திட்ட விவரம்

மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்மாதிரி

மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்

7 ல் 7 நாள்




இப்போது உற்சாகத்திற்கான நேரம்!

கடந்த சில நாட்களாக நாம் மன உளைச்சலைப் பற்றி தியானித்த விஷயங்களால் நீங்கள் மிக பெரிய அளவில் உற்சாகத்தைப் பெற்றிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் செய்த நன்மைகளை செய்தியாகப் பதிவிட சிறிது நேரம் எடுத்து இங்கே கிளிக் செய்வீர்களா? இது பிறரை உற்சாகப்படுத்தும். உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதித்த ஆண்டவர் நிச்சயமாக மற்றவருடைய வாழ்க்கையையும் ஆசிர்வதிக்க முடியும் என்பதை உணர அவர்களுக்கு உதவுங்கள்!

இந்த உற்சாகமளிக்கும் மற்றும் வல்லமை வாய்ந்த சாட்சிகளைப் படிக்க நான் உங்களை அழைக்கிறேன். ஆண்டவர் செய்வது நிச்சயமாகவே விஷேஷமான ஒன்றாகத்தான் இருக்கும்.

  • "நான் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் காணப்பட்டேன், நான் என் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் 'அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்தக் கடிதத்தைப் படித்தபோது நான் ஆண்டவருடைய பிள்ளை என்பதை உணர்ந்தேன். யாரோ ஒருவர் ஏற்கனவே ஏன் ஜீவனுக்காக விலையை செலுத்தி இருக்கிறார். நான் இனி எனக்குச் சொந்தம் அல்ல என்று அறிந்துகொண்டேன். இன்று நான் தற்கொலை செய்வதைப் பற்றியோ கைவிடுவதைப் பற்றியோ எதிர்மறையானவகைகளைப் பற்றியோ யோசிப்பதே இல்லை. நான் வாழவேண்டும், ஆண்டவருடைய மகத்துவங்களை அறிவிக்கவேண்டும்!" ஷீலா
  • என்னைக் காயப்படுத்திய ஜனங்களை மன்னிக்க ஆண்டவர் எனக்கு பலம் கொடுத்தார். இன்று நான் என் வாழ்க்கையின் பக்கத்தைத் திருப்பி ஆண்டவருடன் கூடிய என் பிரயாணத்தில் முன்னேறிச் செல்கிறேன். என்னை பலப்படுத்தும் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு." வனேஸா
  • என் வாழ்க்கையில் நான் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்த நேரத்தில் 'அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த செய்தியை நான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆண்டவர் இன்னும் என் வாழ்க்கையில் கிரியை செய்யவில்லையே என்று எண்ணி நான் மிகவும் சோர்வுடன் காணப்பட்டேன். எப்படி முன்னேறிச் செல்வது என்று கூட எனக்குப் புரியவில்லை. ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்தக் கடிதத்தைப் பெறுவது எனது மீட்பின் மிகப் பெரிய அங்கமாக மாறியது. இந்த கடிதங்கள் மூலம் நான் பெற்ற உற்சாகமானது, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் மற்றும் அவருடைய அன்பு நம்மீது எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை எனக்கு நினைவுபடுத்தியது. இப்போது நான் விடுதலையுடன் புதிய பார்வை மற்றும் நோக்கத்தை உடையவனாகி தேவனுடைய ராஜ்யத்தில் மிகப்பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன். ஆரோன்

இந்த சாட்சிகள் உங்களை உற்சாகப்படுத்தி உங்களை பலப்படுத்தும் என்று நம்புகிறேன். நம்முடைய ஆண்டவர் மிகவும் பெரியவர், மிகவும் நல்லவர், மிகவும் அற்புதமானவர். ஓ! அவருடைய அன்பு எவ்வளவு மகத்தானது மற்றும் அவருடைய உண்மை எவ்வளவு பெரியது!

சங்கீதக்காரன் இதை நன்றாகக் கூறுகிறான்: "உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது." (வேதாகமம், சங்கீதம் 57:10)

முடிவில்லாத மிகக் கடினமான சூழ்நிலைகளை நீங்கள் சந்தித்துக் கொண்டு இருப்பீர்களானால், நீங்கள் என் நினைவுகளில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை பலப்படுத்தி உற்சாகப்படுத்தும் படி நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

இந்த வாசிப்பின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து எடுக்கப்பட்டது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை பெறுவதற்கு இங்கே இலவசமாக பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

வேதவசனங்கள்

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்

உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்று நினைக்கிறாயா? உன்னை பற்றி நினைக்கவோ கண்டுகொள்ளவோ யாருமில்லை என்று உன் உள்ளத்தில் தோன்றுகிறதா? நீ வாழ்க்கையில் தோற்றுப்போனதாக எண்ணுகிறாயா? நீ என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடி...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்