BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample

இயேசு உயிருடன் இருந்தபோது அவரைப் பின்தொடர்ந்த சில ஸ்திரீகளைப் பற்றி லூக்கா நமக்குச் சொல்கிறார். மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நாளில் இயேசு கல்லறையில் வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் காண்கிறார்கள், சூரிய உதயத்தில் ஓய்வு நாளின் மறுநாளே அவர்கள் இயேசுவின் கல்லறைக்குத் திரும்புகிறார்கள், இதுவே அவர்களால் முடிந்த முதல் தருணம். ஆனால் அவர்கள் வரும்போது, கல்லறை திறந்து காலியாக இருப்பதைக் காண்கிறார்கள். இயேசுவின் உடல் எங்கு சென்றது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, திடீரென்று இரண்டு மர்ம உருவங்கள், எங்கிருந்தோ வந்து ஒளியுடன் பிரகாசித்து, இயேசு உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி மறைகிறது. அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்கள் ஓடிவந்து மற்ற சீடர்களிடம் அவர்கள் பார்த்த அனைத்தையும் சொல்கிறார்கள், ஆனால் அவர்களின் தெரிவித்தது முட்டாள்தனமாகத் தெரிகிறது, யாரும் அவர்களை நம்பவில்லை.
இதற்கிடையில், எருசலேமுக்கு வெளியே, இயேசுவின் சீஷர்கள் ஒரு சிலர் எம்மாவு என்ற ஊருக்குச் செல்லும் சாலையில் பயணிக்கிறார்கள். பஸ்கா வாரத்தில் நடந்த எல்லாவற்றையும் பற்றி அவர்கள் பேசுகிறார்கள், அப்போது இயேசு அவர்களுடன் பயணம் செய்யத் தொடங்குகிறார், ஆனால், ஆச்சரியமாக, அது அவர்தான் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இயேசு, அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று கேட்டு உரையாடுகிறார். அவர்கள் தங்கள் வழிகளில் நிற்கிறார்கள், அந்த விஷயத்தால் துக்கமுடையவர்களாக, கடந்த சில நாட்களாக என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லையே என்று ஆச்சரியப்படுகிறார்கள். இஸ்ரவேலைக் காப்பாற்றுவார் என்று அவர்கள் நினைத்த ஒரு வல்லமை வாய்ந்த தீர்க்கதரிசியான இயேசுவைப் பற்றி அவர்கள் பேசுவதாகவும் ஆனால் அதற்கு பதிலாக அவரை சிலுவையில் அறைந்தனர் என்றும் அவர்கள் அவரிடம் சொல்கிறார்கள். அவர் உயிருடன் இருப்பதாக சில பெண்கள் எப்படி சொல்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு எதை நம்புவது என்று தெரியவில்லை என்று அவர்கள் அவரிடம் சொல்கிறார்கள். ஆகவே, யூத வேதவசனங்கள் இதுவரையிலும் இதைத்தான் சுட்டிக்காட்டியிருந்தன என்று இயேசு விளக்குகிறார். உண்மையான கலகக்காரர்களின் சார்பாக ஒரு கலகக்காரராக பாடுபட்டு மரித்துப் போகும் ஒரு ராஜா இஸ்ரவேலுக்கு தேவைப்பட்டது. இந்த ராஜா தனது உயிர்த்தெழுதலால் அதைப் பெறுபவர்களுக்கு உண்மையான ஜீவனை கொடுப்பதை மெய்ப்பிப்பார். ஆனால் பயணிகள் இன்னும் அதை உணரவில்லை. அவர்கள் எப்போதும் போலவே குழப்பமடைந்து, இயேசுவை அவர்களுடன் நீண்ட காலம் இருக்கும்படி வற்புறுத்துகிறார்கள். இயேசு அவர்களுடன் உணவுக்காக எப்படி அமர்ந்திருக்கிறார் என்று லூக்கா சொல்லும் காட்சிக்கு இது வழிவகுக்கிறது. அவர் அப்பத்தை எடுத்து, அதை ஸ்தோத்திரம் பண்ணி, அதை பிட்டு, இறப்பதற்கு முன் கடைசி இரவு விருந்தில் செய்ததைப் போலவே அவர்களுக்குக் கொடுக்கிறார். இது அவரது நொறுக்கப்பட்ட சரீரத்தின் அடையாளம், சிலுவையில் அவரது மரணம். உடைந்த அப்பத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளும்போதுதான் இயேசுவைக் காண அவர்களின் கண்கள் திறக்கப்படுகின்றன. இயேசு உண்மையில் யார் என்று பார்ப்பது எப்படி கடினம் என்பது பற்றிய சம்பவம் இது. இந்த மனிதனின் அவமானமான மரணதண்டனை மூலம் தேவனின் மகா வல்லமையும் அன்பும் எவ்வாறு வெளிப்படும்? ஒரு தாழ்மையான மனிதன் பலவீனம் மற்றும் சுய தியாகத்தின் மூலம் எவ்வாறு உலகத்தின் ராஜாவாக முடியும்? பார்ப்பது மிகவும் கடினம்! ஆனால் இது லூக்கா சுவிஷேசத்தின் செய்தி. அதைப் பார்க்கவும் இயேசுவின் தலைகீழான ராஜ்யத்தைத் தழுவவும் நம் மனதில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.
Scripture
About this Plan

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More
Related Plans

The Armor of God

Hear

Unshaken: 7 Days to Find Peace in the Middle of Anxiety

Joshua | Chapter Summaries + Study Questions

Mission Trip to Campus - Make Your College Years Count

Called Out: Living the Mission

More Than Money: A Devotional for Faith-Driven Impact Investors

Living With Power

Daughter, Arise: A 5-Day Devotional Journey to Identity, Confidence & Purpose
