BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் மாதிரி

தேவனின் துணை இல்லாமல் மனிதகுலம் எவ்வாறு அதன் சொந்த வழிகளைத் தேர்ந்தெடுத்து அதன் விளைவாக பாதிக்கப்பட்டது என்பதை வேதாகம வரலாறு காட்டுகிறது. ஆனால் தேவன் மனு மக்களோடு நெருக்கமாக இருக்க விரும்புகிறார், அவரிடமிருந்து பிரிவது எவ்வளவு வேதனையானது என்பதை அவர் அறிந்திருக்கிறார், எனவே அவர் நம்முடன் சமாதானம் செய்ய இயேசுவை அனுப்பினார். இயேசுவின் மூலமாக எல்லா காரியங்களும் மீண்டும் தேவனுடன் ஒப்புரவாக்கப்படும்.
வாசிக்கவும் :
கொலோசெயர் 1 : 19 - 23
சிந்திக்கவும்:
இந்த பகுதியின் படி, தேவன் என்ன செய்ய விரும்பினார், அதை எப்படி இயேசு மூலம் நிறைவேற்றினார்?
தேவன் மறுபடியும் அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில் இருப்பதற்கான ஒரு வழியை உருவாக்க இயேசு அனுபவித்த மற்றும் ஜெயித்த அனைத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். உங்களுடைய பிரமிப்பு மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்த உங்களின் யோசனைகள் ஒரு ஜெபமாக மாறட்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்கு BibleProject நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://bibleproject.com
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவர் சர்வவல்லவர்
