சங்கீத புத்தகம் 106:9-13

சங்கீத புத்தகம் 106:9-13 TAERV

தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது. ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார். தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார். அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார். தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார். அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை. அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள். அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள். ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள். அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.