குணமாகுதல்
ஒற்றுமையின் வலிமை
மற்ற இன மக்களை ஏற்றுகொள்வது என்பது வேறு, அனைவரும் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது வேறு. இன்றைக்கு மக்கள் அநேகர் முந்தின வகையை சேர்ந்தவராகவே இருக்கின்றனர். நம்மை காட்டிலும் வேறுபட்ட இனமக்களையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் அவர்கள் வேற்றினத்தை சேர்ந்தவர்கள் என்பது நமது சிந்தையில் நீங்காமல் இருக்கும். ஒருவேளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக சமுக உணர்வுகளில் நடத்தப்படும் பேரணிகள், போராட்டங்களில் கூட கலந்துகொள்பவராக இருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி நிறைவுறும்போது, அவரவர் தங்கள் தங்கள் வழிகளில் சென்று தங்கள் அலுவல்களை வழக்கம் போல தொடர ஆரம்பித்து விடுவார்கள். எனவே அனைத்து தரப்பு மக்களிடையே வேற்றுமை உணர்வுகள் முற்றிலும் களைந்த உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்த, 'ஒருவரை ஒருவர் புன்முறுவலோடு சந்திப்பது, வணக்கம் சொல்வது' ஆகிய எளிமையான செயல்களை தாண்டின ஏதோ ஒன்று அவசியப்படுகிறது. இந்த 4 நாட்கள் தியான திட்டத்தில் Dr. டோனி இவான்ஸ் அவர்கள் வேதாகமம் கற்றுக்கொடுக்கும் ஒற்றுமையை குறித்து நமக்கு போதிப்பார்கள்.
மீட்பைத் தெரிவு செய்யுங்கள்
இயேசுவைப் போல மாறும்படிக்கு நாம் அனுதினம் புதிதாக்கப்படுவதிலும், மறுரூபமடைவதிலும் தேவனுடைய ஆவியானவர் ஈடுபாடு கொண்டிருக்கிறார். இந்தப் புதிதாக்கும் செயலின் அங்கமாகிய மீட்பு என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக உள்ளது. அது இல்லாதபட்சத்தில், நம்மால் பழைய மாதிரிகள், மனப்பான்மைகள், பழக்கங்கள் மற்றும் நடத்தைகளிலிருந்து விடுபட முடியாது. வாழ்நாள் மீட்புப் பயணத்தின் முதல் அடிகளை எடுத்து வைக்க இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
அவரே உன் தஞ்சம்!
உலகம் உருவான காலத்திலிருந்து தொற்றுப்பரவல், இயற்கை சீற்றங்கள், போர்கள் அல்லது போரின் வதந்திகள் எங்கும் எப்போதும் இருந்து வருகின்றன... ஆனால் உனக்கு, நித்திய தெய்வீக அடைக்கலம் உண்டு. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டவருக்குள் அடைக்கலம் புகுவதை பற்றியும் அவரை நம் வாசஸ்தலமாக மாற்றிக்கொள்வதை பற்றியும் கற்றுக்கொள்ள போகிறோம். ஆண்டவரின் வார்த்தையிலிருந்து உனக்கு ஆழமான வெளிப்பாடுகள் கிடைத்து உன் ஆத்துமா ஊக்குவிக்கப்பட்டு திருப்தியடைய வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.
நிரம்பி வழிய 21 நாட்கள்
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பது
நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.
கோபத்தை மேற்கொள்வது எப்படி?
கோபம் என்பது உனக்குள் இருக்கும் மிகவும் வலிமையான ஒரு உணர்ச்சி, அதை உன் வாழ்வில் அனுமதித்தால், அது நம்மை குருடாகவும் செவிடாகவும் மாற்றிவிடும். சில நேரங்களில் ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியாமலேயே நீ கோபப்படுகிறாய். மறைந்திருக்கும் இந்தக் கோபம் எங்கிருந்து வருகிறது? கோபம் ஒரு திருடன். உனது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நேரத்தையும் அவன் திருடிவிடுவான். உன் வாழ்விற்கு விஷமாக மாறும் இந்தத் தீங்கிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதையும் கோபத்தை மேற்கொண்டு நம் அன்றாட வாழ்க்கையில் சமாதானத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்பதை வேத வசனங்களின் வெளிச்சத்தில் நாம் தியானிக்கலாம்.
உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்
இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்