குணமாகுதல்
அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?
பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.
நிரம்பி வழிய 21 நாட்கள்
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
நீங்கள் இன்னும் முடிவை எட்டவில்லை
இலக்கை எட்டும் தூரம் பயணிக்க தேவையானது உங்களிடம் உள்ளதா?? நீண்ட தூர பயணத்திற்கான உங்கள் நோக்கத்தில் நடக்க தேவையானது? தொழில், உறவுகள், ஊழியம், ஆரோக்கியம் போன்ற எந்தவொரு முயற்சியின் நடுப்பகுதியும் பெரும்பாலும் நமது மீள்தன்மை மற்றும் விடாமுயற்சியை இழக்கும் போதுதான், அந்த நடு தருணங்கள் பெரும்பாலும் குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும். இந்த 5 நாள் தியானத்தில், கிறிஸ்டின் கெய்ன் நமக்கு வலிமை இருப்பதால் அல்ல, கடவுள் இருப்பதால் நாம் அவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை நினைவூட்டுகிறார்.
இளைப்பாறுதலைக் காணுதல்
'இளைப்பாறுதலைக் கண்டடைதல்' என்ற இந்த வாசிப்புத் திட்டமானது மத்தேயு 11:28-29-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுள்ளது. நீங்கள் அவரிடத்தில் வரும்போது, இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள் என்று இயேசு வாக்குப்பண்ணினார். சரீரத்திலோ, மனதிலோ, அல்லது உங்கள் உணர்விலோ நீங்கள் இளைப்பாறுதல் இன்றி இருப்பீர்களானால், உண்மையான இளைப்பாறுதலைக் கண்டடைய உங்களுக்கு உதவுவதே இந்தச் செய்திகளை உங்களுக்குக் கொண்டுவருவதன் நோக்கமாகும். இந்தத் தொடரை நாம் வாசிக்கத் தொடங்குவோம்!
பாரத்திலிருந்து விடுதலை
" எபிரெயர் 12:1 -..., மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." லூக்கா 21:34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். இவ்வசனங்களிலிருந்து,'பாரம்' நம் கிறிஸ்துவ ஓட்டத்தை தடுக்கக் கூடியது என்று விளங்குகிறது. தீமையும் கொடுமையும் நிறைந்த இவ்உலகத்தில் 'பாரம் என்கிற சுமை' நம்மை தாக்குகையில் விடுதலையின் வாழ்க்கை வாழ வேதாகமத்திலிருந்து சில வழிகள்.
எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்
கவலை என்பது நமது நேரம், ஆற்றல் மற்றும் அமைதியின் திருடன். இப்படி இருக்க நாம் ஏன் கவலைக்கொள்ள வேண்டும்? இந்த 3-நாள் தியானத்திட்டதில், கவலையை பற்றியும், நாம் ஏன் கவலைக்கொள்கிறோம் என்றும், எப்படி அதை நிறுத்த வேண்டும் என்றும் பார்ப்போம்.
உணர்ச்சி முழுமைக்கான ஏழு குறிப்புகள்
நீங்கள் உங்கள் உணர்ச்சி வாழ்க்கையில் கடவுளின் சிறந்ததை அடைவதில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளன. இவைகளை வரிசையாக செய்ய வேண்டியதில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லி உங்கள் ஆவி மற்றும் உணர்ச்சிகளில் முழுமையை அடைய உதவும் முக்கிய பழக்கங்களை உருவாக்க உதவுகிறார். இதுபோன்ற மேலும் பல வாசிப்பு திட்டங்களை intouch.org/plans இல் காணலாம்.