சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்மாதிரி

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

7 ல் 3 நாள்

இயேசுவின் அன்பு உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது 😁😁

சங்கீதம் 94:18-19-ஐப் பற்றிய நமது தியானத்தை நாம் தொடர்வோம். ஆண்டவர் உனக்குக் கொடுக்க விரும்பும் மகிழ்ச்சியைப் பற்றி நாம் இன்று பார்ப்போம்.

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது." (சங்கீதம் 94:18-19)

"கர்த்தாவே, உமது கிருபை”... என்ற பதத்தை தியானிப்போம். ஆண்டவர் எப்போதும் உன் மீது கிருபையாய் இருக்கிறார். நீ பிறப்பதற்கு முன்பே, ஆண்டவர் உன்னை நேசித்தார், உனக்காக ஏற்கனவே மிகப்பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார்.

“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” என்று அவருடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது. (ரோமர் 5:8)

ஆண்டவர் உன்னை நேசிக்கிறார். அவர் தமது அன்பிற்கு அடையாளமாக ஒரு ஆச்சரியக்குறியை வைத்தார். அது எல்லாக் கேள்விக்குறிகளையும் எதிர்கொள்ளும் ஒரு ஆச்சரியக்குறி. சிலுவைச் சின்னம்தான் ஒரு தெய்வீக ஆச்சரியக்குறியாகும்!

  • உன் உறவுகளைக் குறித்த உன் கவலைகளில் அவருடைய அன்பு இருக்கிறது. அவர் உன்னை நேசிக்கிறார் மற்றும் உன்னை தமது கைகளில் ஏந்திக்கொள்கிறார்.
  • உன் பொருளாதாரக் கவலைகளுக்கு மத்தியில் அவருடைய அன்பு இருக்கிறது. அவர் உன்னை நேசிக்கிறார் மற்றும் உன் தேவைகளை சந்திக்கிறார்.
  • உன் சரீரத்தைக் குறித்த கவலைகளின் மத்தியிலும் அவருடைய அன்பு இருக்கிறது. அவர் உன்னை நேசிக்கிறார், உன்னை உயர்த்துகிறார்.
  • உன் குடும்பத்தைப் பற்றிய கவலைகளில் அவருடைய அன்பு இருக்கிறது. அவர் உன்னை நேசிக்கிறார் மற்றும் உன் அன்புக்குரியவர்களை கவனித்துக்கொள்கிறார்.
  • அவரது அன்பு உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவரது அன்பின் கரங்களுக்குள் நீ வந்துவிடு.

ஆண்டவருடைய மாறாத அன்பிற்காக என்னுடன் சேர்ந்து அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறாயா? “ஆண்டவரே, என்னால் எப்படி உம்மைத் துதிக்காமல் இருக்க முடியும்? இயேசுவே, நான் எப்படி உம்மை ஆராதிக்காமல் இருக்க முடியும்? நீர் அற்புதமானவர், உமது அன்பும் கூட அற்புதமானது. நான் கவலையில் மூழ்கிவிடும்போது, ​​​​உமது அன்பு எனக்கு ஆதரவாக இருக்கிறது. எல்லாமே என்னைச் சுற்றி நொறுங்குவதுபோல் தோன்றும்போது, ​​​​உமது விசுவாசத்தில் நான் நிற்கிறேன். இயேசுவே, உமது அன்பிற்கு நன்றி கூறுகிறேன். ஆம், உமது அன்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

மிகுந்த கவலையின்போது,​ எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நமக்குத் தேவைப்படுகிறது. உலகத்தையே மாற்றக்கூடிய யுத்தங்களுக்கு மத்தியில் நாம் இருந்து வந்தாலும், தேவனுடைய பரிபூரண சமாதானத்துக்குள் பிரவேசிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது உங்களுக்கு உதவும். மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆண்டவருடைய சமாதானத்தையும் நம்பிக்கையையும் பெறுவது எப்படி என்பதை பரிசுத்த ஆவியானவர் தேவ வார்த்தையிலிருந்து உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பார்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Psalm94_18_19