யோபு 17

17
அத்தியாயம் 17
1என் ஆவி உடைகிறது#17:1 என் ஆவி நொறுங்கி விட்டது., என் ஆயுசு நாட்கள் முடிகிறது;
கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
2கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ?
அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
3தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு,
எனக்காகப் பிணைக்கப்படுவீராக;
வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
4நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்;
ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
5எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ,
அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
6மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்;
அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.
7இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;
என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
8சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்;
குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
9நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;
சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
10இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்;
உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.
11என் நாட்கள் முடிந்தது;
என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.
12அவைகள் இரவைப் பகலாக்கியது;
இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.
13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும்,
பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்;
இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;
புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
15என் நம்பிக்கை இப்போது எங்கே?
நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;
அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.

اکنون انتخاب شده:

யோபு 17: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید