சங் 6

6
சங்கீதம் 6
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,
உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,
நான் பெலனில்லாமல் போனேன்;
என்னைக் குணமாக்கும் யெகோவாவே,
என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,
எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
4திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;
உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
5மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,
பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;
இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,
என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.
7துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,
என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
8அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
9யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;
யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
10என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;
அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.

اکنون انتخاب شده:

சங் 6: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید