அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?Sample

ஆண்டவரின் மகிழ்ச்சி எப்பொழுதும் கிடைக்கும்!
எப்போதும் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் யாரவது ஒருவரை உனக்குத் தெரியுமா? இந்த நபரின் மகிழ்ச்சி எந்த சூழ்நிலையிலும் சிதைந்து போகாத ஒன்றைப்போல தோன்றுகிறதா?
இது விசித்திரமாகத் தோன்றலாம், ஒருவேளை நீ ஆச்சரியப்படலாம், “எப்படி அவளால் இதைச் செய்ய முடிகிறது? அவளுடைய ரகசியம் என்ன?" என்று.
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க உனக்கு வாய்ப்பு உள்ளது என்பது உனக்குத் தெரியுமா?
வேதாகமம் பிலிப்பியர் 4:4ல் இப்படி கூறுகிறது, "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்."
இந்த வசனத்தை எழுதியபோது அப்போஸ்தலர் பவுல் சிறையில் இருந்தார், இந்த சூழ்நிலை அவருடைய அறிக்கைக்கு இன்னும் மதிப்பை கூட்டுகிறது. சிறையில் இருந்தாலும், மிக மோசமான சிரமங்களிலும் கூட, மகிழ்ச்சி அடைவது சாத்தியம். இது மனிதத்தன்மையில் எளிதானது அல்ல... ஆனால் தெய்வீகமாக சாத்தியம்!
மகிழ்ச்சியில் இருப்பது ஒரு விருப்பத் தேர்வு என்பதை பவுல் நமக்குக் காட்டுகிறார். உன் மகிழ்ச்சி உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது அல்ல, ஆனால் உனக்குள்ளும் உன்னுடனும் இருக்கும் ஆண்டவரைச் சார்ந்தது.
வேதாகமம் கூறுகிறது, "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது." (ஏசாயா 43:2)
கடினமான நேரங்களை சந்திக்கும்போது, நீ அவருடன் அவற்றைக் கடந்து செல்கிறாய் என்பதால் நீ மகிழ்ச்சியடையலாம்.
நீ எதைச் சந்தித்துக்கொண்டிருந்தாலும், ஆண்டவரின் மகிழ்ச்சி ஒவ்வொரு நாளும் கிடைக்கிறது.
நான் உன்னை நேசிக்கிறேன், பாராட்டுகிறேன். வலிமையுடனும் தைரியத்துடனும் தொடர்ந்து செல்!
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
Scripture
About this Plan

பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.
More
Related Plans

Practical Ways to Love God & Others: Devotions for Girls (I Am Available)

Philippians: Joy in Christ

Two-Year Chronological Bible Reading Plan (First Year-July)

Women of the New Testament

Is ‘Making Money While You Sleep’ Biblical?

What Now

Music: Revelation in Song

Spiritual FOMO Is a Thing

Mom Guilt Meets Grace
