தானியேல் 6:26-27
தானியேல் 6:26-27 TRV
“எனது ஆட்சிக்குட்பட்டிருக்கும் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களும் தானியேலின் இறைவனுக்குப் பயந்து அவருக்கே மதிப்பளிக்க வேண்டும். “ஏனெனில் வாழும் இறைவன் அவரே. அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார். அவருடைய இராச்சியம் அழிந்து போகாது. அவரது ஆளுகை முடிவில்லாதது. அவரே விடுவிப்பவர், அவரே காப்பாற்றுபவர். அவரே வானத்திலும், பூமியிலும் அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்கின்றார். அவரே சிங்கங்களின் வல்லமையிலிருந்து தானியேலை விடுவித்தார்.”





