நம்பிக்கை
பரலோகத்திலிருந்து கேட்பது: தினசரி வாழ்க்கையில் இறைவனைக் கேட்பது
கர்த்தர் இன்றும் உயிரோடிருக்கிறார், செயற்பட்டு வருகிறார், அவர் நேரடியாகத் தம் பிள்ளைகள் ஒவ்வொருவரிடமும் பேசுகிறார். ஆனால் சில நேரங்களில், அவரைக் காண்பதும் கேட்பதும் கடினமாக இருக்கும். நைரோபியின் குடிசைப் பகுதிகளில் கடவுளின் குரலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு மனிதனின் பயணத்தின் கதையை ஆராய்வதன் மூலம், அவரைக் கேட்பது மற்றும் பின்பற்றுவது எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
சீடத்துவம்
நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு. எசேக்கியேல் 38:7 ஆண்டவருடைய வார்த்தையின்படி நீ அநேக ஆத்துமாக்களை அவர் வருகைக்காக ஆதாயப்படுத்த விரும்புகிறாயா? ஆனால் எப்படி துவங்குவது அல்லது எப்படி இதை செயல்படுத்துவது என்று தெரியவில்லையா? இந்த திட்டம் உனக்கானது. நீயும் ஆண்டவருடைய ஒரு சீடராக எப்படி வாழ்வது என்பதை பற்றி விரிவாக இந்த திட்டத்தில் வாசிப்போம்.
சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்
மிகுந்த கவலையின்போது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நமக்குத் தேவைப்படுகிறது. உலகத்தையே மாற்றக்கூடிய யுத்தங்களுக்கு மத்தியில் நாம் இருந்து வந்தாலும், தேவனுடைய பரிபூரண சமாதானத்துக்குள் பிரவேசிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது உங்களுக்கு உதவும். மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆண்டவருடைய சமாதானத்தையும் நம்பிக்கையையும் பெறுவது எப்படி என்பதை பரிசுத்த ஆவியானவர் தேவ வார்த்தையிலிருந்து உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பார்.
எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்
கவலை என்பது நமது நேரம், ஆற்றல் மற்றும் அமைதியின் திருடன். இப்படி இருக்க நாம் ஏன் கவலைக்கொள்ள வேண்டும்? இந்த 3-நாள் தியானத்திட்டதில், கவலையை பற்றியும், நாம் ஏன் கவலைக்கொள்கிறோம் என்றும், எப்படி அதை நிறுத்த வேண்டும் என்றும் பார்ப்போம்.
பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்
எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்
உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்
சண்டை சச்சரவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன; அதற்காக, கசப்பான மற்றும் முறிந்த உறவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனாலும் மற்றவர்களுடனான நமது உறவை நாம் சரிசெய்து குணப்படுத்துவதற்கு முன்பு, ஆண்டவருடனான நமது உறவை அவர் குணப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், ஒப்புரவு என்ற அற்புதத்தை இயேசு எவ்வாறு செய்கிறார் என்பதைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். மனந்திரும்புதல், பரிகாரம் மற்றும் மன்னிப்பு ஆகிய அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சண்டை சச்சரவை சமாளிப்பதைத் தாண்டி விடுதலை மற்றும் குணமடைதலுக்குக் கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் உறவில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல தீர்வுகளைக் கண்டறிந்து, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின் வாயிலாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுவீர்கள்.
உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் யாவும் உனக்கு மெய்யாகவே நிறைவேறுமா என்று நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆம்! ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமானவை, உன் எல்லா சூழ்நிலைகளிலும் உனக்கு அவைகள் உண்மையானதாகவே இருக்கும். நீ ஆண்டவரை விசுவாசித்து, தினமும் அவருடன் நடக்கும்போது, அவர் உனக்காக வைத்திருக்கும் 7 வாக்குத்தத்தங்களையும் எப்படி பெற்றுக்கொள்வாய் என்பதை பற்றியதே இந்த வாசிப்பு திட்டம்.
இயேசு – உலகத்தின் ஒளி
கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம் நமக்குள்ள இருளை உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது. அந்த இருளுக்கு ஒளியேற்றும் இயேசு கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டாடுகிறது. அவருடைய ஒளியின் பிரசன்னத்தில் நாம் ஒருநாள் விடுவிக்கப்படுவோம் என்பது நம்முடைய ஊக்கம் ஆகிறது, கிறிஸ்துவின் மேல் நம்பிக்கைகிறது. இந்த விடுமுறை காலத்தில் அந்த பிரகாசமான ஒளியின் மீது கவனம் செலுத்துவோம். நமது அனுதின மன்னா இந்த பத்து பிரதிபலிப்புகளால் இந்த கிறிஸ்துமஸில் உங்கள் வாழ்வில் இயேசு கிறிஸ்துவின் ஒளியேற்றும் வழிகளை திறக்கிறது .
நான் சரணடைகிறேன்: கைதிகளால் எழுதப்பட்ட ஊக்கமளிக்கும் திட்டம்
பைபிள் மீட்பு, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் புத்தகம். அதன் பக்கங்களுக்குள் ஆற்றல் மிக்க கதாபாத்திரங்கள் உள்ளன. உடைந்த ஆண்களும் பெண்களும் பதில்களைத் தேடுகிறார்கள். ஒருவகையில், அவர்கள் நீங்கள் படிக்கவிருக்கும் பக்திப்பாடல்களை எழுதிய தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளைப் போன்றவர்கள். கம்பிகளுக்குப் பின்னால் உள்ள தேவாலயத்தின் குரல்களால் நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள் என்று நம்புகிறோம். அவர்களின் சாட்சி நம் அனைவரையும் விடுவிக்கட்டும்.