WOP) என்பது ஐரோப்பிய சுவிசேஷக் கூட்டணியால் வழங்கப்பட்ட உள்ளடக்கத்துடன் உலகளாவிய ஆனால் பெரும்பாலும் ஐரோப்பா முழுவதும் அனுசரிக்கப்படும் முயற்சியாகும். WOP 2022 "ஒய்வு" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. எட்டு நாட்கள் முழுவதும் வாசகர்கள் ஓய்வின் ஒரு அம்சத்தில் கவனம் செலுத்த அழைக்கப்படுகிறார்கள்: அடையாளம், ஏற்பாடு, ஓய்வு, இரக்கம், நினைவு, மகிழ்ச்சி, பெருந்தன்மை மற்றும் நம்பிக்கை. தேவனின் தாளத்தின்படி ஒரு வாழ்க்கையை (மீண்டும்) கண்டறிய இந்த பொருள் உங்களுக்கு உதவும் என்று நாங்கள் ஜெபம் செய்கிறோம்!