மன அழுத்தம்
விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
ஏன் கர்த்தாவே ஏன் ? நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் விரக்தியை அனுபவிக்கிறோம்.இந்த கடினமான சூழ்நிலையை ஏன் "ஆண்டவர் அனுமதிக்கிறார்" என்பதை புரிந்துகொள்வது பலருக்கும் கடினமாக இருக்கலாம். அதனால்தான் விரக்திக்கான வேதாகமத்தின் பதிலைப் பற்றி மேலும் அறியும் பயணத்தில் அப்போஸ்தலன் பவுலின் அடிச்சுவடுகளில் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
அமைதியாக இருங்கள்: அமைதியான காலத்திற்கான எளிய வழிகாட்டி
அமைதியாக இருங்கள். சிலருக்கு, இந்த இரண்டு எளிய வார்த்தைகள் மெதுவாகச் செல்ல வரவேற்கத்தக்க அழைப்பு. மற்றவர்களுக்கு, அவை சாத்தியமற்றதாக உணர்கிறது, பெருகிய முறையில் சத்தம் நிறைந்த நம் உலகில் அணுக முடியாதது அல்லது பராமரிப்பது மிகவும் கடினம். பிரையன் ஹீஸ்லி, நம் இதயங்கள் அமைதியாக இருப்பதற்கு நாம் எப்படி நிலையானதாக இருக்க வேண்டியதில்லை என்பதையும், முழு, பிஸியான வாழ்க்கையின் மத்தியிலும், கடவுளுடன் எப்படி அமைதியான நேரத்தை செலவிட முடியும் என்பதையும் விளக்குகிறார்.
இனியும் பயத்தில் வாழவேண்டாம்
பயம் மற்றும் பதட்டத்தை கையாள்வது உனக்கு கடினமாக இருக்கலாம். பயத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது மற்றும் உன் பயத்தை நீ எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி இங்கே விரிவாக காணலாம்.
பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்
சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது அல்லது இதுவாக இருந்தால் என்ன செய்வீர்கள்? பரிசுத்த யுதத்திற்குள் சேருங்கள்-கடின உழைப்பின் வாழ்க்கை மற்றும் நன்கு ஓய்வெடுக்கும் தேவனை கௌரவிக்கும் வழிகள்.
குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்
நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே குற்றப்படுத்தியிருக்கிறீர்களா? உங்களது தவறுகளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறீர்களா? தொடர்ந்து நம் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதுதான் பிசாசின் நோக்கம். அவன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் இரவும் பகலும் நம் மீது குற்றம் சாட்டுபவனாய் இருக்கிறான். சத்துருவின் இந்தத் திட்டம், நம்மைக் குறித்த ஆண்டவரது திட்டம் அல்ல! நீங்கள் உங்களையே மன்னிக்க வேண்டுமானால், எங்கு மனிக்கத் தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த வாசிப்புத்திட்டத்தை வாசிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எல்லாக் குற்றங்களுக்கும் நீங்கலாகி, சகல பரிமாணங்களிலும் மன்னிப்பை அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இன்றே அவருடைய சமாதானத்தைப் பெற்றுச் செல்லுங்கள்!
கொந்தளிப்பான நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்
நாம் ஒரு கொந்தளிப்பான காலத்தில் இருப்பதாக உணரும் போது மனநிலையை அமைதி நிலையில் காத்துக்கொள்வது சவாலானது என்பது விளங்கக் கூடிய கருத்துதான், ஆயினும் நிச்சயமாக இந்த ஒரு அமைதி நிலையை அடைந்து விடலாம். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; சங்கீதம் 46:10a. ஒரு குழப்பமான மனதுக்கான ஒரே தீர்வு நம் நம்பிக்கை விசுவாசம் இவைகளில் அடங்கி இருக்கிறது.நம் மனதின் எண்ணங்களை அல்லது குழப்ப நிலைகளை தேவன் மேலேயே வைத்து, இந்தப் பாரச்சுமைகளை தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய மாறாத அன்பிலும், நம்மை விட்டு மாறாத அவருடைய பிரசன்னத்திலிருந்து வரும் தெய்வீக ஆறுதலையும் அமைதியையும் கண்டறிவதாகும்.
கவலையை மேற்கொள்ளுதல்
இந்த வாசிப்புத் திட்டம் வேத வசனமான பிலிப்பியர் 4:6-7ஐ அடிப்படையாகக் கொண்டது. தேவனுடைய வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், உங்களால் சகல கவலைகளிலிருந்தும் விடுபட முடியும்... நான் அதை விசுவாசிக்கிறேன்! இந்தத் தொடர் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டிருக்கும் கவலைகளை மேற்கொண்டு ஜெயிக்க உங்களுக்கு உதவும்...
அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்
நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.
பளு அதிகம் இல்லாத பயணம் செய்
மும்முரமான கிறிஸ்துமஸ் காலத்தில், நம்மில் அநேகர் குடும்ப உறவுகள், பண பிரச்சனைகள், அவசர முடிவுகள் மற்றும் ஏமாற்றமளிக்கும் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணருகிறோம். ஆகவே தொடர்ந்து வாசியுங்கள். பொறுமையாக ஒரு மூச்சு விடுங்கள். இந்த 'Life Church' இன் வேதாகம திட்டத்தை வாசித்து தேவன் நாம் சுமக்க சொல்லாத அநேக பாரங்களை நாம் சுமந்து கொண்டிருப்பதை உணருங்கள். இந்த பாரங்களை இறக்கி வைத்துவிட்டால் என்ன? பளு அதிகம் இல்லாத பயணம் செயலாம்.