திட்ட விவரம்

கோபத்தை மேற்கொள்வது எப்படி?மாதிரி

கோபத்தை மேற்கொள்வது எப்படி?

7 ல் 6 நாள்




நீ பொறுமையிழந்து கோபப்படும்போது என்ன செய்ய வேண்டும்?

இன்று, என்னுடன் ஒரு கணம் கற்பனை செய்து பார்... நீ ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டிருக்கிறாய், சாலை மிகவும் விசாலமாகவும் அதிக வாகனங்கள் இல்லாமலும் காணப்படுகிறது, வானின் வெப்பநிலை இதமாக இருக்கிறது. உனக்குப் பிடித்த பாடகரின் பாடல் வாகனத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால், உனது வாழ்க்கைப் பயணம் அற்புதமாகச் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென்று, ஒருவர் அவரது வாகன வேகத்தை அதிகரித்து உனக்கு மிகவும் அருகில் வந்து உன்னை முந்திச் செல்கிறார். இதை நீ எப்படி அணுகுவாய்?

  • உடனடியாக அவரை மன்னித்துவிடுவாயா?
  • நீ குறை கூறிவிட்டு, விரைவாக அங்கிருந்து சென்றுவிடுவாயா?
  • பொறுமையை இழப்பாயா? உனக்குள் பலவித எண்ணங்கள் ஓடி, அந்த ஓட்டுனருக்குப் பின் சென்று அவரைத் துரத்திப் பிடிக்க என்ன செய்யலாம் என்று நீ தீவிரமாக சிந்திப்பாயா? ஒலி எழுப்பவும், முந்திச் சென்ற காரைப் பின்தொடர்ந்து அவரது காரை விரைவாய் முந்தவும் நினைப்பாயா? இப்படி செய்வதால், நீ சென்றடைய வேண்டிய இடம் வரும்வரை அதையே நினைத்துக்கொண்டு இருப்பாய். பின் அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் இதைப் பற்றிய சிந்தனை உன் நினைவில் ஓடிக்கொண்டே இருக்கும்.

நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லவேண்டும். கோபம் ஒரு திருடன். உனது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நேரத்தையும் அந்தத் திருடன் திருடிவிடுவான். உனக்கு ஒரே ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது. அந்த நேரத்தை நீ வீணடிக்கத் தேவையில்லை. வேதாகமம் சொல்கிறது, “... நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” (எபேசியர் 4:26-27)

ஒருவேளை நீ என்னிடம், “எரிக், என்னால் அப்படிக் கோபப்படாமல் இருக்க முடியாது. நான் ஒன்றும் ஆண்டவர் இல்லை. கோபத்தில் நான் என் பொறுமையை இழந்துவிடுகிறேன், என்னால் அதை சமாளிக்க முடியாது!” என்று சொல்லலாம்.

உண்மைதான்... ஆண்டவருடைய உதவி இல்லாமல், கோபத்தைக் கையாள்வது மிகவும் கடினம்தான். ஆனால் அவரால் எல்லாம் கூடும்! அவருடைய ஆவி மீண்டும் ஒருமுறை உன் வாழ்வில் சமாதானத்தை உணர உனக்கு உதவும். எனவே, பொறுமையிழந்துவிட்டதாக நீ உணரும்போது, ​​உன் உணர்ச்சிகளை ஆண்டவர் மீது வைத்துவிட்டு அவருடைய சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்.

கிறிஸ்துவுக்குள் ஆசீர்வதமாய் இரு!

நீ ஒரு அதிசயம்!

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

கோபத்தை மேற்கொள்வது எப்படி?

கோபம் என்பது உனக்குள் இருக்கும் மிகவும் வலிமையான ஒரு உணர்ச்சி, அதை உன் வாழ்வில் அனுமதித்தால், அது நம்மை குருடாகவும் செவிடாகவும் மாற்றிவிடும். சில நேரங்களில் ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியாமலேயே நீ கோபப்படுகிறாய். மறைந்தி...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamilovercomeanger

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்