1
நாகூம் 3:1
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
பலரது இரத்தம் சிந்தப்பட்ட பட்டணமே! உனக்கு ஐயோ பேரழிவு வந்தது! எங்கும் பொய் புரட்டலும், கொள்ளையிடப்பட்ட பொருட்களும் நிரம்பிய பட்டணமே! நீ ஓயாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றாயே!
ஒப்பீடு
நாகூம் 3:1 ஆராயுங்கள்
2
நாகூம் 3:19
உனக்கு ஏற்பட்டுள்ள காயத்துக்கு மருந்தே இல்லை; உனக்கு ஏற்பட்ட காயம் மரணத்துக்கு ஏதுவானது. உன் வீழ்ச்சி குறித்த செய்தியைக் கேட்கின்றவர்கள் எல்லோரும், உன் நிலைமையைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கரகோஷம் செய்கின்றார்கள். ஏனெனில் உன் முடிவற்ற கொடுமையை அனுபவிக்காதவர் யாராயினும் உள்ளனரோ?
நாகூம் 3:19 ஆராயுங்கள்
3
நாகூம் 3:7
உன்னைக் காண்போர் அனைவரும் உன்னைவிட்டு அருவருப்புடன் விலகி ஓடுவார்கள். “நினிவே பாழாக்கப்பட்டது, யாரும் அதற்காக மனவேதனை அடைவார்களா?” என்பார்கள். உனக்கு ஆறுதல் அளிப்பதற்கு எங்கேயாவது, எவரையாவது நான் தேடிக் கண்டடைவேனோ?
நாகூம் 3:7 ஆராயுங்கள்