ஆதியாகமம் 24

24
ஈசாக்கு, ரெபெக்காளின் திருமணம்
1ஆபிரகாம் வயது முதிர்ந்தவர் ஆனார்; கர்த்தர் எல்லாவிதத்திலும் அவரை ஆசீர்வதித்திருந்தார். 2ஆபிரகாம் தன் வீட்டிலுள்ள யாவற்றுக்கும் பொறுப்பாயிருந்த தலைமைப் பணியாளனிடம், “நீ என் தொடையின் கீழ் உன் கையை வைத்து, 3பரலோகத்துக்கு இறைவனும், பூமிக்கு இறைவனுமாகிய கர்த்தரின் பெயரால் எனக்குச் சத்தியம் செய்யவேண்டும். நான் வசிக்கும் இந்த கானானியர்களினது மகள்மாரில் எந்த ஒரு பெண்ணையும் என் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்றும், 4என் நாட்டுக்கும், என் உறவினரிடத்துக்கும் போய், என் மகன் ஈசாக்குக்கு அங்கிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்றும் சத்தியம் செய்யவேண்டும்”#24:4 மாற்ற முடியாத ஒரு சத்தியத்தை செய்ய, அக்காலத்தில் இந்தவிதமான சத்தியத்தை மக்கள் செய்து வந்தனர். என்றார்.
5அப்போது அந்த பணியாளன், “அங்கே நான் தெரிந்தெடுக்கும்#24:5 அங்கே நான் தெரிந்தெடுக்கும் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. பெண், ஒருவேளை என்னுடன் இந்த நாட்டுக்கு#24:5 இந்த நாட்டுக்கு கானான் வர விரும்பவில்லை என்றால், நீர் விட்டுவந்த அந்த நாட்டிற்கே#24:5 அந்த நாட்டிற்கே மெசொப்பொத்தாமியா உம்முடைய மகன் ஈசாக்கை அழைத்துச் செல்ல வேண்டுமா?” என்று கேட்டான்.
6அதற்கு ஆபிரகாம், “என் மகனை திரும்பவும் அந்த இடத்துக்கு அழைத்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இரு. 7என் தந்தை வீட்டிலிருந்தும், நான் பிறந்த நாட்டிலிருந்தும் என்னை அழைத்த பரலோகத்தின் இறைவனாகிய கர்த்தர் என்னிடம் பேசி, எனக்கு ஆணையிட்டு, ‘உனக்கும் உன் சந்ததிக்கும் இந்த நாட்டைக் கொடுப்பேன்’ என்று வாக்குறுதி அளித்துள்ளார். ஆதலால், என் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க ஒரு பெண்ணை நீ அங்கிருந்து எடுக்கத்தக்கதாக, அவர் தமது தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார். 8அந்தப் பெண் இங்கு வர விரும்பவில்லை என்றால், நீ எனக்குச் செய்து கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய். என் மகனை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கே திரும்பிச் செல்லாதே” என்றார். 9அவ்வாறே அந்தப் பணியாளன் தன் கையை தன் எஜமான் ஆபிரகாமின் தொடையின் கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக் குறித்து சத்தியம் செய்தான்.
10பின்பு அந்த பணியாளன் ஆபிரகாமிடமிருந்து அனைத்து வகையான உயர்தரமான பொருட்களையும், ஆபிரகாமுடைய பத்து ஒட்டகங்கள்மீது ஏற்றிக்கொண்டு, ஆராம்-நகராயிம் வழியாகச் சென்று, நாகோர் பட்டணத்தை வந்தடைந்தான்.#24:10 இது சுமார் 800 கிலோ மீற்றர் தொலை தூரப் பயணம். 11அவன் பட்டணத்துக்கு வெளியே இருந்த ஒரு கிணற்றருகே தன் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக அவற்றை மண்டியிடச் செய்தான்; அந்நேரமானது, பெண்கள் தண்ணீர் அள்ளிச் செல்வதற்காக வருகின்ற மாலை வேளையாக இருந்தது.
12அவன், “கர்த்தரே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, இன்று எனக்கு வெற்றியைத் தந்து, என் எஜமான் ஆபிரகாமுக்கு நிலையான அன்பைக் காட்டுவீராக. 13இதோ நான் இந்த நீரூற்றின் அருகில் நிற்கின்றேன், இந்த நகரத்து மக்களின் மகள்மார் தண்ணீர் அள்ளுவதற்கு வருகின்றார்கள். 14நான் இங்கு வரும் ஒரு பெண்ணிடம், ‘உன் குடத்தைச் சரித்து நான் குடிக்கும்படி தண்ணீர் ஊற்று’ என்று சொல்வேன். அப்போது, ‘தாராளமாக அருந்துங்கள், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர்#24:14 ஒட்டகங்களுக்கும் தண்ணீர் – ஒரு ஒட்டகம் சுமார் 90 லீட்டர் அளவு நீர் அருந்தும். ஊற்றுவேன்’ என்று சொல்கிறவள் யாரோ, அவளே உமது அடியவனாகிய ஈசாக்குக்கு நீர் தெரிவுசெய்த பெண்ணாயிருக்கட்டும். இதனால் என் எஜமான் ஆபிரகாமுக்கு நிலையான அன்பைக் காண்பித்தீர் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்று தனக்குள் மன்றாடினான்.
15அவன் மன்றாடி முடிக்க முன்பே, ரெபேக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்தாள். அவள் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்கும், அவன் மனைவி மில்காளுக்கும் மகனான பெத்துவேலின் மகள். 16அவள் மிகவும் அழகுடையவளும், ஒருவனுடனும் உறவுகொள்ளாத கன்னிப்பெண்ணாகவும் இருந்தாள். அவள் நீரூற்றின் மட்டத்துக்கு இறங்கிச் சென்று, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு மேலே ஏறி வந்தாள்.
17ஆபிரகாமின் பணியாளன் அவளை சந்திக்கும்படி விரைந்து சென்று, “தயவுசெய்து உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுப்பாயாக” என்றான்.
18உடனே அவள், “ஆண்டவனே, அருந்துங்கள்” என்று சொல்லி, விரைவாய் குடத்தை இறக்கி அதைக் கையில் பிடித்து அவனுக்கு அருந்தக் கொடுத்தாள்.
19அவள் அவனுக்கு அருந்தக் கொடுத்தபின், “உமது ஒட்டகங்கள் குடித்துத் தீரும்வரை அவற்றுக்கும் தண்ணீர் அள்ளிக் கொடுப்பேன்” என்றாள். 20அவள் தன் குடத்திலிருந்த தண்ணீரை விரைவாய்த் தொட்டிக்குள் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் அள்ளுவதற்காக ஊற்றின் அருகே ஓடி, அவனுடைய அனைத்து ஒட்டகங்களுக்கும் தண்ணீர் அள்ளி ஊற்றினாள். 21அந்த பணியாளன், தான் வந்த பயணத்தை கர்த்தர் வெற்றியடையச் செய்தாரோ இல்லையோ என்று அறிவதற்காக, ஒன்றும் பேசாமல் அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
22ஒட்டகங்கள் தண்ணீர் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் ஒரு பெக்கா#24:22 சுமார் 5.7 கிராம். நிறையுள்ள தங்க மூக்குத்தியையும், பத்து சேக்கல்#24:22 சுமார் 115 கிராம். நிறையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் அவளுக்குக் கொடுத்தான்.#24:22 அவளுக்குக் கொடுத்தான் – எபிரேய மொழியில் வெளியே எடுத்தான் என்றுள்ளது. ஆதி. 24:30 க்கு அமைவாக, “கொடுத்தான்” எனத் தரப்பட்டுள்ளது. 23பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள்? இரவு தங்குவதற்காக உன் தந்தை வீட்டில் எங்களுக்கு இடமுண்டா? தயவுசெய்து எனக்குச் சொல்” என்றான்.
24அவள் அவனுக்குப் பதிலளித்து, “நான், நாகோருக்கு மில்காள் பெற்றெடுத்த மகனான பெத்துவேலின் மகள்” என்றாள். 25மேலும் அவள், “எங்களிடத்தில் போதியளவு வைக்கோலும், ஒட்டகத்துக்குத் தீனியும், இரவில் தங்குவதற்கு இடமும் உள்ளன” என்றாள்.
26உடனே அந்த பணியாளன் தலைதாழ்த்தி கர்த்தரை வழிபட்டு, 27“என் எஜமான் ஆபிரகாமின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாகட்டும். என் எஜமானுக்கு அவர் தமது நிலையான அன்பையும் உண்மையையும் காட்டாமல் இருக்கவில்லை. கர்த்தர் என்னை என் எஜமானின் உறவினர் வீட்டுக்கு வழிநடத்தி வந்திருக்கிறார்” என்றான்.
28அப்பெண் ஓடிப் போய், நடந்தவற்றைத் தன் தாயின் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னாள். 29ரெபேக்காளுக்கு லாபான் என்னும் பெயருடைய ஒரு அண்ணன் இருந்தான். அவன் நீரூற்றருகே நின்ற அம்மனிதனை சந்திக்க விரைந்து சென்றான். 30தன் தங்கையின் மூக்குத்தியையும், கைகளிலிருந்த வளையல்களையும்#24:30 மூக்குத்தியையும், கைகளிலிருந்த வளையல்களையும் – இவை அக்காலத்தில் ஒரு தொழிலாளியின் பல வருட சம்பளத்தின் பெறுமதி. லாபான் கவனித்திருந்தான். மேலும், “இதுதான் அந்த மனிதன் என்னிடம் கூறியது” என ரெபேக்காள் சொன்னவற்றைக் கேட்டதும், உடனடியாக விரைந்து சென்ற லாபான், நீரூற்றின் அருகே ஒட்டகங்களோடு அம்மனிதன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். 31லாபான் அந்த மனிதனிடம், “கர்த்தரினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் ஏன் இங்கே வெளியே நிற்கின்றீர்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்கு உரிய இடத்தையும் ஆயத்தப்படுத்தியிருக்கின்றேன்” என்றான்.
32எனவே அந்த மனிதன் லாபானுடன் வீட்டுக்குப் போனான், ஒட்டகங்களின் சுமைகள் இறக்கப்பட்டன. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீனியும் கொண்டுவரப்பட்டன. பின்பு அம்மனிதனுக்கும் அவனோடு வந்தவர்களுக்கும் கால்களைக் கழுவத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. 33அதன் பின்னர் அவனுக்கு முன்பாக உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அவனோ, “நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்கும்வரை உணவருந்த மாட்டேன்” என்றான்.
அதற்கு லாபான், “அவ்வாறானால் அதை எங்களுக்குச் சொல்வீராக” என்றான்.
34அதற்கு அவன், “நான் ஆபிரகாமின் பணியாளன். 35கர்த்தர் என் எஜமானை நிறைவாக ஆசீர்வதித்ததனால், அவர் செல்வந்தராக இருக்கின்றார். கர்த்தர் அவருக்கு அநேக செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், பணியாளர்களையும், பணிப்பெண்களையும், வெள்ளியையும், தங்கத்தையும் கொடுத்திருக்கிறார். 36என் எஜமானின் மனைவி சாராள் தன் முதிர்வயதில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள், மேலும் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அவர் தன் மகனுக்கே கொடுத்திருக்கிறார். 37என் எஜமான் என்னை ஆணையிட்டுச் சத்தியம் பண்ணச் செய்து, ‘நான் வசிக்கும் நாட்டிலுள்ள கானானியரின் மகள்மாரில் இருந்து ஒரு பெண்ணை, நீ என் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்றும், 38என் தந்தை குடும்பத்தினரிடமும், என் சொந்த உறவினர்களிடமும் சென்று என் மகனுக்கு ஒரு மனைவியை எடுக்க வேண்டும்’ என்றும் கூறினார்.
39“அப்போது நான் என் எஜமானிடம், ‘அந்தப் பெண் என்னுடன் வரச் சம்மதியாவிட்டால்?’ என்று கேட்டேன்.
40“அதற்கு அவர், ‘நான் கர்த்தருக்கு முன் உண்மையாய் நடக்கின்றேன், அவர் தமது தூதனை உன்னுடன் அனுப்பி, உன்னுடைய பயணத்தை வெற்றியடையச் செய்வார். என் தந்தையின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் என் சொந்த உறவினர்களிடமும் சென்று, நீ என் மகனுக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பாயாக. 41நீ என் சொந்த உறவினர்களிடம் போகும்போது, என் ஆணையிலிருந்து விடுபடுவாய்; அவர்கள் பெண் கொடுக்க மறுத்தாலும், நீ எனக்குக் கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய்’ என்றார்.
42“இன்று நான் நீரூற்றருகே வந்தபோது, ‘கர்த்தரே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, உமக்கு விருப்பமானால் நான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்வீராக. 43இதோ, நான் இந்த நீரூற்றருகே நிற்கின்றேன். தண்ணீர் அள்ளுவதற்காக ஒரு இளம்பெண் வருவாளானால், நான் அவளிடம், “உன் குடத்திலிருந்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்கும்போது, 44அவள், “அருந்திடுவீர், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் அள்ளிக் குடிக்கக் கொடுப்பேன்” என்று சொல்வாளானால், அவளே என் எஜமானின் மகனுக்கு கர்த்தர் நியமித்த பெண்ணாய் இருக்கட்டும்’ என்று மன்றாடினேன்.
45“இவ்வாறு நான் என் இருதயத்தில் மன்றாடி முடிக்கும் முன்னர், ரெபேக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்து, நீரூற்றுக்கு அருகில் இறங்கிச் சென்று தண்ணீர் அள்ளினாள். அப்போது நான் அவளிடம், ‘அருந்துவதற்கு எனக்குத் தண்ணீர் தா’ என்று கேட்டேன்.
46“அவள் விரைவாக தன் தோளிலிருந்த குடத்தை இறக்கி, ‘அருந்திடுவீர், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் குடிக்கக் கொடுப்பேன்’ என்று சொன்னாள். அவ்வாறே நான் அருந்தினேன், என் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் குடிக்கக் கொடுத்தாள்.
47“அப்போது நான் அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன்.
“அதற்கு அவள், ‘நாகோருக்கு மில்காள் பெற்றெடுத்த மகனான, பெத்துவேலின் மகள்’ என்றாள்.
“அப்போது நான் அவளுக்கு மூக்குத்தியையும் வளையல்களையும் கொடுத்தேன். 48பின்பு நான் தலைகுனிந்து, கர்த்தரை வழிபட்டு, என் எஜமானின் சகோதரனுடைய பேத்தியை அவருடைய மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கேற்ற, சரியான வழியில் என்னை நடத்திய என் எஜமான் ஆபிரகாமின் இறைவனைத் துதித்தேன். 49ஆகவே, நீங்கள் என் எஜமானுக்குத் தயவாகவும், உண்மையாகவும் நடக்க விரும்பினால் எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றாலும் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்போது எப்பக்கம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்றான்.
50அதற்கு லாபானும் பெத்துவேலும், “இது கர்த்தரினால் வந்த காரியம்; இதில் நாங்கள் நன்மை தீமை என்று தீர்மானிப்பதற்கு ஒன்றும் இல்லை. 51இதோ ரெபேக்காள் உமக்கு முன்பாக இருக்கின்றாள்; அவளை நீர் அழைத்துக்கொண்டு செல்லும், கர்த்தர் சொன்னபடி இவள் உமது எஜமானின் மகனுக்கு மனைவியாகட்டும்” என்றார்கள்.
52ஆபிரகாமின் பணியாளன் அவர்கள் சொன்னதைக் கேட்டதும், கர்த்தருக்கு முன்பாக தரை மட்டும் குனிந்து வழிபட்டான். 53அதன் பின்னர் அந்தப் பணியாளன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், உடைகளையும் கொண்டுவந்து ரெபேக்காளுக்குக் கொடுத்து, பெறுமதிமிக்க ஆபரணங்களை அவளது சகோதரனுக்கும் தாய்க்கும் கொடுத்தான். 54பின்பு அவனும் அவனோடு வந்த ஆட்களும் உண்டு குடித்து, அன்றிரவு அங்கே தங்கினார்கள்.
மறுநாள் காலையில் அவர்கள் எழுந்ததும் அவன், “என் எஜமானிடத்துக்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.
55ஆனால் ரெபேக்காளின் அண்ணனும், தாயும், “பத்து நாட்களுக்காவது பெண் எங்களுடன் தங்கியிருக்கட்டும்; அதன் பின்னர் போகலாம்” என்றார்கள்.
56அதற்கு அவன், “கர்த்தர் என் பயணத்தின் நோக்கத்தை நிறைவேறச் செய்தபடியால், என்னைத் தடுத்து நிறுத்த வேண்டாம். என் எஜமானிடம் நான் போவதற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.
57அப்போது அவர்கள், “நாம் பெண்ணை அழைத்து, அவள் சொல்வதை கேட்போம்” என்றார்கள். 58அதன் பின்னர் ரெபேக்காளை அழைத்து, “நீ இந்த மனிதனுடன் போகின்றாயா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவள், “ஆம் போகின்றேன்” என்றாள்.
59எனவே அவர்கள், தமது சகோதரி ரெபேக்காளை, அவளது தாதியோடும், ஆபிரகாமின் பணியாளனுடனும், அவனுடன் வந்த ஆட்களோடும் வழியனுப்பி வைத்தார்கள். 60அவர்கள் ரெபேக்காளை ஆசீர்வதித்து சொன்னதாவது,
“எங்கள் சகோதரியே,
நீ ஆயிரம் பத்தாயிரமாகப் பெருகுவாயாக;
உன் சந்ததியினர் தங்கள் எதிரிகளின் நகரங்களைத்
தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வார்களாக.”
61பின்பு ரெபேக்காளும் அவளது தோழியரும் ஆயத்தமாகி, ஒட்டகங்களின்மீது ஏறி, அந்த மனிதனுடன் போனார்கள். இவ்விதம் அந்த பணியாளன் ரெபேக்காளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
62அந்நாட்களில் ஈசாக்கு பீர்-லகாய்-ரோயி என்ற இடத்திலிருந்து வந்து, நெகேப் பகுதியில் தங்கியிருந்தான். 63ஒரு மாலை நேரத்தில் ஈசாக்கு தியானம் செய்வதற்காக#24:63 தியானம் செய்வதற்காக – சில மொழிபெயர்புகளில் நடப்பதற்காக என்றுள்ளது. புல்வெளிக்குச் சென்று அங்கே நிமிர்ந்து பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டான். 64ரெபேக்காளும் நிமிர்ந்து பார்த்து, ஈசாக்கைக் கண்டாள். உடனே அவள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினாள். 65அவள் அந்தப் பணியாளனிடம், “நம்மைச் சந்திப்பதற்காக புல்வெளியில் வந்துகொண்டிருக்கும் அந்த மனிதன் யார்?” என்று கேட்டாள்.
அதற்கு அவன், “அவர்தான் என் எஜமான்” என்றான். உடனே அவள் முகத்திரையை எடுத்துத் தன்னை மூடிக்கொண்டாள்.
66பணியாளன் தான் செய்த எல்லாவற்றையும் ஈசாக்கிடம் சொன்னான். 67ஈசாக்கு ரெபேக்காளைத் தன் தாய் சாராளின் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்று, அவளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு மனைவியானாள், அவன் அவளை நேசித்தான். தன் தாயின் மரணத்துக்குப்பின் ஏற்பட்ட துக்கத்திலிருந்து இப்படியாக அவனுக்கு ஆறுதல் கிடைத்தது.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 24: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល