குயவன் கரங்களில் பாண்டம்மாதிரி

நீ ஒரு விசேஷித்த பாத்திரம்!
நீ சரியான இடத்தில்தான் இருக்கிறாய்! குயவன் ஒரு விசேஷித்த பாத்திரத்தைத் தயாரிக்க ஒதுக்கி வைத்திருக்கும் களிமண் நீ.
நீ எத்தகைய செயல்பாட்டில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. சிலர் களிமண் மென்மையாகவும், வளைந்து கொடுக்கக் கூடியதாகவும் மாறும்படி தண்ணீர் தெளிக்கப்படும் செயல்பாட்டில் உள்ளனர். மற்றவர்கள் (மரொம்பா/ வனையும் சக்கரம்), வனையப்படும் தளத்துக்குச் செல்ல சரியான பதத்திற்கு மண்ணைப் பிசையும் செயல்முறையில் உள்ளனர். இன்னும் சிலர் ஏற்கனவே சுழன்றுகொண்டிருக்கிறார்கள், ஆண்டவர் மட்டுமே அவர்கள் சுழலும் வேகத்தை அறிவார் (பல விஷயங்களைப் புரிந்துகொள்ளாமலேயே சுழன்றுகொண்டிருக்கிறார்கள்). சிலர் குவளைகளின் வடிவத்தைப் பெற்று எழுகிறார்கள். சிலரை ஆண்டவர் மறுபடியும் வனைகிறார். மற்றவர்கள் உலர்த்தப்படும் காலத்தில் உள்ளனர். சிலர் அடுப்பில், ஆனால் குறைந்த வெப்பநிலையின் ஊடே கடந்து செல்கின்றனர். மற்றவர்கள் அதிகபட்ச வெப்பநிலையில் சுடப்படுகின்றனர். சிலர் ஏற்கனவே இந்த செயல்முறையைக் கடந்து சென்று தயார் நிலையில் உள்ளனர்.
தயாராக இருக்கும் குவளையைத் தட்டும்போது, அது ஒரு தனித்துவமான ஒலியை வெளியிடுகிறது. நீ அப்படிப்பட்டவர்களை நம்பலாம். அவர்கள் நம்பகமானவர்கள் (அவர்கள் சொல்லக்கூடாததைச் சொல்ல மாட்டார்கள்). அவர்கள் ஆண்டவரின் பார்வையில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்களாய் இருப்பார்கள், தங்கள் அண்டை வீட்டாரால் நற்சாட்சி பெற்றவர்களாய் இருப்பார்கள்.
அன்பரே, அவர் உனக்காகத் திட்டமிட்டபடியே நீ வாழ, குயவர் உன் வாழ்வில் கிரியை செய்யட்டும்.
குயவன் களிமண்ணை வனைவதுபோல, நம்முடைய அன்பான, ராஜரீகமுள்ள தேவன் உன்னைத் தொடர்ந்து வடிவமைக்கிறார். அவருடைய திட்டங்களிலிருந்து நீ விலகிச் சென்றாலும் அவர் உன்னைக் கைவிடுவதில்லை. மாறாக, அவர் பொறுமையுடன் கிருபையினால் உன்னை மறுபடியும் வனைகிறார், ஏனென்றால் குயவனின் திட்டமே எப்போதும் மிகச்சரியானது.
"இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா 18:6)
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவரின் வார்த்தையில் உள்ள ஐசுவரியத்தை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம், 18ஆம் அத்தியாயத்திற்கு நமது கவனத்தைத் திருப்புவோம், அங்கு ‘குயவன் கரங்களில் உள்ள பாண்டம்’ - என்ற இந்த வல்லமை வாய்ந்த, ஊக்கமளிக்கும் பத்தியை நாம் தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=potter
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்
