உங்களுக்குச் சமாதானம்மாதிரி

புதியதான ஏதோ ஒன்று
உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு பணிவிடைக்காரனாயிருக்கக் கடவன். ~ மாற்கு 10:43
ஓவியர் வெள்ளை நிறம் தெளித்தபோது, கருப்பு கேன்வாஸில் ஊதா நிறமாக மேகங்கள் தோன்றின. ஓவியர் நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் தெறித்தபோது, மலைகள் விரைவில் வானத்தை நோக்கித் தோன்றின, வெண்ணிறத் துகள்கள் பனியில் அவைகளைச் சூழ்ந்தன. பின்னர் கலைஞர் அதிர்ச்சியூட்டும் மஞ்சள் தெளிப்பில் அடித்தளத்தை தீட்டியபோது, காட்சி பாழாகத் தெரிந்தது.ஆனால் ஓவியர் கேன்வாஸில் தொடர்ந்து தீட்டியபோதுஒரு ஓடையால் பாய்ச்சப்பட்ட பச்சை மேய்ச்சல் வெளிவரத் தொடங்கியது. தவறு போல் தோன்றிய ஒன்று புதிதாக மாறியது. ஏதோ சிறந்தது.
ஒரு புதிய ராஜ்யத்தைப் பற்றிய கிறிஸ்துவின் வாக்குறுதி சீஷர்களுக்கு ஒரு கவர்ச்சியான வாய்ப்பாகத் தோன்றியது. யூத மக்களை ரோமானிய அடக்குமுறையிலிருந்து விடுவித்து, சீஷர்களைத் தமது அமைச்சரவையாக நியமிக்கும் ஒரு மேசியா தலைமையிலான அரசாங்கத்தை அவர்கள் கற்பனை செய்தனர். சீஷர்களில் யாருக்கு முக்கியமான பதவி என்று கூட சண்டையிட்டனர் (மாற்கு 10:37,41).சீஷர்களுக்குச் சிலுவை ஒரு பெரிய தவறு, ஒரு முழுமையான தோல்வி போல்இருந்தது. இயேசு வரைந்த காட்சியில் தலைவன் சேவை செய்கிறான்,பலவீனம் பலமாகிறது, கடைசியிலிருப்பவன் முதன்மையானவனாகிறானென்பதை அவர்களால்ப் பார்க்க முடியவில்லை. எல்லாம் தோற்றுப்போனபோது, கிறிஸ்து ஜெயித்ததை அவர்கள் உணரவில்லை.
நாமும் நம்சொந்தத் திட்டங்களை உருவாக்குகிறோம், யதார்த்தம் ஊடுருவும் வரை அவை நமக்கு நன்றாகத் தோன்றும். கர்த்தர் நம் வாழ்க்கையில் சற்று வித்தியாசமானதைச் செய்யும்போது, நமது தீர்மானங்களை மாற்றும்போது, நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அழகையும் படைப்பாற்றலையும் நாம் எதிர்பார்க்கலாம். தலைமைக் கலைஞராகியதேவன் நம் வாழ்க்கையில் புதியக் காரியங்களைச் செய்கிறார்.
சிந்தனைக்கு
சீடர்கள் தங்கள் தலைவர் சிலுவையில் அறையப்பட்டபோது எப்படி உணர்ந்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? கடவுளின் வழி நம்முடையதை விட வித்தியாசமானது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
ஜெபம்
பரலோகத் தகப்பனே, நன்மையானாலும் தீமையானாலும் உமது சித்தத்தின்படி நடக்கிறதென்று அறிந்து கொள்ளக் கூடியஞானமாகிய ரகசியத்தை எங்களுக்குத்தாரும். எல்லா சூழ்நிலைகளிலும் உம்மை நம்பவும்எங்களுடைய வாழ்வின் உம்முடைய திட்டங்களை புரிந்து கொள்ளவும் எங்களுக்கு உதவியருளும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

"என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக" - யோவான் 14:27 எங்கள் தியானங்கள் மூலம் இயேசுவின் சமாதானத்தை பற்றி மேலும் இங்கு கற்றுக்கொள்ளுங்கள் :
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக எங்கள் தினசரி ரொட்டி - இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது
