யோவான் 18

18
இயேசு கைது செய்யப்படல்
1இயேசு மன்றாடி முடித்த பின்பு, தமது சீடர்களுடன் கெதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார். அங்கு ஒரு தோட்டம் இருந்தது. அவரும் அவருடைய சீடர்களும் அங்கே போனார்கள்.
2அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் அந்த இடத்தை அறிந்திருந்தான். ஏனெனில் அந்த இடமானது, இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி ஒன்றுகூடும் ஒரு இடமாக இருந்தது. 3எனவே யூதாஸ் இராணுவ வீரர்களில் ஒரு பிரிவினரையும், பிரதான மதகுருக்கள் மற்றும் பரிசேயர் ஆகியோருடைய அதிகாரிகளில் சிலரையும் பெற்றுக்கொண்டு தோட்டத்துக்கு வந்தான். அவர்கள் தீப்பந்தங்களையும் விளக்குகளையும் ஆயுதங்களையும் ஏந்திக்கொண்டு வந்தார்கள்.
4இயேசு தமக்கு நடக்கப் போவதையெல்லாம் அறிந்து, அவர்களுக்கு முன்பாக வந்து, “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார்.
5அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள்.
இயேசு அவர்களிடம், “நானே அவர்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்தவனான யூதாஸ் அவர்களுடன் நின்று கொண்டிருந்தான். 6“நானே அவர்” என்று இயேசு சொன்னபோது, அவர்கள் பின்னடைந்து தரையிலே விழுந்தார்கள்.
7அவர் மறுபடியும் அவர்களிடம், “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள்.
8அதற்கு இயேசு, “நானே அவர் என்று உங்களுக்குச் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் போக விடுங்கள்” என்றார். 9“நீர் எனக்குக் கொடுத்தவர்களில் நான் ஒருவரையும் இழந்து விடவில்லை”#18:9 யோவா. 6:39 என்று அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் நிறைவேறும்படி இது நடந்தது.
10அப்போது சீமோன் பேதுரு, தன்னிடமிருந்த வாளை உருவி, தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கி, அவனது வலதுகாதை வெட்டினான். அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்.
11அப்போது இயேசு பேதுருவிடம், “உனது வாளை அதன் உறையில் போட்டுவிடு!” என்று கட்டளையிட்டு, “பிதா எனக்குக் கொடுத்த கிண்ணத்திலிருந்து நான் பருகாதிருப்பேனோ” என்றார்.
12அப்போது இராணுவ வீரர்களும் அவர்களுடைய தளபதியும் யூத அதிகாரிகளும் இயேசுவைக் கைது செய்தார்கள். அவர்கள் அவரை பிணைத்துக்கட்டி, 13முதலில் அவரை அன்னா என்பவனிடம் கொண்டுபோனார்கள். இந்த அன்னா, அந்த வருடத்துக்குரிய தலைமை மதகுருவான காய்பாவின் மாமன். 14“மக்களுக்காக ஒரு மனிதன் மரணிப்பது நல்லது” என்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன், இந்தக் காய்பாவே.
பேதுருவின் முதல் மறுதலிப்பு
15சீமோன் பேதுருவும் இன்னொரு சீடனும் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அந்தச் சீடன் தலைமை மதகுருவுக்கு அறிமுகமானபடியால், அவன் இயேசுவுடனே தலைமை மதகுருவின் வீட்டு முற்றத்திற்குள் சென்றான். 16ஆனால் பேதுருவோ வெளியே வாயில் அருகே நிற்க வேண்டியதாயிருந்தது. தலைமை மதகுருவுக்கு அறிமுகமான மற்றச் சீடன் திரும்பி வந்து, வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த பெண்ணுடன் பேசி, பேதுருவை உள்ளே அழைத்துச் சென்றான்.
17வாசலில் இருந்த அந்த பணிப்பெண் பேதுருவிடம், “நீயும் அந்த மனிதனின் சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்றாள்.
அதற்கு அவன், “நான் அவர்களில் ஒருவனல்ல” என்றான்.
18அங்கே குளிராய் இருந்தபடியால், அங்கேயிருந்த வேலைக்காரரும் காவலாளர்களும் குளிர்காயும்படி நெருப்பு மூட்டி அதைச் சுற்றி நின்றார்கள். பேதுருவும் அங்கே அவர்களுடன் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.
தலைமை மதகுரு முன் இயேசு
19அவ்வேளையில் தலைமை மதகுரு, இயேசுவிடம் அவரது சீடர்களைக் குறித்தும் அவருடைய போதனையைக் குறித்தும் விசாரணை செய்தான்.
20இயேசு அவனுக்கு சொன்னதாவது: “நான் உலகத்துடன் பகிரங்கமாகப் பேசினேன். யூதரெல்லோரும் ஒன்றுகூடி வருகின்ற, யூத மன்றாடும் ஆலயங்களிலும்#18:20 யூத மன்றாடும் ஆலயங்களிலும் சினகோக் எருசலேம் ஆலயத்திலும் எப்போதும் போதித்தேன். நான் இரகசியமாய் எதையும் பேசவில்லை. 21நீங்கள் ஏன் என்னிடம் கேள்வி கேட்கின்றீர்கள்? நான் என்ன சொன்னேன் என்பதை, அதைக் கேட்டவர்களிடம் விசாரியுங்கள். நான் என்ன சொன்னேன் என்பது நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும்.”
22இயேசு இப்படியாக சொன்னபோது, அருகே நின்ற காவலாளி ஒருவன் தன் கையால் அவர் முகத்தில் அறைந்து, “தலைமை மதகுருவுக்கு இவ்விதமாகவா பதில் சொல்வது?” என்றான்.
23அதற்கு இயேசு, “நான் பேசியது தவறாயிருந்தால், தவறு என்ன என்பதைச் சொல். நான் பேசியது உண்மையானால், நீ ஏன் என்னை அடித்தாய்?” என்றார். 24அப்போது அன்னா, அவரை பிணைத்துக் கட்டப்பட்டவராகவே தலைமை மதகுருவான காய்பாவிடம் அனுப்பினான்.
பேதுரு இரண்டாம் மூன்றாம் முறை மறுதலித்தல்
25சீமோன் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கையில் சிலர் அவனிடம், “நீ அவனுடைய சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்று கேட்டார்கள்.
“நான் சீடன் அல்ல” என்று பேதுரு மறுதலித்தான்.
26தலைமை மதகுருவின் வேலைக்காரரில் ஒருவன், பேதுருவினால் காது வெட்டப்பட்டவனின் உறவினன். அந்த உறவினன் பேதுருவிடம், “நீ இயேசுவுடனே அந்தத் தோட்டத்தில் இருந்ததை நான் காணவில்லையா?” என்றான். 27அப்போது பேதுரு மீண்டும் மறுதலித்தான். அவ்வேளையில் உடனே சேவல் கூவிற்று.
பிலாத்துவின் முன் இயேசு
28பின்பு அவர்கள் இயேசுவை காய்பாவிடமிருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள். இதற்குள்ளாகப் பொழுது விடிந்துவிட்டது. பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு தங்களை தீட்டுபடாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதால், அவர்கள் அரண்மனைக்குள் போகவில்லை. 29எனவே பிலாத்து வெளியே வந்து, “இந்த மனிதனுக்கு விரோதமாய், என்ன குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவந்திருக்கின்றீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டான்.
30அதற்கு அவர்கள், “இவன் குற்றவாளியாய் இல்லாதிருந்தால், நாங்கள் இவனை உம்மிடம் ஒப்படைத்திருக்க மாட்டோம்” என்றார்கள்.
31அப்போது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் உங்கள் நீதிச்சட்டத்தின்படி இவனுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குங்கள்” என்றான்.
அதற்கு அவர்கள், “யாருக்கும் மரணதண்டனை வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார்கள். 32தமக்கு எவ்விதமான மரணம் ஏற்படப் போகின்றது என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறும்படி இவையெல்லாம் நடந்தது.
33பின்பு பிலாத்து அரண்மனைக்குள்ளே போய், இயேசுவை வரவழைத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான்.
34அதற்கு இயேசு, “இதை நீராகவே கேட்கின்றீரா? அல்லது மற்றவர்கள் உம்மிடம் என்னைக் குறித்து இப்படிச் சொன்னார்களா?” என்று கேட்டார்.
35அப்போது பிலாத்து, “நான் என்ன ஒரு யூதனா? உனது மக்களும் உனது பிரதான மதகுருக்களுமே உன்னை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நீ செய்தது என்ன?” என்று கேட்டான்.
36அதற்கு இயேசு, “நான் இந்த உலகத்துக்குரிய அரசன் அல்ல. அவ்வாறு இருந்தால் யூதர்களிடம் நான் கையளிக்கப்படுவதைத் தடுக்க, எனது ஊழியக்காரர்களே போராடியிருப்பார்கள். எனது இராச்சியமோ வேறு இடத்தைச் சேர்ந்தது” என்றார்.
37அதற்கு பிலாத்து, “அவ்வாறெனில், நீ ஒரு அரசன் அல்லவா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நான் ஒரு அரசன் என்று நீரே சொல்கின்றீர். சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கும்படி நான் பிறந்தேன். அதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். சத்தியத்திற்கு உரியவர்கள் ஒவ்வொருவரும் நான் சொல்வதை கவனித்துக் கேட்கின்றார்கள்” என்றார்.
38அதற்கு பிலாத்து, “சத்தியம் என்றால் என்ன?” என்று கேட்டான். அவ்விதம் கேட்ட பின்னர் அவன் மறுபடியும் வெளியே போய் யூதர்களிடம், “அவனிடத்தில் நான் எந்த குற்றத்தையும் காணவில்லை. 39ஆகவே பஸ்கா பண்டிகையின்போது ஒருவனை நான் உங்களுக்காக விடுதலை செய்வது வழக்கமல்லவா? எனவே ‘யூதரின் அரசனை’ நான் விடுதலை செய்யவேண்டும் என்று விரும்புகின்றீர்களா?” என்று கேட்டான்.
40அதற்கு அவர்களோ, “இல்லை, அவனை அல்ல! பரபாசை விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். அந்த பரபாஸ் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஒருவன்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

யோவான் 18: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល