சங்கீதம் 58
58
சங்கீதம் 58
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.
1ஆளுநர்களே, உண்மையிலேயே நீங்கள் நீதியைத்தான் பேசுகிறீர்களோ?
மனிதர் மத்தியில் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறீர்களோ?
2இல்லை, நீங்கள் உங்கள் இருதயத்தில் அநீதியையே திட்டமிடுகிறீர்கள்;
உங்கள் கைகள் பூமியின்மேல் வன்முறையைப் பரப்புகிறது.
3கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்;
அவர்கள் கர்ப்பத்திலிருந்தே பொய்களைப் பேசுகிறார்கள்.
4அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது;
அவர்கள் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு நாகம்போல இருக்கிறார்கள்.
5இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும்
அவனுடைய இசைக்குக் கவனம் செலுத்தாது.
6இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்;
யெகோவாவே, அந்த சிங்கங்களின் கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிப்போடும்.
7ஓடிப்போகும் தண்ணீரைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்;
அவர்கள் தங்கள் வில்லை இழுக்கும்போது, அவர்களுடைய அம்புகள் முறிந்து போகட்டும்.
8நகரும்போதே கரைந்து போகும் நத்தையைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்;
ஒரு பெண்ணின் வயிற்றில் சிதைந்த கருவைப்போல,
சூரியனை அவர்கள் பார்க்காமல் போகட்டும்.
9முட்செடிகள் எரிந்து பானை அதின் சூட்டை உணருவதற்கு முன்பதாகவே,
பச்சையானதையும் எரிந்துபோனதையும் சுழற்காற்று வாரியதைப்போல
கொடியவர்களை வாரிக்கொள்ளும்.
10அவர்கள் பழிவாங்கப்படும்போது நீதிமான்கள் மகிழ்வார்கள்;
கொடியவர்களின் உயிர் நீதிமான்களின் பாதபடியில் இருக்கும்.
11அப்பொழுது மனிதர்,
“நிச்சயமாகவே நீதிமான்களுக்கு வெற்றி உண்டென்றும்
பூமியை நியாயந்தீர்க்கும் இறைவன் உண்டு” என்றும் சொல்வார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங்கீதம் 58: TCV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.