Plan Info
BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample
இயேசுவின் தலைகீழான ராஜ்யத்தின் அறிக்கையைப் வாசித்த பிறகு, "மற்றொரு கன்னத்தைக் காட்டும் ராஜா" எவ்வளவு வல்லமை வாய்ந்தவராக இருக்க முடியும் என்று நாம் கேள்வி கேட்க ஆரம்பிக்கலாம். ஆனால் இயேசுவின் கிருபை பலவீனமானது அல்ல. நாம் தொடர்ந்து வாசிக்கும்போது, இறந்தவர்களை எழுப்புவதற்கு கூட இயேசு ராஜாவுக்கு வல்லமை இருப்பதைக் காண்கிறோம்.
இந்த அருமையான அற்புதங்களை இயேசு செய்வதைக் காணும் மற்றும் கேட்கும் மக்களுக்கு அவர் தேவனின் வல்லமையால் செயல்படுகிறார் என்பதை அறிவார்கள். ஆனால் யோவான் ஸ்நானகன் சிறையில் இருக்கும்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் கேட்கவும் முடியாது. அவர் யாரென்று யோவான் நினைத்திருந்தபடி அவர் உண்மையில் இயேசுதானா என்று சிந்திக்கத் தொடங்குகிறார். ஏசாயா தீர்க்கதரிசியை மீண்டும் மேற்கோள் காட்டி இயேசு யோவானுக்கு வார்த்தையை அனுப்புகிறார் . தரித்திரருக்கு சுவிஷசம்உள்ளது." இந்த வார்த்தை வரவிருக்கும் மேசியாவைக் குறிக்கிறது என்பதை யோவான் அறிவார். ஏசாயாவின் புத்தகத்தின் அடுத்த வசனங்கள் மேசியா “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும் ” அறிவிக்கும் என்று அவர் அறிவார், ஆகவே யோவான் ஏன் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்? இயேசு அவரை மறந்தாரா? இயேசு யோவானின் இக்கட்டான நிலையைப் பார்த்து, "என்னை புண்படுத்தாதவன் பாக்கியவான்" என்று ஒரு வாக்குதத்ததையும் கொடுக்கிறார்.
ஆனால் பலர் குறிப்பாக மதத் தலைவர்கள் இந்த ஆசீர்வாதத்தை மறுத்து இயேசுவைப் புண்படுத்துகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திய வெளியாட்களுக்கு இயேசுவின் உயரிய குணம் புரியவில்லை. ஆனால், அவரிடம் கொண்டு வரும்போது குழப்பங்களை என்ன செய்வது என்று இயேசுவுக்குத் தெரியும். உதாரணமாக, விருந்தில் இருந்த பெண் தன் நன்றியுள்ள கண்ணீருடன் இயேசுவின் கால்களைக் கழுவத் தாழ்த்திக் கொள்ளும்போது, இயேசு அவருடைய மன்னிப்புடன் அவளுடைய வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களைக் கழுவுகிறார் என்று லூக்கா பதிவு செய்கிறார். நாங்கள் அவரிடம் வரும்போது எங்களுக்காகவும் அதைச் செய்ய அவர் தயாராக இருக்கிறார்.
இது தலைகீழான ராஜ்யம் - பெரிய தலைகீழ் மாற்றம். நம்முடைய பாவங்கள் ராஜாவை அணுக முடியாததாக ஆக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம், ஆனால் இயேசு மற்ற ராஜாக்களைப் போல இல்லை. அவர் கிருபையுள்ளவர் , அணுக கூடியவர்––மரணம் அல்லது சிறைச் சுவர்கள் கூட அவருடைய மக்களை அவருடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது.
Scripture
About this Plan
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப...
More