திட்ட விவரம்

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்மாதிரி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

7 ல் 5 நாள்

ஒழுக்கமாகஇருப்பதில்பயிற்சி

எந்த விளையாட்டையும் கவனிக்கும்போது, வெளியே தெரியாமல் அவர்கள் எடுத்திருக்கும் பெரும் பயிற்சி மற்றும் கடின முயற்சியானது விளையாட்டுத் திடலில் வெளிப்படுவதைக் காணலாம். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் விளையாட்டு மற்றும் திறமையின் அடிப்படையில் இந்த பயிற்சிகள் வேறுபடும். அவர்கள் சிறப்படைய மட்டுமல்ல ஒழுக்கமாக இருக்கவும் பயிற்சி பெறுகிறார்கள். ஒவ்வொருநாளும்ஒருகுறிப்பிட்டஅளவுமணிநேரம்அவர்கள்பயிற்சிசெய்யவேண்டும்.அத்துடன்கவனமாகஆயத்தம்செய்யப்பட்டஉணவையும்அவர்கள்உண்ணவேண்டும்.இவற்றைமாற்றிக்கொள்ளமுடியாது.ஒருகிறிஸ்தவருக்கு, பயிற்சிகளில் பெரும்பாலானவை தரிசு நிலமாகிய வனாந்தரத்தில் தான் நடக்கின்றன. நாம்முதிர்ச்சியில்வளரவும்கர்த்தர்நம்மைஅழைத்திருக்கிறதும் நமக்காகப் படைத்திருக்கிறதுமான எல்லாவற்றுக்குள்ளும் நாம் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காகவும் பயிற்றுவிக்கப்படுகிறோம்.

நாம்எடுத்துக்கொள்ளும்பயிற்சியானது நமது வாழ்வில் ஒழுக்கத்தைக் கொண்டுவரும். வனாந்தரமானது நம்மை ஒவ்வொரு நாளும் கூர்ந்து நோக்கும் கண்ணாடி வழியாகப் பார்க்க வைக்கும். நம் வாழ்வின் வெவ்வேறு பகுதிகளில் ஒழுக்கம் குறைவாக இருக்கும்பகுதிகளைக் கண்டுபிடிப்போம். நமதுஆன்மிகஒழுக்கங்களைத்தான்கர்த்தர்மறுமலர்ச்சிசெய்யவைக்கவிரும்புகிறார்.

ஆன்மிகஒழுக்கங்கள்பெரும்பாலும்கர்த்தரையும்உங்களையும்சுற்றியே இருந்து கொண்டிருக்கும். துவக்கத்தில்அதை வேண்டுமென்றே செய்ய வேண்டும், தொடர்ச்சியாகவும் செய்ய வேண்டும். ஒருதரமானஅமைதிநேரத்தைஒவ்வொருநாளும்கடைப்பிடிப்பதேசிறப்பானதுவக்கமாகும். ஆனாலும்அதுஎப்போதும்அதேஇடத்தில்நின்றுகொண்டிருக்கவேண்டியது இல்லை.கர்த்தரின் வார்த்தையை வாசிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி வைத்து, ஜெபத்தில் அவர் பேசுவதைக் கேட்கும் ஆன்மிக ஒழுக்கமானது கிறிஸ்தவ வாழ்வின் அனைத்து காலங்களிலும் முக்கியமானதாகும். இந்தஒழுக்கங்களைஉருவாக்கி வளரச்செய்ய வனாந்தர காலம் சிறப்பானதாகும். இவற்றைச் செய்வதால் கர்த்தரின் ஜீவன் தரும் ஆலோசனைகளையும் அவரது ஆசீர்வாதம் மற்றும் வெற்றி தரும் வாக்குத்தத்தங்களையும் கேட்க வேண்டும் என்பதுவே கர்த்தரின் ஆசையாக இருக்கிறது என்று சங்கீதம் 81 நமக்கு சொல்கிறது.

உங்களதுவாரந்தரவேலைத்திட்டத்தில்ஓய்வைஇணைத்துக்கொள்வதுஇன்னொருமுக்கியமானஒழுக்கமாகும்.அனைத்தையும்அறிந்தகர்த்தரேஓய்வுநாளைநியமித்திருக்கிறார்.ஒருவாரம்முழுமையாக வேலை செய்த பின்னர் நமதுஆவி,ஆன்மா, சரீரம் ஆகியவற்றுக்கு ஓய்வு எந்த அளவுக்கு அவசியம் என்பதை அறிந்திருப்பதால் தான் அவர் இந்தக் கட்டளையை நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்தஒழுக்கங்கள்வெறுமையான, மீண்டும்மீண்டும்செய்யக்கூடியகடமையாகப்போய்விடக் கூடாது. ஆனால் ஆழமாக கர்த்தருடன் தொடர்பு கொள்ளும் பொருள் உள்ள நேரங்களாக இருக்க வேண்டும். நானும் நீங்களும் இந்த ஆன்மிக ஒழுக்கங்களை வனாந்தர காலத்தில் துவங்கவில்லை என்றால், இவற்றை வரப்போகும் மற்ற காலங்களில் வளர்த்துக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகம் இல்லை.

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. ...

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்