உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்மாதிரி

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

7 ல் 1 நாள்

ஒப்புரவாக்குதலே ஆண்டவருடைய திட்டம்! 💞

இந்த வாரம் "சமாதானம் மற்றும் மன்னிப்புக்கான பாதை" என்ற தலைப்பை அடிப்படையாகக் கொண்ட தொடரை நாம் தியானிக்கப் போகிறோம்.

ஒப்புரவாக்குதல் மனிதகுலத்திற்கான ஆண்டவருடைய மிகப்பெரிய திட்டம் என்பது உனக்குத் தெரியுமா? ஆண்டவர் உறவுகளுக்கு முக்கியத்துவத்தை வழங்குகிறார். நீ ஆண்டவருடனும் உன் குடும்பம் மற்றும் உனக்கு அன்பானவர்களுடனும் நட்புடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இயேசு இந்தச் செய்தியின் சாராம்சத்திற்கேற்ப மிகச்சரியாக வாழ்ந்து காட்டினார்: அவர் தம் தந்தைக்கு நெருக்கமாக இருந்தார். அவர் எப்போதும் உறவினரின் மத்தியில் இருந்தார். உறவென்னும் வட்டத்துக்குள் பொருந்தாதவர்களையும், முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டவர்களையும் அவர் நெருங்கிச் சென்றார்.

நாம் ஆண்டவருடனும் மற்றவர்களுடனும் நமது உறவைப் பேண ஒப்புரவாகுதல் உதவுகின்றது.

ஆண்டவருடனோ அல்லது மற்றவர்களுடனோ உன் உறவைத் தடுக்கும் ஏதேனும் உள்ளதா? அப்படியானால், அதை அவருடைய பாதத்தில் கொண்டு வர உன்னை அழைக்கிறேன். உன்னால் முடியாததை, உன் தடைகள் அனைத்தையும் அவரால் தகர்க்க முடியும். ஏனெனில் அவை அவரால் முடியாதவைகள் அல்லவே.

"நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்." (யோவான் 13:34)

ஒப்புரவாக்குதல் என்பது மிகக் கடினமான வேலை. மற்றவர்களை உண்மையிலேயே நேசிக்கும் உன் திறன் உனக்குள் இருக்கும் ஆண்டவருடைய அன்பிலிருந்து பாய்கிறது.

முதலில் உன் இதயத்தை முழுமையாக மீட்டெடுக்கக்கூடியவருக்கு அருகில் நீ வருவதன் மூலம், உனக்குக் கடினமாகத் தோன்றும் உறவுகளை சமாதானத்தால் நிரம்பிய உறவுகளாக நீ மாற்றலாம்.

என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுக்கும்படி உன்னை அழைக்கிறேன்... “ஆண்டவரே, நான் உமது இருதயத்தைப் பிரியப்படுத்த விரும்புகிறேன், உமது சித்தத்தைச் செய்யவும், எப்போதும் உம்மில் அதிகமாக வளரவும் விரும்புகிறேன். மனம்பொருந்தி ஒப்புரவாகவும், மன்னிக்கவும், உண்மையாக நேசிக்கவும் உமது கிருபையைப் பெற நாடுகிறேன். ஆண்டவரே, இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒப்பரவாக்கும் ஊழியத்தை என் வாழ்வில் நிறைவேற்றுவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

இந்தத் திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

சண்டை சச்சரவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன; அதற்காக, கசப்பான மற்றும் முறிந்த உறவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனாலும் மற்றவர்களுடனான நமது உறவை நாம் சரிசெய்து குணப்படுத்துவதற்கு முன்பு, ஆண்டவருடனான நமது உறவை அவர் குணப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், ஒப்புரவு என்ற அற்புதத்தை இயேசு எவ்வாறு செய்கிறார் என்பதைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். மனந்திரும்புதல், பரிகாரம் மற்றும் மன்னிப்பு ஆகிய அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சண்டை சச்சரவை சமாளிப்பதைத் தாண்டி விடுதலை மற்றும் குணமடைதலுக்குக் கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் உறவில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல தீர்வுகளைக் கண்டறிந்து, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின் வாயிலாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுவீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=RestoringRelationships-Reconciliation