கோபத்தைக் கைவிடுதல்Sample

இரக்கமுள்ள ஒரு இருதயம்
உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; கொலேசெயர் 3:12
ஒரு கூட்டமான கேளிக்கைப் பூங்காவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாங்கள் ஏழு பேர் சென்றிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒரே வரிசையில் ஒன்றாக அமர ஆசைப்பட்டு ஒரு வரிசையில் நுழைந்த பொழுது, ஒரு பெண் எங்களுக்கிடையே புகுந்து அவ்வரிசையில் அமரச் சென்றாள். அப்பொழுது என் மனைவி நாங்கள் ஒரே வரிசையில் அமர விரும்புவதை தெரிவித்த பொழுது “அதெல்லாம் சரிப்படாது,” என பட்டென்று கூறிவிட்டு தன்னுடன் வந்திருந்த இரண்டு நபர்களுடன் அவ்வரிசைக்குள் விரைந்து நுழைந்தனர்.
ஆகவே, எங்களில் நான்கு பேர் முன் வரிசையிலும் மூன்று பேர் பின் வரிசையிலும் அமர்ந்தபொழுது, அப்பெண்ணோடு வந்திருந்த ஒருவர் உடல் ஊனமுற்றவர் என்பதை என் மனைவி கவனித்தாள். அப்பெண் தன் நண்பருக்கு வேண்டிய உதவியை செய்வதற்காகவே அவர்கள் ஒன்றாக அமரமுயன்றிருக்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்தபொழுது எங்கள் எரிச்சல் மறைந்து போயிற்று. “யோசித்துப் பார்த்தால், இப்படிப்பட்டதான நெரிசலான இடத்தை சமாளிப்பது அவர்களுக்கு எவ்வளவு கடினம்,” என என் மனைவி கூறினாள். அப்பெண்மணி எங்களிடம் கடுமையாகத் தான் பேசினாள், ஆனாலும் கோபத்தைக் காட்டுவதற்கு பதிலாக நாம் இரக்கத்தை காட்டலாமே.
எங்கு சென்றாலும், இரக்கத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை நாம் காண நேரிடும். அப்பொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளின்படி “நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயையையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு” (கொலே. 3:12), நம்மைச் சுற்றி கிருபையின் அன்பான தொடுதலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் உதவிடுங்கள். மேலும் அவர் “ஒருவரையொருவர் தாங்கி.., ஒருவருக் கொருவர் மன்னியுங்கள்” என்றும் பரிந்துரைக்கின்றார் (வச. 13).
நாம் பிறர் மீது இரக்கத்தை வெளிக்காட்டும் பொழுது, கிருபையும் இரக்கமும் நிறைந்த இருதயத்தை நம்மீது ஊற்றிய தேவனை அவர்கள் காண உதவிடுவோம்.
பிறருடைய துன்பங்களைப் புரிந்து கொள்வதே இரக்கமாகும்.
Scripture
About this Plan

கோபம் ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சி ஆகும்; அது அன்பும் ஆக்கப்பூர்வமானதாகவும் அமையலாம், அல்லது சுயநலமும் அழிவுக்கு வழிவகுப்பதாகவும் அமையலாம். இந்த 5 சிந்தனைகளை வாசிப்பதன் மூலம், உங்கள் கோபத்தை கர்த்தரிடம் ஒப்புவிப்பதைக் குறித்து அதிகம் அறியலாம்.
More
Related Plans

EquipHer Vol. 24: "Who’s Economy Are You Working For?"

The Cultivation of Consistency

How to Find Jesus for Yourself

Cultivating a Satisfying Marriage: Leading, Serving, and Discipling Together

Cherished & Chosen: A 7-Day Challenge for Single Women

Go Into All the World

Thy Kingdom Come - Prayer Journal

Find & Follow Jesus, Quarter 3

Winter Warm-Up
