சங்கீதம் 51:10-17

சங்கீதம் 51:10-17 TAOVBSI

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும். ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 51:10-17

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்:  இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல்  ஆகும் சங்கீதம் 51:10-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்: இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல் ஆகும்

4 நாட்கள்

வாழ்க்கையில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பாரம்பரியங்களை அல்லது பழக்க வழக்கங்களை நடைமுறைக் கொள்வதில் நாம் உற்சாகத்துடனும் பிறரை மகிழ்விப்பதில் ஞானத்துடனும் நடந்து கொள்வது அவசியம். மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை நண்பர்களுடன் வளர்ப்பது அவர்கள் மேலுள்ள நமதுஅன்பைக் காட்டுகிறது. . மற்றவர்களுடைய இரட்சிப்பின் மேலும் நமது நீங்காத பாரத்தையும் அவர்களுக்காக ஜெபிக்கும் ஜெபவாஞ்சையையும் ஏற்படுத்துகிறது.