கொந்தளிப்பான நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல் Sample

கொந்தளிப்பான நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ள- தேவனுடன் நமது நேரத்தை செலவு செய்ய வேண்டும்.
தேவனுடன் நமது நேரத்தை செலவு செய்தல் என்பது முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுதல் என்பதாகும்.வாழ்க்கையின் புயல்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளின் மத்தியில், நமது சமநிலையைக் கண்டறிவதும், தேவாதி தேவனின் முன்னிலையில் கிடைக்கப்பெறும் ஆறுதலை தேடுதலும் மிக மிகமுக்கியம். விசுவாசிகளாகிய நமது பயணத்திற்கு தேவனுடைய வார்த்தையில் உறுதியான ஒரு அடித்தளமும், அசைக்க முடியாத நம்பிக்கையும் நிச்சயமாய் உண்டு.
மற்றும் நமக்கு நம் நேரத்தையே நம் நேரத்தையே நம் நேரத்தை நம் நேரத்தை நம் நேரத்தை நமது பரலோகத் தகப்பனுடன் ஒரு நெருங்கிய அர்ப்பணிக்கப்பட்ட நேரம் தேவை. இவ்வித தனிப்பட்ட உறவுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், தொடர்ந்து தேவனுடன் இணைந்து கொள்ளும் தருணங்களில் நம் நேரத்தை ன முதலீடு செய்வதன் மூலமும், கொந்தளிப்பான காலங்களிலும் தேவ இரக்கம் மன்னிப்பு நெருங்கிய உறவு இவற்றால் ஏற்படும் மகிழ்ச்சியுடன் நாம் முன் செல்ல முடியும்.
தேவாதி தேவனுடன் செலவு செய்யும் நேரத்தின் முக்கியத்துவத்தை ஆராய்தல்:
இத்தகைய நேரம் ஒரு தெய்வீக நோக்கத்துடன் நம் இதயங்களையும் மனதையும் ஒருங்கிணைக்கும் திசைகாட்டியாக செயல்படுகிறது. வாழ்க்கையின் குழப்பங்களுக்கு மத்தியில் இது நமக்கு தெளிவு, வலிமை மற்றும் ஞானத்தை வழங்குகிறது. இயேசு பறவைகளையும் காட்டுப் புஷ்பங்களையும் சுட்டிக்காட்டி, நாம் கவலை இன்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று நினைப்பூட்டுகிறார்.மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய ராஜ்யத்தைத் தேடுவதை முதன்மைப்படுத்த அழைக்கப்படுகிறோம்.தேவனுக்கு முன்பாக நன்கு தேர்வு செய்து நம்முடைய நேரத்தை முதலாவது அவருடைய ராஜ்யத்தின் மேன்மைக்காக செலவிடுவதன் மூலம், நாம் நமது முன்னுரிமைகளை மறுசீரமைக்கிறோம், இதன் மூலம் நம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம், மேலும் எல்லா எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம் இருதயங்களையும் சிந்தைகளையும் ஆட்கொள்ளும். எனவே வீண் சலனங்கள் குழப்பங்கள் நம்மை ஆட்கொள்ள இடமே இல்லை என்பது ஒருவராலும் எதிர்க்க முடியாத ஒரு உண்மை.
ஊடாடும் கேள்விகள்:
- சவாலான காலங்களில் தேவனோடு உங்கள் நேரத்தை முன்னுரிமைப்படுத்துவது உங்கள் வாழ்க்கையில் எவ்வித பாதிப்பை உருவாக்கலாம்?
- தேவனுடன் நீங்கள் செலவு செய்யும் நேரத்தை ஒரு நிலையான பழக்கமாக மாற்ற நீங்கள் எடுக்கக்கூடிய சில நடைமுறை படிகள் யாவை?
- உங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவனுடன் நெருக்கத்தை வளர்க்கும் ஒரு பரிசுத்தமான சூழலை எவ்வாறு உருவாக்குவது?
தேவாதி தேவனோடு நேரத்தை வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்
தனிஜெபம் செய்யும்செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்:கவனச்சிதறல்கள் மற்றும் நெருக்கடி இல்லாத அர்ப்பணிப்பு நேரங்களை தெரிந்தெடுக்க வேண்டும். உளமார்ந்த நன்றியை வெளிப்படுத்தவும், கவலைகளை முழுமையாக தேவனிடம் ஒப்படைத்து விட தேவனின் வழிகாட்டுதலையும் பிரசன்னத்தையும் தேடவும் இந்த நேரத்தை பயன்படுத்தவும்.
பரிசுத்த வேதத்தை ஆழமாகபடிப்பதில் ஈடுபடுங்கள்:தேவனுடையவார்த்தையின் ஆழங்களை ஆராய்வதற்கு வழக்கமான நேரத்தை ஒதுக்குங்கள். ஒரு வாசிப்புத் திட்டத்தை உருவாக்குங்கள், அத்துடன் துதி பாடல்களைப் பயன்படுத்துங்கள், மேலும் தனிப்பட்ட இந்த நேரத்தில் தேவ சமூகத்தில் பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலுக்கும் ஆவியின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைத் தேடுங்கள்.
தேவ சமூகத்தில் அமர்ந்து அமைதியாய் இருக்க மேலும் தேவன் சொல்வதை கேட்க அமைதி நேரம் தேவை:உங்கள் அமைதியின் தருணங்களை நீங்களாகவே உருவாக்குங்கள், இந்த பயிற்சி தேவனுடன் முழுமையாக இருக்க உங்களை அனுமதிக்கிறது.தேவ வசனங்களை தியானம் செய்யப் பழக வேண்டும். தேவன் நம்முடன் பேசும் மென்மையான குரலை கேட்கவும் பழக வேண்டும்., எல்லா சூழ்நிலைகளையும் எல்கைகளையும் தாண்டிய அவரது அமைதியை இன்பமாய் அனுபவிக்க மிகச் சிறந்த நேரம் இதுவே.
நம்முடன் இணைந்து செயல்படும் நண்பர்களையும் சமூகத்தில் நம்முடன் பொறுப்புடன் வளர்க்க இணைத்துக் கொள்ளுங்கள்
இந்த நண்பர்களுடன் இணைந்து நேரத்தை செலவிடுவதில் நீங்கள் ஒருவரையொருவர் ஊக்குவிக்கும் சிறு குழுக்களில் ஈடுபடலாம். இதன் மூலம் நாம் பெற்றுக் கொண்ட தேவனுடைய வெளிப்படுத்தல்கள், வேத அறிவு இவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள், வேதவசனங்களை, ஆராய்ந்து அறியவும்ஒன்றாக ஜெபிக்கவும், ஆன்மீக வளர்ச்சியையும் இணைப்பையும் வளர்க்கவும் இவ்வித தொடர்புகள் பயனுடையதாய் இருக்கும்
.
தேவனை முழு மனதோடு ஆராதிக்கவும் தேவன் நமக்குச் செய்த நன்மைகளை சிந்தித்து தியானிக்கவும் நேரம்ஒதுக்க வேண்டும்.:தேவனை துதித்து பாடுவதன் மூலம் அல்லது பாடல்களை ஜெப நேரத்தில் கேட்பதன் மூலமாகவே மூலமாகவோ தேவனின் நற்குணத்தைப் பற்றி சிந்தித்து ஆராதிக்க நேரத்தை ஒதுக்கி கொள்ளுதல் நல்ல பலனை தரும். முழு இருதயத்தோடும் தேவனை துதியுங்கள். உங்கள் இதயம் துதியால் நிரம்பி வழியட்டும், அவருடைய பிரசன்னத்தை முழுமையாக சந்திக்க உங்கள் ஆழ் மனதை திறந்து அவர் பாதத்தில் ஒப்புக்கொடுங்கள்.வாழ்க்கையின் கொந்தளிப்பின் நடுவில் நாம் செல்லும்போது, நம் மனதில் சமநிலையைக் கண்டறிவதற்குதேவனுடன் தனிப்பட்ட முறையில் நாம் செலவு செய்யும் திட்டமிட்டு செயல்படும் நேரம் வாழ்வின் முக்கிய நேரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதலில் அவரைத் தேடுவதன் மூலமும், தேவனுடைய சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் நம் இதயங்களை ஒருமுகப்படுத்துவதால் அவருடைய வழிகாட்டுதலையும், அமைதியையும், அசைக்க முடியாத அன்பையும் நாம் அனுபவிக்க நிச்சயமாய் முடியும் முடியும். நாம்
தேவனுடன் செலவு பண்ணும் நேரத்தை முதன்மைப்படுத்துவோம், அவருடைய முன்னிலையில் ஆறுதலையும் பலத்தையும் பெற்றுக் கொள்வோம்..
Scripture
About this Plan

நாம் ஒரு கொந்தளிப்பான காலத்தில் இருப்பதாக உணரும் போது மனநிலையை அமைதி நிலையில் காத்துக்கொள்வது சவாலானது என்பது விளங்கக் கூடிய கருத்துதான், ஆயினும் நிச்சயமாக இந்த ஒரு அமைதி நிலையை அடைந்து விடலாம். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; சங்கீதம் 46:10a. ஒரு குழப்பமான மனதுக்கான ஒரே தீர்வு நம் நம்பிக்கை விசுவாசம் இவைகளில் அடங்கி இருக்கிறது.நம் மனதின் எண்ணங்களை அல்லது குழப்ப நிலைகளை தேவன் மேலேயே வைத்து, இந்தப் பாரச்சுமைகளை தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய மாறாத அன்பிலும், நம்மை விட்டு மாறாத அவருடைய பிரசன்னத்திலிருந்து வரும் தெய்வீக ஆறுதலையும் அமைதியையும் கண்டறிவதாகும்.
More
Related Plans

A Practical Guide for Transformative Growth Part 2

A Minute of Hope

Love Because: Devotions for In-Law Relationships

God Within You - Awaken to the Power and Presence of the Holy Spirit

The Sabbath Way: Finding the Rest Your Soul Craves by Travis West

The Dove

Truth to All Generations by Vance K. Jackson

Hope for Imperfect Families From the Story of Joseph

Set Apart: Living for Christ as a Teen
