36
ஏசாவின் சந்ததி
1ஏதோம் என்று அழைக்கப்படும் ஏசாவின் குடும்ப வரலாறு:
2ஏசா கானான் நாட்டுப் பெண்களிலிருந்து தனக்கு மனைவியரை எடுத்துக்கொண்டான். அதன்படி, ஏத்தியனான ஏலோனின் மகள் ஆதாளையும், ஏவியனான சிபெயோனின் பேத்தியும் ஆனாவின் மகளுமான ஒகோலிபாமாவையும் அவன் திருமணம் செய்தான். 3அத்துடன் இஸ்மவேலின் மகளும் நெபாயொத்தின் சகோதரியுமான பாசெமாத்தையும் மனைவியாக்கிக் கொண்டான்.
4ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாஸைப் பெற்றெடுத்தாள், பாசெமாத் ரெகுயேலைப் பெற்றெடுத்தாள். 5ஒகோலிபாமா யெயூஷ், யாலாம், கோரா ஆகியோரைப் பெற்றெடுத்தாள். கானான் நாட்டில் ஏசாவுக்கு பிறந்த மகன்மார் இவர்களே.
6ஏசா தன் மனைவியர், மகன்மார், மகள்மார் ஆகியோரோடு, தன் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்துக்கொண்டு, கால்நடைகள், மற்றைய மிருகங்கள், கானானில் தான் சம்பாதித்த பொருட்கள் யாவற்றோடும், தன் தம்பி யாக்கோபை விட்டுச் சற்றுத் தொலைவிலுள்ள நாட்டுக்குப் போனான். 7ஏனெனில் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ முடியாதபடி அவர்களுடைய உடைமைகள் அதிகமாக இருந்தன; அவர்களுக்கு அதிகமான கால்நடைகள் இருந்தமையால், அவர்கள் வாழ்ந்த அந்த நிலப்பகுதி அவர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. 8ஆதலால் ஏதோம் என்னும் ஏசா, சேயீர் மலைநாட்டில் குடியேறினான்.
9சேயீர் மலைநாட்டில் குடியிருந்த ஏதோமியரின் தந்தையான ஏசாவின் குடும்ப வரலாறு.
10ஏசாவின் மகன்மாரின் பெயர்கள் இவையே:
ஏசாவின் மனைவியான ஆதாளின் மகன் எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பாசெமாத்தின் மகன் ரெகுயேல்.
11எலிப்பாஸின் மகன்மார்:
தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். 12ஏசாவின் மகன் எலிப்பாசுக்கு திம்னா என்னும் ஒரு மறுமனைவி இருந்தாள்; அவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள். இவர்கள் ஏசாவின் மனைவி ஆதாளின் பேரன்மார்.
13ரெகுயேலின் மகன்மார்:
நகத், சேரா, ஷம்மா, மீசா. இவர்கள் ஏசாவின் மனைவி பாசெமாத்தின் பேரன்மார்.
14சிபெயோனின் பேத்தியும் ஆனாவின் மகளுமான ஒகோலிபாமா ஏசாவுக்குப் பெற்றெடுத்த மகன்மார்:
யெயூஷ், யாலாம், கோரா என்பவர்கள்.
15ஏசாவின் சந்ததிகளில் வந்த கோத்திரத் தலைவர்கள்:
ஏசாவின் மூத்த மகனான எலிப்பாஸின் மகன்மார்:
தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், 16கோரா, கத்தாம், அமலேக்கு என்பவர்கள். ஏதோம் நாட்டிலுள்ள எலிப்பாஸின் வழிவந்த கோத்திரத் தலைவர்கள் இவர்களே. இவர்கள் ஆதாளின் பேரன்மார்.
17ஏசாவின் மகன் ரெகுயேலின் மகன்மார்:
கோத்திரத் தலைவர்களான நகத், சேரா, ஷம்மா, மீசா ஆகியோர். இவர்கள் ஏதோம் நாட்டிலுள்ள ரெகுயேலின் வழிவந்த கோத்திரத் தலைவர்கள்; இவர்கள் ஏசாவின் மனைவி பாசெமாத்தின் பேரன்மார்.
18ஏசாவின் மனைவி ஒகோலிபாமாளின் மகன்மார்:
கோத்திரத் தலைவர்களான யெயூஷ், யாலாம், கோரா ஆகியோர். இவர்கள் ஆனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமான ஒகோலிபாமாவின் வழிவந்தவர்கள்.
19ஏதோம் என்னும் ஏசாவின் மகன்மார் இவர்களே. இவர்கள் அவர்களின் கோத்திரத் தலைவர்கள்.
20அந்த நிலப்பரப்பில்#36:20 நிலப்பரப்பில் – ஏதோமியரின் நிலப்பரப்பு வாழ்ந்துகொண்டிருந்த ஓரியர் என்ற இனத்தவரான சேயீரின் மகன்மார்:
லோத்தான், சோபால், சிபெயோன், ஆனா, 21திஷோன், ஏசேர், திஷான். ஏதோமிலிருந்த சேயீரின் இந்த மகன்மார் ஓரியரின் கோத்திரத் தலைவர்கள் ஆவர்.
22லோத்தானின் மகன்மார்:
ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னா லோத்தானின் சகோதரி.
23சோபாலின் மகன்மார்:
அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
24சிபெயோனின் மகன்மார்:
ஆயா, ஆனா என்பவர்கள். இந்த ஆனாவே தன் தந்தை சிபெயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, பாலைவனத்திலே வெந்நீர் ஊற்றுக்களைக்#36:24 வெந்நீர் ஊற்றுக்களை – இதற்குக் கழுதைகள் என்ற அர்த்தமும் உண்டு கண்டுபிடித்தவன்.
25ஆனாவின் பிள்ளைகள்:
திஷோன், ஆனாவின் மகளான ஒகோலிபாமா என்பவர்கள்.
26திஷோனுடைய மகன்மார்:
எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான் என்பவர்கள்.
27ஏசேருடைய மகன்மார்:
பில்கான், சாவன், அக்கான் என்பவர்கள்.
28திஷானுடைய மகன்மார்.
ஊஸ், அரான் என்பவர்கள்.
29ஓரியரின் கோத்திரத் தலைவர்கள்:
லோத்தான், சோபால், சிபெயோன், ஆனா, 30திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள்.
இவர்கள் சேயீர் நாட்டில் தங்கள் ஓரியர் தலைமுறையின்படி கோத்திரத் தலைவர்களாய் இருந்தார்கள்.
ஏதோமின் ஆளுநர்கள்
31இஸ்ரயேல் மக்களை அரசர் எவரும் ஆட்சி செய்ய முன்னர் ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்:
32பேயோரின் மகன் பேலா ஏதோமில் அரசனானான். அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
33பேலா மரணித்த பின்பு, போஸ்றாவைச் சேர்ந்த சேராவின் மகன் யோபாப் அவனுக்குப் பின்னர் அரசனானான்.
34யோபாப் மரணித்த பின்பு, அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
35உஷாம் மரணித்த பின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை தோல்வியுறச் செய்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
36ஆதாத் மரணித்த பின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
37சம்லா மரணித்த பின்பு, யூப்ரட்டீஸ்#36:37 யூப்ரட்டீஸ் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. நதியின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
38சாவூல் மரணித்த பின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்-கானான் அரசனானான்.
39அக்போருடைய மகனாகிய பாகால்-கானான் மரணித்த பின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மே-சகாப்பின் பேத்தியுமாவாள்.
40பெயர்களுக்கும், தலைமுறைகளுக்கும் மற்றும் நிலப்பரப்புக்கும் அமைவாக ஏசாவின் வழிவந்த கோத்திரத் தலைவர்கள்:
திம்னா, அல்வா, யேதேத்,
41ஒகோலிபாமா, ஏலா, பினோன்,
42கேனாஸ், தேமான், மிப்சார்,
43மக்தியேல், ஈராம் என்பவர்களாவர்.
அவர்கள் குடியேறிய நாட்டில் அவர்களின் குடியிருப்புகளின்படி ஏதோமின் கோத்திரத் தலைவர்கள் இவர்களே.
இவையே ஏசாவின் சந்ததியின் வரலாறு, இவன் ஏதோமியருக்குத் தந்தை.