மகிழ்ச்சி
ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
உங்கள் வாழ்க்கையிலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் ஆண்டவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த உங்களைத் தடுத்து நிறுத்தமுடியாத ஒரு நபராக மாற்றும் ஏழு குணங்களைக் கண்டறிய இந்த ஒரு வாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி
தேவனின் கிருபைகள் காலைதோறும் புதியவைகள். இந்த திட்டம் உங்களை ஒவ்வொரு நாளும் வாழ்கை பாதையில் தேவனோடு நடத்தி ஜெப வாழ்க்கையில் உறுதிப்பட வாழ்க்கையில் மகிழ்ச்சிப்பெற தேவ வார்த்தையால் பெலப்படுத்தும். இயேசு உங்களோடு தினமும் பேசி மகிழ்ச்சியோடு வழிநடத்த வாஞ்சிக்கிறார். உங்கள் இருதயங்களை அவருக்கு கொடுப்பீர்களா ?
உயிர்த்தெழுதலின் கதை
உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும்.
கவலை
அறியாதவற்றை பற்றிய கவலையாலும் பயத்தாலும் நம் வாழ்க்கை எளிதாக நிரம்பி விடலாம். ஆனால் தேவன் நமக்கு பயம் மற்றும் கவலையின் ஆவியை கொடாமல், தைரியத்தின் ஆவியை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனிடம் நீங்கள் திரும்ப இந்த ஏழு நாள் திட்டம் உங்களுக்கு உதவும். கவலைக்கு தீர்வான முடிவு தேவனிடம் உங்கள் நம்பிக்கையை வைப்பது தான்.
உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுத்தல்
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நீங்கள் விரும்பினால், உங்கள் அட்டவணையில் சமநிலையைக் கண்டறிய வேண்டும். உங்கள் உள்ளீட்டையும் உங்கள் வெளியீட்டையும் எவ்வாறு மறுசீரமைக்கலாம் என்பதை பாஸ்டர் ரிக் பகிர்ந்து கொள்கிறார், இதனால் நீங்கள் கொடுப்பதும் பெறுவதும் உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுக்க உதவுகிறது, அதை இழக்காமல் இருக்க உதவுகிறது.
ஒன்றுக்கும் கவலையில்லை
அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் மாக்ஸ் லுகாடோ பிலிப்பியர் 4:4-8 இல் காணப்படும் கவலைக்கான கடவுளின் சிகிச்சை திட்டத்தை ஆராய்கிறார். இந்த சிகிச்சையை - கடவுளின் நன்மையைக் கொண்டாடுவது, அவருடைய உதவியைக் கேட்பது, அவருடன் உங்கள் கவலைகளை விட்டுவிட்டு, நல்ல விஷயங்களைத் தியானிப்பது - இவைகளை நீங்கள் பின்பற்றும்போது, கடவுளின் சமாதானத்தை அனுபவிப்பீர்கள். கவலை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த வேண்டியதில்லை
உங்களுக்குச் சமாதானம்
"என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக" - யோவான் 14:27 எங்கள் தியானங்கள் மூலம் இயேசுவின் சமாதானத்தை பற்றி மேலும் இங்கு கற்றுக்கொள்ளுங்கள் :
நம்மில் தேவனின் திட்டம்
நம்மில் தேவனின் திட்டம் என்பது நாம் இழந்து போன தேவனின் பிள்ளைகள் என்ற முழுமையான நிலையை மீண்டும் பெறுவதாகும். தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, தேவன் நம்மை உருவாக்கும் போதே நமக்கு தந்தருளின இயல்பான வலிமைகள், திறமைகள் இவற்றை உரிமைப் படுத்தி விசுவாசத்தில் செயல்படுவதற்கு வழி காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தேவனின் பரிபூரண சித்தத்துடன் இணைந்து தேவனுடைய அழியாத வாக்குறுதிகளில் நம்பிக்கை உடையவர்களாக விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ கிருபை பெற்றுக்கொள்கிறோம். நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாம் ஆன்மீக உன்னத அந்தஸ்தை இழந்து விட்டோம். தேவன் நம் ஒவ்வொருவருக்காக திட்டம் பண்ணின வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் செல்லுவோம்.
பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.