சங்கீதம்
ஒரே விஷயம்
இந்த மனதை உலைக்கும் உலகில் இயேசுவுக்காக வாழ்வது என்னவென்று நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். இந்த உலகம் ஒரு நூறு மைல்கல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நமக்குத் தேவையானதை விடக் கூடுதல் தகவல்கள் நம்முடைய கைகளில் உள்ளன. இது நவீன உலகத்தின் இயல்பா? இப்படிப் பறக்கிற சூழலில் நம்மை எப்படி நிதானப்படுத்திக் கொள்வது? சங்கீதம் 27:4 இல் அதற்கான பதில் உள்ளது – ஒரே ஒரு விஷயம், அந்திரேயா கார்ட்லெஜ்.
சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்
நமது அனுதின மன்னாவிலிருந்து பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட இந்த 5 வாசிப்புகளிலிருந்து சங்கீதங்களின் நேர்மையான, மூல அதாவது மாற்றப்படாத, மற்றும் இதயபூர்வமான அழுகையின் பயணம் இது. தேவனுடனான உங்கள் சொந்த உரையாடலை ஆழமாக்கவும், அவர்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பவர்களுக்கு அவர் தருகின்ற நம்பிக்கையைக் கண்டுகொள்ளவும், திரும்பவும் திரும்பவும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுவின் அன்பு, மீட்பு மற்றும் முன் ஏற்பாடுகளையும் கண்டுகொள்ளவும் இந்த சங்கீதக்காரர்களின் வார்த்தைகளைப் யன்படுத்திகொள்ளுங்கள். தமது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகின்ற இரட்சகரின் நிமித்தம், பாதுகாப்பும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை வாழுவதற்கு இந்த சங்கீதக்காரர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.
சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்
சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!
சங்கீதம் 23
சங்கீதம் 23ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார். இது உலகத்தில் அநேக மக்களின் இதயத்தை தொட்ட அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வார்த்தையின் செய்தி உனக்கு ஒரு அபரிவிதமான ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
சங்கீதங்களும் நீதிமொழிகளும்
சங்கீதம் புத்தகத்தை இரண்டு முறையும் நீதிமொழிகளை 12 முறைகளும் வாசிக்க உதவ YouVersion.com இலுள்ள நபர்களால் சங்கீதமும் நீதிமொழிகளும் திட்டம் தொகுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரு வருடம் முழுவதும் வாசிப்பதற்கானது.
சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் 31 நாட்களில்
சங்கீதம் மற்றும் நீதிமொழிகளில் பாடல்களும் கவிதைகளும் உரைநடைகளும் நிறைந்திருக்கிறது- இவை உண்மை ஆராதனையையும், வாஞ்சையையும், ஞானத்தையும், அன்பையும், நம்பிக்கையிழந்த நிலையையும், சத்தியத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்தத் திட்டம் உங்களை சங்கீதம் மற்றும் நீதிமொழிகளின் வழியே முற்றிலும் 31 நாட்களிலேயே அழைத்துச் செல்லும். இங்கே நீங்கள் கர்த்தரை சந்திக்கலாம், மற்றும் வாழ்க்கையின் எல்லா விதமான அனுபவங்களுக்கும் தேவைப்படுகிற ஆறுதலையும் தேறுதலையும் உற்சாகத்தையும் கண்டு உணரலாம்.