மகிழ்ச்சி
இயேசு – உலகத்தின் ஒளி
கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம் நமக்குள்ள இருளை உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது. அந்த இருளுக்கு ஒளியேற்றும் இயேசு கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டாடுகிறது. அவருடைய ஒளியின் பிரசன்னத்தில் நாம் ஒருநாள் விடுவிக்கப்படுவோம் என்பது நம்முடைய ஊக்கம் ஆகிறது, கிறிஸ்துவின் மேல் நம்பிக்கைகிறது. இந்த விடுமுறை காலத்தில் அந்த பிரகாசமான ஒளியின் மீது கவனம் செலுத்துவோம். நமது அனுதின மன்னா இந்த பத்து பிரதிபலிப்புகளால் இந்த கிறிஸ்துமஸில் உங்கள் வாழ்வில் இயேசு கிறிஸ்துவின் ஒளியேற்றும் வழிகளை திறக்கிறது .
ஒன்றுக்கும் கவலையில்லை
அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் மாக்ஸ் லுகாடோ பிலிப்பியர் 4:4-8 இல் காணப்படும் கவலைக்கான கடவுளின் சிகிச்சை திட்டத்தை ஆராய்கிறார். இந்த சிகிச்சையை - கடவுளின் நன்மையைக் கொண்டாடுவது, அவருடைய உதவியைக் கேட்பது, அவருடன் உங்கள் கவலைகளை விட்டுவிட்டு, நல்ல விஷயங்களைத் தியானிப்பது - இவைகளை நீங்கள் பின்பற்றும்போது, கடவுளின் சமாதானத்தை அனுபவிப்பீர்கள். கவலை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த வேண்டியதில்லை
புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்
பாவம் (SIN) -என்பதன் அர்த்தம் - குறி தவறும் அம்பு; வழி தப்பிப்போன ஆடு, காணாமல் போன வெள்ளிக்காசு; (மரித்த -தேவனோடு உள்ள உறவிலிருந்து பிரிந்த) வாழ்க்கை. இயேசு - பாவிகளை ஏற்றுக்கொள்கிறார்; அவர்களோடு சாப்பிடுகிறார் (ஐக்கியப்படுகிறார்) – என்பதே இங்கே அவரைக்குறித்து முறுமுறுக்கப்பட்ட வார்த்தைகள். சர்வலோகமும் அதுவாக தானாக தோன்றவில்லை. சிருஷ்டிப்பு என்று ஒன்று இருக்குமானால் சிருஷ்டிகர் என்று ஒருவர் இருக்கத்தான் வேண்டும். இயேசு யார்? யோவான் 1:18 நமக்கு கற்றுத்தருவது :பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரன் – தேவனை வெளிப்படுத்தினார். சர்வலோகத்தையும் சிருஷ்டித்தவர்– தேவன் -அவரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய மடியிலிருக்கிற குமாரன் – இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டால் போதும் இயேசுவே தேவனுடைய ஒரேபேறான குமாரன். இயேசு – வழிதப்பிப்போனவர்களை ஏற்றுக்கொள்வது தேவனுடைய சுபாவத்தை நமக்கு காட்டுகிறது. நாம் புத்திதெளிந்து - மனம்திரும்பி வரும் போது - நம்மைஅவருடைய பிள்ளைகள்- CHILDREN என்றே அழைக்கிறார் - வேலைக்காரன் என்று அல்ல என்பதே இந்தத் தொடர்.
கிறிஸ்மஸ் தியானங்கள்
நமது கிறிஸ்துமஸ் கதை மரியாளுக்கு தேவதூதனின் அறிவிப்பில் தொடங்கி சாஸ்திரகளின் வருகையுடன் முடிவடைகிறது. கிறிஸ்மஸ் கதையின் இந்த தியான பிரதிபலிப்புகள் மற்றும் பயன்பாடுகளில் நான் பெரும்பாலும் லூக்கா சுவிஷேஷத்தில் இருந்து மேற்கோள் காட்டுவேன், ஏனெனில் அவருடைய சுவிஷேஷம் நற்செய்தி நூல்களில் முழுமையாக உள்ளது.
உங்களுக்குச் சமாதானம்
"என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக" - யோவான் 14:27 எங்கள் தியானங்கள் மூலம் இயேசுவின் சமாதானத்தை பற்றி மேலும் இங்கு கற்றுக்கொள்ளுங்கள் :
பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்
தேவன் உங்களைப் படைத்து, இந்த நேரத்தில் உங்களை உருவாக்கினார், அன்பில்லாதவர்களை நேசிக்கவும், கொந்தளிப்பில் அமைதியைப் பிரதிபலிக்கவும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதிர்மறையான மகிழ்ச்சியைக் காட்டவும். இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் இயல்பான மனித உணர்ச்சிகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்றும் வேதாகமம் என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சாதாரண மற்றும் சில சமயங்களில் அசாதாரணமான சவால்களை இந்த தியானம் உள்ளடக்கியது, மேலும் உங்கள் உணர்ச்சிகளை தெய்வீக வழியில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய வேதகமாக் குறிப்புகளை வழங்குகிறது.
உண்மையான கிறிஸ்துமஸைக் கொண்டாடுவோம்!
எங்கு பார்த்தாலும், வண்ணமயமான பண்டிகை விளக்குகள் பளிச்சென ஒளி வீசி மிளிர்கின்றன, அடுமனைகளில் விதவிதமான கேக் செய்யும் வாசனை காற்றிரில் வீசுகிறது. மேலும் பல வாரங்களாக, கிறிஸ்துமஸ் கேரல் பாடல் குழுக்கள் வீடு வீடாக வளம் வந்து கிறிஸ்துமஸ் பாடல்களை பாட தொடங்கிவிட்டன. இந்த கேரல் பாடல்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்தியதை விட இன்னும் சிறப்பானதாகத் தெரிகிறது, இந்த வருடம் நம் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தை உயர்த்தும் இந்தப் பாடல் வரிகளை (மீண்டும்) ஆராய்ந்து ஆண்டவரைத் துதிப்போம்.
நம்மில் தேவனின் திட்டம்
நம்மில் தேவனின் திட்டம் என்பது நாம் இழந்து போன தேவனின் பிள்ளைகள் என்ற முழுமையான நிலையை மீண்டும் பெறுவதாகும். தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, தேவன் நம்மை உருவாக்கும் போதே நமக்கு தந்தருளின இயல்பான வலிமைகள், திறமைகள் இவற்றை உரிமைப் படுத்தி விசுவாசத்தில் செயல்படுவதற்கு வழி காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தேவனின் பரிபூரண சித்தத்துடன் இணைந்து தேவனுடைய அழியாத வாக்குறுதிகளில் நம்பிக்கை உடையவர்களாக விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ கிருபை பெற்றுக்கொள்கிறோம். நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாம் ஆன்மீக உன்னத அந்தஸ்தை இழந்து விட்டோம். தேவன் நம் ஒவ்வொருவருக்காக திட்டம் பண்ணின வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் செல்லுவோம்.
கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்பு
இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்