“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!மாதிரி

“தேவன் உன்னிடம் வந்துள்ளார்!”
நித்தியவாழ்வைப்பற்றிய வாக்குத்தத்தமானது, தேவன் நம்மிடம் வந்ததால் கிடைத்ததேயொழிய, நாம் தேவனைச் சிரமத்துடன் தேடி, எங்கோ தொலைதூரத்தில் அவரைக் கண்டுகொண்டதினால் அல்ல.
காலங்களின் தோற்றத்துக்கு முன்னதாகவே, நம் ஒவ்வொருவரையும் நிபந்தனையற்ற நித்திய அன்புடன் நேசித்துள்ளார். அவரது முதல் நோக்கம் நம் ஒவ்வொருவருடனும் உறுதியான, துடிப்புள்ள உறவுகொள்ள வேண்டும் என்பதுதான். ஆனாலும், தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் தேவனுடைய கட்டளையை மீறியபடியால், அவர்களின் பாவம் நமக்கும் தேவனுக்கும் இடையில் இடைவெளியை உண்டுபண்ணிவிட்டது. நாம் அவரிடமிருந்து நித்தியமாய்ப் பிரிக்கப்பட்டுவிட்டோம்.
நம்மை அப்படியே பிரிந்திருக்க விட்டுவிடாமல், நம்மீது அவர் கொண்டுள்ள முடிவற்ற அன்பினாலும், இரக்கத்தினாலும் உந்தப்பட்டு நமது மீட்புக்கான ஒரு பூரணமான திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினார். அவரது திட்டத்தின் நோக்கம், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்யும் முன்னர் அவருக்கும் மனுக்குலத்துக்கும் இடையே இருந்த உறவை, அதனுடைய நுணுக்கமான அம்சங்களில் ஒன்றையும் இழந்துவிடாமல், அப்படியே புதுப்பித்துக்கொள்வதுதான்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பாவத்தினால் எழுப்பப் பட்ட தடையைத் தகர்க்கவும், இரட்சிப்பை எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்யவும், தமது குமாரனை பூமிக்கு அனுப்பினார்.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப் படுவதற்காகவே அவரை அனுப்பினார்” – யோவான் 3:16-17
தமது மரணத்தினாலும், உயிர்ப்பினாலும் இயேசு நமது சார்பாக பாவத்தின் தண்டனைக்கான பரிகாரத்தை முற்றிலும் செலுத்தி, நமக்கும் தேவனுக்கும் இடையே ஏற்பட்ட தடையை அகற்றினார். அவரைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் இந்த மன்னிப்பை அருளிச்செய்தார்.
ஆனால், இது ஒரு துவக்கம் மட்டுமே. இயேசு இவ்வுலகை விட்டு பரலோகத்திலுள்ள தன் பிதாவிடம் செல்லுவதற்கு முன்பாக, மனுக்குலத்தை தம்மோடு முற்றிலுமாகச் சேர்த்துக் கொள்ளும்படியாகத் தேவன் வைத்திருந்த பெரிய திட்டத்தின் இன்னொரு முக்கியமான அம்சத்தைப்பற்றி விளக்கினார்:
“என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” – யோவான் 14:2-3
பாவத்தினால் ஏற்பட்ட தடையை அகற்றுவதற்காக இயேசுவை அனுப்பியது மட்டுமல்ல, வருங்காலத்தில் அவரோடு சகல விசுவாசிகளும் எப்போதும் உடன் இருக்கும்படியாக அவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஒருநாள் இயேசு மீண்டும் திரும்பி வருவார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் தனித்திருக்கவில்லை. வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும், நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும் இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில் தேவனுடைய உதவியை எப்படிப்பற்றிக்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி

Walk With Jesus - நம்முடைய ஆறுதல்

நம்பிக்கையின் குரல்

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

பயத்தை மேற்கொள்ளுதல்

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

கோபத்தைக் கைவிடுதல்

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!
