மத்தேயு 6:16-18

மத்தேயு 6:16-18 TRV

“நீங்கள் உபவாசிக்கும்போது, வெளிவேடக்காரர் செய்வது போல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காகத், தங்கள் முகங்களை வாடப் பண்ணுகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் தலைக்கு எண்ணெய் பூசி, முகத்தைக் கழுவுங்கள். அப்போது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாமல் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும்; ஆகையால் மறைவில் செய்பவற்றை காண்கின்ற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 6:16-18

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம் மத்தேயு 6:16-18 இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

6 நாட்களில்

ஜெபம் மற்றும் உபவாசம் என்பது ஜெபத்தில் கவனம் செலுத்துவதற்கும், தேவனுடனான ஒருவரின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கும் தானாக முன்வந்து உணவைத் தவிர்ப்பதை வெளிப்படுத்துகிறது. அவை தனித்தனியாகவும் நிகழலாம், அவற்றின் கலவையானது செயல்திறனை அதிகரிக்கிறது. ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் நேரம் ஒதுக்குவது என்பது தனிப்பட்ட ஆசைகளுக்காக தேவனை தேடுவதல்ல, மனத்தாழ்மையுடன் தேவ பலத்திற்காக ஞானத்திற்காக தன்னை மையப்படுத்தி அவரைச் சார்ந்திருப்பது மத்த எல்லாவற்றையும் தவிர்த்து தேவனை முக்கியப்படுத்தி ஈடுபடும் பொதுச் செயல். ஆன்மீக வளர்ச்சியையும் தேவ நம்பிக்கையும் ஆழப்படுத்திக் கொள்ள உபவாச ஜெபம் உதவி செய்கிறது.