பெண்கள்
கனல் எரி: துணிச்சல்மிகு பிரார்த்தனைக்கு ஓர் எளிய வழிகாட்டுதல்
பரலோக பிதாவுடன் உறவு கொள்வதற்கான அற்புதமான வாய்ப்பாக ஜெபம் அமைகிறது. இந்த 6 நாள் திட்டத்தில், ஜெபம் பற்றி இயேசு நமக்கு என்ன கற்றுத் தந்தார் என்பதை நாம் கண்டறிவோம் மேலும் நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் தொடர்ந்து ஜெபம் செய்ய ஊக்குவிக்கப்படுவோம்.
தெளிவாக சிந்திக்க போதுமான இடம்
எல்லாவற்றையுமே செய்ய வேண்டுமென்று முயற்சிக்கும் காரணத்தால், எந்த விஷயத்திலும் விருப்பம் இல்லாதது போல நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? இந்த வாழ்க்கைப் பயணத்தில் விரும்பியவருடன் பற்பலவற்றை ஒரேநேரத்தில் செய்கிறோம். . .நீங்கள் திறமையாளர்தான். ஆனால் சோர்வடைந்துவிடுகிறீர்கள். அத்தகைய நேரத்தில் காற்றோட்டமான ஒரு அறை உங்களுக்கு சிறிது தேவைப்படும். ஒரு சாதாரணமான ஆனால் ஆச்சரியமான வரவேற்பின் மூலம், கர்த்தர் உங்களுடைய அதிவேகத்தை சமாதானம் நிறைந்த ஒன்றால் இறுதியாக மாற்றியமைக்க வழிவகை வழங்குகிறார். இந்த திட்டம் அதை எப்படியென காண்பிக்கும்.
நேசியுங்கள், தொடர்ந்து நேசியுங்கள்
அன்பை கொண்டாடுவது என்பது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு அப்பாற்பட்டது; கடவுளின் அன்பு குணப்படுத்தவும், மீட்டெடுக்கவும், அவருடைய நன்மையை அறிவிக்கும் ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்கவும் வந்தது என்பதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. அன்பு எதைப் பிரதிபலிக்கிறது மற்றும் கடவுள் விரும்புவதைப் போல மற்றவர்களை நேசிப்பது எப்படி இருக்கும் என்று மூன்று நாள் ஆய்வுக்கு செல்ல உங்களை அழைக்கிறேன்.
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
கானானியரின் ராஜா இஸ்ரவேலரை இருப்புக்கோலால் ஆண்ட பொழுது கர்த்தர் அவர்களை அழிக்க தமக்கென்று ஒரு சில மக்களை எழுப்பினார். அப்படியாக தேவனுடைய கரத்தில் ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்பட்டவள்தான் யாகேல் என்ற கூடாரவாசி! தேவன்நம்மையும் அவருடைய பணியில் உபயோகப்படுத்த முடியும் என்பதற்கு அவள் ஒரு எடுத்துக்காட்டு! நட்பு என்னும் பெயரில் தன்னுடைய கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவை அவள் அழித்தவிதம் நாம் சாத்தானுக்கு எவ்வாறு எதிர்த்து நிற்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்! இந்த 8 நாட்கள் திட்டம் நம்மை, தெபோராவின் காலத்தில் வாழ்ந்த இந்த பாலஸ்தீனிய கூடாரவாசியின் வாசலில், சிசெரா என்ற சாத்தானின் தலை நசுக்கப்பட்ட சம்பவத்தைக் காண அழைத்துச் செல்லும்!
தேர்ந்தெடுக்கப்பட்டவர் - கிறிஸ்துவில் உள்ள பெண்ணின் மறைக்கப்பட்ட உண்மை
பெண்களாகிய நாங்கள் பல்வேறு பாத்திரங்களை வாழ்க்கையில் சமன்படுத்துவதில் எப்போதும் ஆழ்ந்திருக்கிறோம். ஆனால் இந்த பிஸியான நேரத்தில், நம்முடைய ஆழமான அடையாளத்தை நினைவில் கொள்ளுவது முக்கியம்: தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் அல்லது கிறிஸ்துவின் பெண்கள். இந்த அடையாளம் நமது வாழ்க்கையின் அடித்தளம் ஆகும், அது தேவனுடனும் மற்றவர்களுடனும் நமது உறவுகளை உருவாக்குகிறது. இந்த அடையாளத்தை மேலும் விரிவாக ஆராய நாம் வரும் மூன்று நாட்களில் எங்களுடன் சேரவும்!
பாதுகாப்பாக இருப்பது போதும் என்ற மனம் வேண்டாம்
பாதுகாப்பின்மை, சந்தேகம் மற்றும் பயம் ஆகியவற்றின் குரல்கள் எதிர்கொள்ளப்படாவிட்டால், அவை உங்கள் வாழ்க்கையை ஆணையிடும். இந்த குரல்களை நீங்கள் மௌனமாக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது. இந்த 3-நாள் வாசிப்புத் திட்டத்தில், சாரா ஜேக்ஸ் ராபர்ட்ஸ் உங்கள் கடந்த கால வரம்புகளை எவ்வாறு மீறுவது மற்றும் தடுக்க முடியாததாக மாறுவதற்கு சங்கடமானவற்றை எவ்வாறு தழுவுவது என்பதைக் காட்டுகிறது.
வாழ்க்கை மாற்றப்பட்டது: அடையாளத்தைத் தழுவுதல்
நாம் யாராக இருக்க வேண்டும் என பல குரல்கள் சொல்கையில், நமது அடையாளத்தை குறித்து நாம் போராடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் நமது வேலையை வைத்தோ, திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கொண்டோ, நமது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுக்க விரும்பவில்லை. நம் வாழ்வில் அவருடைய கருத்தே உயரிய அதிகாரம் இருக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆறு நாள் திட்டம் வேதம் நீங்கள் யார் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அதை தழுவிக் கொள்ளவும் உதவும்.
தேவனுக்கு செவிக்கொடுத்தல்
ஏமி க்ரோஷெல் எழுதிய இந்த ஏழு நாள் வேதாகம திட்டம், நம் அன்பு பிதாவின் இருதயத்திலிருந்து நேராக உங்களுக்கு எழுதப்பட்டுருக்கிறது என்று நம்புகிறோம். அவர்களுடய ஜெபம், நீங்கள் எல்லா எதிர் சத்தங்களையும் தவிர்த்து அவரது குரலில் கவனம் செலுத்தி விழித்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறது.
பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்
சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது அல்லது இதுவாக இருந்தால் என்ன செய்வீர்கள்? பரிசுத்த யுதத்திற்குள் சேருங்கள்-கடின உழைப்பின் வாழ்க்கை மற்றும் நன்கு ஓய்வெடுக்கும் தேவனை கௌரவிக்கும் வழிகள்.