திட்ட விவரம்
பாரத்திலிருந்து விடுதலைமாதிரி
![பாரத்திலிருந்து விடுதலை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F42992%2F1280x720.jpg&w=3840&q=75)
வழி 3: ஜெபம்
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.
சங்கீதம் 18:6,16
* கண்ணீரோடு ஜெபம்
* இருதயத்தை ஊற்றி ஜெபம்
* பொருத்தனை ஜெபம்
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள். அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக:..நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ;... நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
1 சாமுவேல் 1:10 - 11 , 15
அன்னாள் தன் வாழ்க்கையில் வந்த நிந்தனையினால் மிகுந்த விசாரித்தினால் ஆலயத்திற்கு போய் கண்ணீரோடு இருதயத்தை ஊற்றி பொருத்தனை செய்து ஜெபம் பண்ணினாள். தேவன் அவள் மனத் அழுத்தத்திலிருந்து அவளை விடுவித்து அவள் செய்த ஜெபத்திற்கு பதில் அளித்தார்.
* உபவாச ஜெபம்-
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
எஸ்தர் 4:16 - 17
எஸ்தர் ராணி தன் யூத குலம் முழுவதும் அழியும் நிலையில் மூன்று நாள் உபவாசம் பண்ணினாள். இதன் விளைவாக தேவன் யூதகுலம் முழுவதும் காப்பாற்றினார். நாம் உடலை வறுத்து, உபவாசத்தில் தேவனை நோக்கி ஊக்கமாய் ஜெபிக்கும் போது எஸ்தரின் இக்கட்டை மாற்றினவர் நம் துயரத்தையும் மாற்றுவார். உபவாச ஜெபத்திற்கு மெய்யாகவே வல்லமை உண்டு.
இந்த திட்டத்தைப் பற்றி
![பாரத்திலிருந்து விடுதலை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F42992%2F1280x720.jpg&w=3840&q=75)
" எபிரெயர் 12:1 -..., மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற ...
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக India Revival Ministriesக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/