சங் 140

140
சங்கீதம் 140
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.
1யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்;
கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
2அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து,
யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
3பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்;
அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
4யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி
கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்;
அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
5பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும்
கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்;
வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
6நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்;
யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.
7ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே,
யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.
8யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்;
அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. 10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக;
நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
11பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை;
கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
12சிறுமையானவனின் வழக்கையும்,
எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன்.
13நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;
செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.

اکنون انتخاب شده:

சங் 140: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید