திட்ட விவரம்

இயேசு – உலகத்தின் ஒளிமாதிரி

இயேசு – உலகத்தின் ஒளி

5 ல் 5 நாள்




ஜீவனின் ஒளி

ஒரு தேனீர் விருந்தைத் தொடர்ந்து முதல் வார ஞாயிற்றுக்கிழமையின் போது, கிறிஸ்துவை ஒளியாய் கொண்டாடும் கிறிஸ்டிங்கிள் ஆராதனை நடைபெற்றது. அந்த தருணத்தில் இங்கிலாந்து தேசத்தின் தட்பவெப்பநிலை ஈரமாகவும் மந்தமாகவும் இருக்கும். எனவே கிறிஸ்டிங்கிள் சின்னத்தின் மூலம் கிறிஸ்துவின் ஒளியைத் தழுவுவது மகிழ்ச்சியை மட்டுமல்ல, நம்பிக்கையையும் தருகிறது.

திருச்சபை முழுதும் இருளில் இருக்க, நாங்கள் மௌனமாய் அமர்ந்திருக்க, ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் கரங்களில் சிவப்பு ரிப்பனால் சுற்றப்பட்டிருக்கும் ஆரஞ்சு பழத்தை கிறிஸ்டிங்கிள் சின்னமாய் வைத்திருந்தனர். அதன் மீது மெழுவர்த்தியும், அந்த ஆரஞ்சு பழத்தின் நான்கு திசைகளிலும் பல்குத்தும் குச்சியில் திராட்சைப்பழமும் குத்தப்பட்டிருக்கும். ஆரஞ்சு பழம் உலகத்தையும், மெழுகுவர்த்தி கிறிஸ்துவின் ஒளியையும், சிவப்பு ரிப்பன் அவருடைய இரத்தத்தையும், திராட்டைப் பழம் பூமியின் கனிகளையும் குறிக்கிறது. அந்த திருச்சபை அறையில் ஒளிரும் வெளிச்சத்தின் புள்ளிகள், இருளில் பிரகாசிக்கும் ஒளியான இயேசுவை எனக்கு நினைவுபடுத்தியது.

தேவன் தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு தான் வெளிச்சமாய் இருப்பதாக அறிவிக்கிறார்: “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசாயா 60:1). உலகம் இருளால் சூழப்பட்டிருந்தாலும், அதின் மத்தியில் தன்னுடைய வெளிச்சத்தை பிரகாசிக்கச்செய்து, அதை தேவன் தன்னுடையதாக மாற்றிக்கொள்ளுகிறார் (வச. 2-3). புதிய ஏற்பாட்டில், தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து தன்னை உலகத்தின் ஒளியாய் அடையாளப்படுத்தி, அவரைப் பின்பற்றுகிறவர்கள் இருளில் நடப்பதில்லை என்றும் வாக்களிக்கிறார் (யோவான் 8:12).

நாம் இருளால் சூழப்பட்டிருக்கிறோம் என்று உணரும்போது, தேவன் இயேசுவின் மூலம் அவருடைய ஒளியை நம் மீது பிரகாசிக்கச்செய்கிறார். அவரோடு அந்த ஜீவ ஒளியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்னும் சத்தியத்தை நாம் உறுதியாய் பற்றிக்கொள்ளுவோம்.

இயேசு உன்னுடைய வாழ்க்கைக்கு எப்படி வெளிச்சத்தைக் கொண்டுவந்தார்? அவருடைய ஒளியை இன்று மற்றவர்களுக்கு எப்படி பகிர்ந்துகொடுப்பீர்கள்?

இயேசுவே, உலகத்தின் ஒளியே, என் சமுதாயத்திற்கு உம்முடைய வெளிச்சத்தை காண்பிக்கும்பொருட்டு என்னில் பிராகாசியும்.

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு – உலகத்தின் ஒளி

கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம் நமக்குள்ள இருளை உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது. அந்த இருளுக்கு ஒளியேற்றும் இயேசு கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டாடுகிறது. அவருடைய ஒளியின் பிரசன்னத்தில் நாம் ஒருநாள் விடுவிக்கப்படுவோம் என்பது...

More

இந்த திட்டத்தை வழங்கிய எங்கள் தினசரி ரொட்டி - இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்