அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25-26

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25-26 TAERV

நள்ளிரவில் பவுலும், சீலாவும் பிரார்த்தனை செய்துகொண்டும் தேவனை நோக்கி துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டுமிருந்தனர். மற்ற சிறைக் கைதிகள் அவர்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. சிறையின் அஸ்திபாரத்தை அசைக்கும்படியாக அது பலமாக இருந்தது. பின் சிறைச் சாலையின் கதவுகள் எல்லாம் திறந்தன. எல்லா கைதிகளும் அவர்களது விலங்குகளிலிருந்து விடுபட்டனர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25-26

பாரத்திலிருந்து விடுதலை அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25-26 பரிசுத்த பைபிள்

பாரத்திலிருந்து விடுதலை

4 நாட்கள்

" எபிரெயர் 12:1 -..., மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." லூக்கா 21:34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். இவ்வசனங்களிலிருந்து,'பாரம்' நம் கிறிஸ்துவ ஓட்டத்தை தடுக்கக் கூடியது என்று விளங்குகிறது. தீமையும் கொடுமையும் நிறைந்த இவ்உலகத்தில் 'பாரம் என்கிற சுமை' நம்மை தாக்குகையில் விடுதலையின் வாழ்க்கை வாழ வேதாகமத்திலிருந்து சில வழிகள்.