இயேசுவைப் போலவே மன்னிப்பதுSample

இயேசுவைப் போலவே மன்னிப்பது - மன்னிப்பைப் பற்றி பரிசுத்த வேதாகமம் கூறுவது என்ன?
மன்னிப்பு என்பது வேதாகம அடிப்படைகளைக் கொண்ட ஒரு முக்கியமான கருத்தாகும், இது நமது நல்வாழ்வு மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்குகிறது. இப்போது மன்னிப்பு பற்றிய வேதாகமக் கண்ணோட்டம் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் ஆராய்வோம்.
மன்னிப்பின் பரிசுத்தப்படுத்தும் வல்லமை
மன்னிப்பு, வேதாகமம் கற்பிப்பது போல், நம் இதயங்களிலிருந்து வலியையும் வெறுப்பையும் நீக்கும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளது. நாம் மன்னிக்கும்போது, தேவனின் பரிசுத்தமான சித்தத்திற்கும். அவருடைய விருப்பத்துக்கும் நம்மை இணைத்துக் தொடர்ந்து மகிழ்ச்சியான ஒரு வாழ்வை நாம் அனுபவிக்கிறோம். ஒரு பரிசுத்த இதயம் தேவனின் அன்பின் இருப்பிடமாகவும், நம் வாழ்வில் அவர் செய்யும் அற்புதங்களுக்கான ஒரு ஆரம்ப இடமாகவும் மாறும்.
பயம் மற்றும் வெறுப்பின் சங்கிலிகளை உடைத்தல்
மன்னிப்பதற்கான தடைகளில் ஒன்று, மேலும் காயம் ஏற்படுமோ என்ற பயம் மேலும் பிற மனிதரோடு இல்ல ஒரு வெறுப்பின் உணர்வு. நம்மைப் புண்படுத்தியவர்களுடன் மட்டுமல்லாமல், இதேபோன்ற அச்சுறுத்தலை நமக்கு நினைவூட்டும் எவருடனும் நம் உறவுகளில் தொடர்ந்து செயல்படுவது கடினமாகி விடலாம். இதுவும் நம் முன்னேற்றத்தை தடுத்துவிடும்.. மன்னிப்பு பற்றிய பரிசுத்த வேதாகம ஆலோசனையின் மூலமாக நம்மை சங்கிலி போல் கட்டி வைத்திருக்கின்ற பயம் மற்றும் வெறுப்பு சங்கிலிகளிலிருந்து விடுபட நம்மை ஊக்குவிக்கிறது, மிக அழுத்தமான உறவுகளிலிருந்து காயங்கள் குணமாகி இலகுவையும் புது உறவின் தொடக்கத்தையும் நெருக்கமான தெய்வீக உறவுகளும் தொடங்குகிறது.
மன்னிப்பைப் புரிந்துகொள்வது
உளவியலாளர்கள் மன்னிப்பை குற்றங்களை மறப்பது மன்னிப்பது என்று மட்டும் அர்த்தமல்ல. மாறாக, இது உணர்ச்சிபூர்வமான விடுதலையின் வல்லமை வாய்ந்த செயல் . என அறிவுறுத்துகிறார்கள்.தவறு செய்தவர் தகுதியானவரா? தகுதியற்றவரா? என்பதைப் பொருட்படுத்தாமல், மனக்கசப்பு அல்லது பழிவாங்கும் உணர்வுகளிலிருந்து விடுபட்டு எல்லையற்ற மன அமைதியுடன் இளைப்பாறுதலாய் இவ்வுலகில் யாவருடன் சமாதானமாக வாழ உதவி செய்கிறது.
மற்றவர்களை கடனில் இருந்து விடுவித்தல்
மன்னிக்க மறுப்பது மற்றவர்களை நம் கடனில் வைத்திருக்கும், எதிர்மறை உணர்ச்சிகளின் சுழற்சியை உருவாக்குகிறது. குடும்பங்களில், பெற்றோர்கள் வயது வந்த குழந்தைகளுக்கு எதிராக சில குறைபாடுகளையும் மனவிரோதங்களையும் வைத்திருந்து நீண்ட காலமாய் பிள்ளைகளிடத்தில் இருந்து வெகுமதிகள் மற்றும் உதவிகள் மூலம் ஈடாகத் எதிர்பார்ப்பாகவும் தேடுவதையும் நாம் காணலாம். ஆனால் மன்னிப்பு என்பது குற்றம் இழைத்த வரி இடத்தில் சரணடைவது போல் தோன்றினாலும், உண்மையில், அது விசுவாசிக்க முடியாத வல்லமை மற்றும் இரக்கத்தின் செயல்.
மன்னிப்பு சிறந்த பழிவாங்கல்: நாம் பெற்றுக் கொள்வது வெற்றி மற்றும் மகிழ்ச்சி
மன்னிப்பு பற்றிய வேதாகமக் கண்ணோட்டம், சிறந்த பழிவாங்குதல் என்பது பழிவாங்குதல் அல்ல, ஆனால் நமது சொந்த வெற்றி, மகிழ்ச்சி மற்றும் உள் அமைதி என்பதை நினைவூட்டுகிறது. பழிவாங்கும் மனிதர்களுக்கு நம் மனதில் ஆதிக்கம் செலுத்த மறுப்பதன் மூலம், நாம் உறுதியையும் விசுவாசத்தையும் தெரிவிக்கிறோம்.
மன்னிப்பு: மனதை விடுவித்தல்
மன்னிப்பு என்பது குற்றத்தைப் பற்றியது அல்ல; மன்னிப்பவரைப் பற்றியது. எதிர்மறை உணர்ச்சிகளின் சிறையிலிருந்து உங்கள் மனதை விடுவிப்பது பற்றியது. நீங்கள் மன்னிக்கும்போது, மற்றவரின் தவறுகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிடுவீர்கள், அமைதியையும் சமாதானத்தையும் அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது.
பிரதிபலிப்பு கேள்விகள்
1. நீங்கள் ஒருவரை மன்னித்த நேரத்தை உங்களால் நினைவுபடுத்த முடியுமா, அது உங்கள் உணர்ச்சி நல்வாழ்வையும் உறவுகளையும் எவ்வாறு பாதித்தது?
2. மீண்டும் காயப்படுமோ என்ற பயத்தில் நீங்கள் எப்போதாவது வெறுப்புடன் இருந்திருக்கிறீர்களா? இங்கு விவாதிக்கப்பட்ட மன்னிப்பு என்ற கருத்து, இந்த பயத்திலிருந்து விடுபடவும், ஆழமான தொடர்புகளை அனுபவிக்கவும் உங்களுக்கு எப்படி உதவும்?
3. உங்கள் கருத்துப்படி, மன்னிப்பு ஏன் வேதாகமத்தில் வலியுறுத்தப்படுகிறது என்று நினைக்கிறீர்கள்? மன்னிப்பைப் புரிந்துகொள்வதும் நடைமுறைப்படுத்துவதும் நம் வாழ்வுக்கான தேவனின் விருப்பங்களுடன் எவ்வாறு நம்மை இணைக்க முடியும்?
About this Plan

மன்னிப்பு என்பது இயேசுவின் போதனைகளில் ஒரு முக்கிய கருத்தாகும், மன்னிப்பு அவருடைய சாயலைப் பிரதிபலிக்கிறது, மற்றும் கிருபை மற்றும் அன்பின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.மத் 6:14-ல், இயேசு மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” I இந்த எளிய மற்றும் முக்கியமான செய்தி, வேதவாக்கியங்களின்படி மன்னிப்பு ஏன் முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது,ஏனெனில் அது தேவனுடனான நமது உறவை பிரதிபலிக்கிறது. நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, நம்முடைய பரலோக பிதாவினிடமிருந்து நாம் பெறும் மன்னிப்பை பிரதிபலிக்கிறோம்.
More
Related Plans

Spirit-Led Emotions: Mastering Emotions With Holy Spirit

5 Days of 5-Minute Devotions for Teachers

The Power of Community - Vol. 1: In Times of Grief

What a Man Looks Like

Engaging in God’s Heart for the Nations: 30-Day Devotional

7 Devotions to Help You Discover God’s Restorative Power

Don't Quit

When Your Child’s LifeStyle Choices Hurt – Guidance for Hurting Parents

I'm Just a Guy: Who Feels Alone
