மன அழுத்தம்
மனஅழுத்தம்
வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.
என் மனமே, நீ ஏன் கலங்குகிறாய்?
“நீ ஏன் கலங்குகிறாய்?” இதைக் குறித்து யோசித்து இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க என்னுடன் சிறிது நேரம் ஒதுக்குவாயாக. சில சமயங்களில், எதற்காக கலக்கமடைகிறாய் என்பது புரியாமலேயே, மனக்கலக்கம் மீண்டும் உன் இருதயத்தைத் தட்டுவதை நீ கவனித்திருக்கிறாயா? நீ கலக்கமடைய வேண்டியதில்லை. கலக்கம் தற்காலிகமானதே. அது உன்னில் நிரந்தரமாகத் தங்கிவிட இடங்கொடாமல், தைரியமாக நிற்பது எப்படி என்பதை இன்று நாம் காண்போம்!
கவலையை மேற்கொள்ளுதல்
இந்த வாசிப்புத் திட்டம் வேத வசனமான பிலிப்பியர் 4:6-7ஐ அடிப்படையாகக் கொண்டது. தேவனுடைய வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், உங்களால் சகல கவலைகளிலிருந்தும் விடுபட முடியும்... நான் அதை விசுவாசிக்கிறேன்! இந்தத் தொடர் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டிருக்கும் கவலைகளை மேற்கொண்டு ஜெயிக்க உங்களுக்கு உதவும்...
வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்
வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. வாழ்வை மாற்றமடையச் செய்வது. விசுவாசத்தை உருவாக்கும் தன்மையுடையது. இந்த வாசிப்புத்திட்டத்தை நீங்கள் படிக்கும்போது வனாந்தரத்தை வெறுக்காமல் அதைத் தழுவிக் கொண்டு கர்த்தர் உங்களில் தனது சிறப்பானதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுவே எனது ஜெபமாகும்.
அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது
தேவாதி தேவனுடன் அமைதியான நேரத்தை செலவிடுவது மிக முக்கியம். சங்கீதம் 46:10-“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்”. இதனால் அமைதியாக இருக்கவும், தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கவும் முடிகிறது. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” ஜெபிப்பதற்காக ஒரு தனிப்பட்ட இடத்திற்கு வரும்படி இயேசு நம்மை ஊக்குவிக்கிறார். இவ்வித அமைதியின் மூலம், நமது ஆற்றல் அளவினை அதிகரிப்பதை மட்டுமின்றி உடல் மற்றும் மனதினையும் சீரமைத்துக் கொள்ள முடியும்.
பாதுகாப்பாக இருப்பது போதும் என்ற மனம் வேண்டாம்
பாதுகாப்பின்மை, சந்தேகம் மற்றும் பயம் ஆகியவற்றின் குரல்கள் எதிர்கொள்ளப்படாவிட்டால், அவை உங்கள் வாழ்க்கையை ஆணையிடும். இந்த குரல்களை நீங்கள் மௌனமாக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது. இந்த 3-நாள் வாசிப்புத் திட்டத்தில், சாரா ஜேக்ஸ் ராபர்ட்ஸ் உங்கள் கடந்த கால வரம்புகளை எவ்வாறு மீறுவது மற்றும் தடுக்க முடியாததாக மாறுவதற்கு சங்கடமானவற்றை எவ்வாறு தழுவுவது என்பதைக் காட்டுகிறது.
அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?
பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.
விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
ஏன் கர்த்தாவே ஏன் ? நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் விரக்தியை அனுபவிக்கிறோம்.இந்த கடினமான சூழ்நிலையை ஏன் "ஆண்டவர் அனுமதிக்கிறார்" என்பதை புரிந்துகொள்வது பலருக்கும் கடினமாக இருக்கலாம். அதனால்தான் விரக்திக்கான வேதாகமத்தின் பதிலைப் பற்றி மேலும் அறியும் பயணத்தில் அப்போஸ்தலன் பவுலின் அடிச்சுவடுகளில் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
தெளிவாக சிந்திக்க போதுமான இடம்
எல்லாவற்றையுமே செய்ய வேண்டுமென்று முயற்சிக்கும் காரணத்தால், எந்த விஷயத்திலும் விருப்பம் இல்லாதது போல நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? இந்த வாழ்க்கைப் பயணத்தில் விரும்பியவருடன் பற்பலவற்றை ஒரேநேரத்தில் செய்கிறோம். . .நீங்கள் திறமையாளர்தான். ஆனால் சோர்வடைந்துவிடுகிறீர்கள். அத்தகைய நேரத்தில் காற்றோட்டமான ஒரு அறை உங்களுக்கு சிறிது தேவைப்படும். ஒரு சாதாரணமான ஆனால் ஆச்சரியமான வரவேற்பின் மூலம், கர்த்தர் உங்களுடைய அதிவேகத்தை சமாதானம் நிறைந்த ஒன்றால் இறுதியாக மாற்றியமைக்க வழிவகை வழங்குகிறார். இந்த திட்டம் அதை எப்படியென காண்பிக்கும்.