திட்ட விவரம்
இயேசுவே, நீர் எனக்கு தேவைமாதிரி
ஜெபம்:
இயேசுவே, நீர் எனக்கு வேண்டும்! நீர் என் ஆண்டவர், என் தேவன், என் ராஜா. என் ஆராதனைக்கு பாத்திரர் நீரே. இந்த உலகத்தின் காரியங்களெல்லாம் மங்கலாக தென்படும் விதத்தில் உம்மை ஆழமாகவும் அன்பாகவும் அறிய, நேசிக்க எனக்கு உம் கிருபையால் உதவி செய்யும்.
உம்மை, உம்மை மட்டுமே ஆராதிக்க விரும்புகிறேன். கலாச்சாரத்தால் நான் உருமாற்றப்பட நான் விரும்பவில்லை. நான் உம்மில் இருக்கிறேன்; உம்முடன் ஒன்றாகி விட விரும்புகிறேன். என் இருதயத்தை உம் இருதயத்துடன் இணைத்துக் கொண்டு, உம் சத்தியத்தை என் உள்ளத்தின் ஆழத்தில் வைத்து விடும். உம்மையும், உம் வார்த்தையையும் அறிவது மட்டுமின்றி, பாவத்தை விடுவதற்கும், உம்மையும் உம் வார்த்தையையும் தொடர்வதற்குமான விருப்பத்தையும் நாடுகிறேன். உம்மை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க எனக்கு உதவும்.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு நபரிடமும், ஒவ்வொரு சோதனையிலும் நீர் எப்படி பதிலளிப்பீரோ, உம் மகிமைக்கென்று, நானும் அப்படியாக பதிலளிக்க உம் வல்லமையும், உம் கிருபையும், உம் அன்பும் எனக்கு வேண்டும். நான் வெளிப்பிரகாரமாக மட்டுமல்லாமல், எனக்குள்ளிருந்து வரும் ஜீவத்தண்ணீருள்ள நதியால் வெளிக்காட்ட விரும்புகிறேன். நான் செய்யும், பேசும் எல்லாவற்றிலும் உம் ஆவியானவர் பாய்ந்து செல்லுமளவு நான் உம் அருகிலே இருக்க வேண்டும். என் எல்லா ஆனந்தத்தையும் உம்மிலே நான் காணட்டும்.
நான் பேசும், செய்யும் எல்லாவற்றிலும் உம்மையே மகிமைப்படுத்துவேனாக. (சங்கீதம் 42:1-2அ; கலாத்தியர் 2:20)
நான் எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், என்ன வேத வசனங்கள் வாசித்துக் கொண்டிருந்தாலும், என்ன பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாலும், என் மனம், என் பெலன், என் இருதயம் என்னையோ, என் சூழ்நிலையையோ அல்லாமல், உம்மை மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். எனக்கு நீர், நீர் மட்டுமே வேண்டும்.
நான் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும்,
ஜெயித்தாலும் தோற்றாலும்,
செல்வத்துடன் இருந்தாலும், ஏழ்மையிலிருந்தாலும்,
சேர்த்துக்கொள்ளப்பட்டாலும் புறக்கணிக்கப்பட்டாலும் அறியப்பட்டாலும், மறக்கப்பட்டாலும்,
நான் உம்முடையவர் என்றும் நீர் என்னுடையவர் என்றும் அறிவதில் நான் திருப்தியாய் இருக்கட்டும்.
உம்மை நேசிப்பதும், உம்மால் நேசிக்கப்படுவதும், உம்மை பிரியப்படுத்துவதும், உம்மை சேவிப்பதுமே என் முக்கிய நோக்கமாக இருக்கட்டும். என் பாவத்தை காணவும், அவற்றிற்காக வருந்தவும், அவற்றை உம் கிருபையால் விட்டுவிடவும் எனக்கு உதவும். நீதியின் மேல் பசிதாகமாக இருக்க எனக்கு உதவி செய்யும்.
இயேசு வே, உம்மை காணவும், உம்மை அறியவும், உம்மை நேசிக்கவும், உம்மோடு ஒன்றாக இருக்கவும் எனக்கு கிருபை, இரக்கம் மற்றும் அன்புள்ள தயவை அருளும். உம் நாமத்தில் நாங்கள் எதை கேட்டாலும், உம் சித்தத்தின்படி கேட்கும்போது, அதனை செய்வீர் என்று உம் வார்த்தை சொல்வதற்காக நன்றி. ஆமென். (யோவான் 14:13-14)
இயேசுவே, நீர் எனக்கு வேண்டும்! நீர் என் ஆண்டவர், என் தேவன், என் ராஜா. என் ஆராதனைக்கு பாத்திரர் நீரே. இந்த உலகத்தின் காரியங்களெல்லாம் மங்கலாக தென்படும் விதத்தில் உம்மை ஆழமாகவும் அன்பாகவும் அறிய, நேசிக்க எனக்கு உம் கிருபையால் உதவி செய்யும்.
உம்மை, உம்மை மட்டுமே ஆராதிக்க விரும்புகிறேன். கலாச்சாரத்தால் நான் உருமாற்றப்பட நான் விரும்பவில்லை. நான் உம்மில் இருக்கிறேன்; உம்முடன் ஒன்றாகி விட விரும்புகிறேன். என் இருதயத்தை உம் இருதயத்துடன் இணைத்துக் கொண்டு, உம் சத்தியத்தை என் உள்ளத்தின் ஆழத்தில் வைத்து விடும். உம்மையும், உம் வார்த்தையையும் அறிவது மட்டுமின்றி, பாவத்தை விடுவதற்கும், உம்மையும் உம் வார்த்தையையும் தொடர்வதற்குமான விருப்பத்தையும் நாடுகிறேன். உம்மை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க எனக்கு உதவும்.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு நபரிடமும், ஒவ்வொரு சோதனையிலும் நீர் எப்படி பதிலளிப்பீரோ, உம் மகிமைக்கென்று, நானும் அப்படியாக பதிலளிக்க உம் வல்லமையும், உம் கிருபையும், உம் அன்பும் எனக்கு வேண்டும். நான் வெளிப்பிரகாரமாக மட்டுமல்லாமல், எனக்குள்ளிருந்து வரும் ஜீவத்தண்ணீருள்ள நதியால் வெளிக்காட்ட விரும்புகிறேன். நான் செய்யும், பேசும் எல்லாவற்றிலும் உம் ஆவியானவர் பாய்ந்து செல்லுமளவு நான் உம் அருகிலே இருக்க வேண்டும். என் எல்லா ஆனந்தத்தையும் உம்மிலே நான் காணட்டும்.
நான் பேசும், செய்யும் எல்லாவற்றிலும் உம்மையே மகிமைப்படுத்துவேனாக. (சங்கீதம் 42:1-2அ; கலாத்தியர் 2:20)
நான் எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், என்ன வேத வசனங்கள் வாசித்துக் கொண்டிருந்தாலும், என்ன பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாலும், என் மனம், என் பெலன், என் இருதயம் என்னையோ, என் சூழ்நிலையையோ அல்லாமல், உம்மை மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். எனக்கு நீர், நீர் மட்டுமே வேண்டும்.
நான் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும்,
ஜெயித்தாலும் தோற்றாலும்,
செல்வத்துடன் இருந்தாலும், ஏழ்மையிலிருந்தாலும்,
சேர்த்துக்கொள்ளப்பட்டாலும் புறக்கணிக்கப்பட்டாலும் அறியப்பட்டாலும், மறக்கப்பட்டாலும்,
நான் உம்முடையவர் என்றும் நீர் என்னுடையவர் என்றும் அறிவதில் நான் திருப்தியாய் இருக்கட்டும்.
உம்மை நேசிப்பதும், உம்மால் நேசிக்கப்படுவதும், உம்மை பிரியப்படுத்துவதும், உம்மை சேவிப்பதுமே என் முக்கிய நோக்கமாக இருக்கட்டும். என் பாவத்தை காணவும், அவற்றிற்காக வருந்தவும், அவற்றை உம் கிருபையால் விட்டுவிடவும் எனக்கு உதவும். நீதியின் மேல் பசிதாகமாக இருக்க எனக்கு உதவி செய்யும்.
இயேசு வே, உம்மை காணவும், உம்மை அறியவும், உம்மை நேசிக்கவும், உம்மோடு ஒன்றாக இருக்கவும் எனக்கு கிருபை, இரக்கம் மற்றும் அன்புள்ள தயவை அருளும். உம் நாமத்தில் நாங்கள் எதை கேட்டாலும், உம் சித்தத்தின்படி கேட்கும்போது, அதனை செய்வீர் என்று உம் வார்த்தை சொல்வதற்காக நன்றி. ஆமென். (யோவான் 14:13-14)
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசு உங்களுக்குத் தேவை என்பதை நீங்கள் ஆழமாக உணருகிறீர்களா? ஜெபத்திற்கான இந்த இரண்டு நாள் திட்டம் நீங்கள் அவருடன் தனியாக செலவிடும் நேரத்தை மேம்படுத்தவும் நீங்கள் அவரிடம் அழுவதற்கு உதவவுமே வடிவமைக்கப் பட்டுள்ளது. திசில்பெ...
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக திசில்பென்ட் மினிஸ்ட்ரீஸுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.